(நா.தனுஜா)
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவிற்கு வாழ்த்துத் தெரிவித்திருக்கும் சீன ஜனாதிபதி சி ஜின்பிங், இருநாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர அரசியல் புரிந்துணர்வை மேலும் விரிவுபடுத்தி, இராஜதந்திர ரீதியான ஒத்துழைப்பில் புதிய அத்தியாயமொன்றை உருவாக்க விரும்புவதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.
இலங்கையின் ஏழாவது நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியாகப் பதவியேற்றுக் கொண்டுள்ள கோத்தாபய ராஜபக்ஷவிற்கு சீன ஜனாதிபதி சி ஜின்பிங் கடிதமொன்றின் மூலம் வாழ்த்துத் தெரிவித்திருக்கிறார்.
அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
சீனா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கு இடையில் பேணப்பட்டு வந்த பாரம்பரிய நட்புறவானது, தற்போதைய பூகோள மாற்றங்களின் மத்தியில் மேலும் தெளிவானதாகவும், முக்கித்துவமுடையதாகவும் மாறியிருக்கின்றது. இருநாடுகளுக்கும் இடையிலான நட்புறவு மற்றும் ஒத்துழைப்பு என்பவற்றுக்கு உங்களால் வழங்கப்படும் தொடர்ச்சியான ஆதரவையும், பங்களிப்பையும் பெரிதும் வரவேற்கின்றேன்.
உங்களுடைய செயல்கள் வெற்றி பெறவேண்டும் என்றும், உடல் ஆரோக்கியத்திற்காகவும் பிரார்த்திக்கின்றேன். இலங்கை மக்கள் அனைவரும் சுபீட்சத்தையும், மகிழ்ச்சியையும் அனுபவிக்க வேண்டும். சீன - இலங்கை நட்புறவு மேலும் நீண்ட காலத்திற்குத் தொடரவேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM