வாக்களிக்க செல்லக் கூடாது தமிழர்கள் மீது அச்சுறுத்தல்: காலி - நாகொடையில் சம்பவம்

Published By: J.G.Stephan

16 Nov, 2019 | 07:54 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

 காலி - நாகொட பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட உடுகம - காபில் தோட்ட தமிழர்கள் வாக்களிக்கச் செல்லக் கூடாது என  அச்சுறுத்தப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

நாகொட பிரதேச சபை ஸ்ரீலங்கா பொது ஜன பெரமுன உறுப்பினர் ஒருவர் இவ்வாறு குறித்த தமிழ் மக்களை அச்சுறுத்தியுள்ளதாக பாராளுமன்றஉறுப்பினர் பந்துலால் பண்டாரகொட நாகொட பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றினையும் பதிவு செய்துள்ளார்.

 'உங்கள் நல்லது கெட்டது என அனைத்துக்கும்  வருபவன் நானே,  நீங்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கியிருக்க வேண்டும்' என  குறித்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பிரதேச சபை உறுப்பினர் அச்சுறுத்தியதாக பொலிஸ் முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 இந் நிலையில் இந்த சம்பவம் தொடர்பில் 1981 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க ஜனாதிபதி ஒருவரை தேர்ந்தெடுப்பது குறித்தான  சட்டத்தின் கீழ் நாகொட பொலிஸார் விஷேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இது தொடர்பில் தற்போது வரை எவரும் குறித்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எமது மீனவர்களை பயன்படுத்தி இந்தியாவை சீனா...

2025-02-18 17:26:51
news-image

முகத்துவாரத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் கைது

2025-02-18 18:33:18
news-image

மனைவியை தாக்கிய மருமகன்; தடுத்த மாமனாரை...

2025-02-18 18:34:47
news-image

கார் - மோட்டார் சைக்கிள் மோதி...

2025-02-18 18:14:41
news-image

மார்ச் 31 இன் பின் தேர்தலை...

2025-02-18 17:29:33
news-image

தாயுடன் உறங்கிக்கொண்டிருந்த ஒன்றரை மாதக் குழந்தை...

2025-02-18 18:37:48
news-image

தானம் செய்யும் பரோபகார சிந்தனை நாட்டின்...

2025-02-18 17:58:45
news-image

கொத்து, பிரைட் ரைஸ் உள்ளிட்ட உணவுப்...

2025-02-18 17:32:53
news-image

மது போதையில் அரச பாடசாலைக்குள் சென்ற...

2025-02-18 17:34:06
news-image

மின்சார சபையால் திடீர் மின்தடையை தடுப்பதற்கான...

2025-02-18 17:21:24
news-image

யாழில் டிப்பர் மோதி ஆணொருவர் பலி!

2025-02-18 17:19:54
news-image

காலச் சூழலுக்கேற்ப அரசியல் களம் மாறவேண்டியது...

2025-02-18 16:57:24