புதையல் அகழ்வில் ஈடுப்பட்ட மூவர் வெடிபொருட்களுடன் கைது

14 Nov, 2019 | 03:36 PM
image

(செ.தேன்மொழி)

ஹொரணை பகுதியில் சட்டவிரோதமாக புதையல் அகழ்வில் ஈடுப்பட்ட சந்தேக நபர்கள் மூவர் வெடிபொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹொரணை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கந்தானை பகுதியில் நேற்று புதன்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.

தொடங்கொட , அங்குருவாதொட்ட மற்றும் ஹொரணை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 36 - 48 வயதுக்கு இடைப்பட்ட மூன்று பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடமிருந்து துளையிடும் இயந்திரம், 3 டெட்டனேட்டர்கள், 2 ஜெலட்னைட்கள் , 30 கிராம் வெடி மருந்து , 300 கிராம் அமோனியா வகை வெடிமருந்து ,அகழ்வுக்காக பயன்படுத்தும் உபகரணங்கள் மற்றும் பூஜை பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.

சந்தேக நபர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2025-02-14 06:08:27
news-image

ஐ.தே.க.வுடனான பேச்சுவார்த்தை தொடர்பில் சஜித் நேர்மறையான...

2025-02-14 01:57:12
news-image

உள்ளுராட்சிமன்றத் தேர்தல் தொடர்பில் ஐக்கிய மக்கள்...

2025-02-14 01:53:03
news-image

இலங்கையின் உள்ளக விவகாரங்களில் தலையிடும் ஜூலி...

2025-02-14 01:48:10
news-image

மஹிந்தவின் உத்தியோகபூர்வ இல்லத்தின் பாதுகாப்பு உத்தியோகஸ்த்தர்கள்...

2025-02-14 01:40:11
news-image

வெளிப்படைத்தன்மையுடன் அனைவருக்கும் சமமான வரி கொள்கை...

2025-02-14 01:26:50
news-image

எல்ல மலைத்தொடரில் ஏற்பட்ட தீ; மலைத்தொடர்...

2025-02-14 00:34:25
news-image

யு.எஸ்.எய்ட் நிறுவனத்தில் நிதி பெற்றதாக குற்றச்சாட்டு...

2025-02-13 17:39:13
news-image

சட்ட மா அதிபரை பதவி நீக்குவதற்கான...

2025-02-13 14:05:04
news-image

காலி முகத்திடல் ஆர்ப்பாட்டத்தின் பின்னணியில் யார்?...

2025-02-13 15:25:56
news-image

இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா,...

2025-02-13 21:48:10
news-image

வட மாகாண ஆளுநருக்கும் இலங்கை ஆசிரியர்...

2025-02-13 21:37:21