வாக்காளர்களுக்கு இலஞ்சம்! : உன்னிப்பாக அவதானிக்கின்றது கஃபே அமைப்பு

Published By: J.G.Stephan

14 Nov, 2019 | 05:00 PM
image

தேர்தல் பிரசார நடவடிக்கைகள் நிறைவுபெற்றவுடன் ஆரம்பிக்கின்ற 'மௌன காலப்பகுதி' இம்முறை மிகவும் அமைதியான முறையில் காணப்படுகின்றது. 

இந்த மௌன காலப்பகுதியிலும் தேர்தல் தினத்திலும் வாக்காளர்களுக்கு இலஞ்சம் வழங்கப்படுகின்றதா என்பதை அவதானிக்க, இம்முறை கஃபே அமைப்பு தமது நடவடிக்கையை விஸ்தரித்துள்ளது. 

இரத்தினபுரியில் இன்று (14.11.2019) நடைபெற்ற கஃபே அமைப்பின் செயலமர்வில், அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் அஹமட் மனாஸ் மக்கீன் இதனைத் தெரிவித்தார். இச்செயலமர்வில் அவர் மேலும் தெரிவித்ததாவது

''தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதல் இன்றுவரை கஃபே அமைப்பிற்கு 735 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இதற்கு முன்னர் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலுடன் ஒப்பிடுகையில் மௌன காலப்பதியானது மிகவும் அமைதியான முறையில் காணப்படுவதை அவதானிக்கக்கூடியவாறு உள்ளது. மௌன காலப்பகுதியில் எட்டு முறைப்பாடுகள் மாத்திரமே கிடைக்கப்பெற்றுள்ளன. தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்ட பதாதைகள், சுவரொட்டிகள் போன்றவை இதுவரை அகற்றப்படாமல் இருப்பது தொடர்பாகவே குறித்த எட்டு முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றன.

தேர்தல் அண்மிக்கின்ற இந்த மௌன காலப்பகுதியிலும் தேர்தல் தினத்திலுமே வாக்காளர்களுக்கு இலஞ்சம் வழங்கும் செயற்பாடுகள் கடந்த காலங்களில் இடம்பெற்றன. இதற்கு முன்னரான தேர்தல்களில், இக்காலப்பகுதியிலேயே இலஞ்சம் தொடர்பான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றன. அவற்றைக் கருத்திற்கொண்டு இம்முறை கஃபே அமைப்பானது, நீண்டகால மற்றும் குறுங்கால கண்காணிப்பாளர்கள் மூலம் கண்காணிப்பு நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது.

இந்த காலப்பகுதியில் மொத்தமாக 2200 நடமாடும் கண்காணிப்பாளர்களை கஃபே அமைப்பானது நாடு முழுவதும் நியமித்துள்ளது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நியூசிலாந்தின் வெலிங்டனில் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தை நிறுவ...

2024-04-20 10:36:43
news-image

இராணுவ வீரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு !

2024-04-20 10:31:22
news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமையின் அயற்கிராமங்கள்...

2024-04-20 10:26:06
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள்...

2024-04-20 10:34:03
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12