(செ.தேன்மொழி)
ஹொரணை பகுதியில் சட்டவிரோதமாக புதையல் அகழ்வில் ஈடுப்பட்ட சந்தேக நபர்கள் மூவர் வெடிபொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஹொரணை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கந்தானை பகுதியில் நேற்று புதன்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.
தொடங்கொட , அங்குருவாதொட்ட மற்றும் ஹொரணை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 36 - 48 வயதுக்கு இடைப்பட்ட மூன்று பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களிடமிருந்து துளையிடும் இயந்திரம், 3 டெட்டனேட்டர்கள், 2 ஜெலட்னைட்கள் , 30 கிராம் வெடி மருந்து , 300 கிராம் அமோனியா வகை வெடிமருந்து ,அகழ்வுக்காக பயன்படுத்தும் உபகரணங்கள் மற்றும் பூஜை பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.
சந்தேக நபர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM