தற்போதைய ஜனாதிபதி நாட்டின் முன்மாதிரிமிக்க அரசியல் தலைவர் - மகாசங்கத்தினர் 

Published By: Digital Desk 4

14 Nov, 2019 | 11:10 AM
image

தூர நோக்குடன் செயற்படும் தற்போதைய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நாட்டின் முன்மாதிரிமிக்க அரச தலைவராவார் என்று மகாசங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

திரிபீடகத்தை உலக நினைவுப் பதிவேட்டில் உள்ளடக்குவதற்கான விண்ணப்பத்தை தயாரிக்கும்

நிபுணர் குழு, திரிபீடகத்தை பேணிப் பாதுகாக்கும் சபை, பௌத்த ஆலோசனை சபை, பௌத்த புலமைத்துவ சபை, அகில இலங்கை சாசன பாதுகாப்புச் சபை ஆகியவற்றை பிரதிநிதித்துவப்படுத்தும் மகாசங்கத்தினருக்கும் ஜனாதிபதிக்குமிடையிலான சந்திப்பொன்று நேற்று (13) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

இச்சந்திப்பின்போதே மகாசங்கத்தினர் இதனை தெரிவித்தனர்.

திரிபீடகத்தை தேசிய மரபுரிமையாக பிரகடனப்படுத்தி அதனை பாதுகாப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை நாட்டின் பௌத்த சாசனத்திற்காக ஜனாதிபதி மேற்கொண்ட ஒரு முக்கியமான பணி எனத் தெரிவித்த மகாசங்கத்தினர், 

நாட்டின் பிரிவெனா கல்வியை மேம்படுத்துவதற்கும் ஜனாதிபதி முன்னெப்போதும் இல்லாத வகையில் பல பணிகளை மேற்கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

மேலும் வடக்கு, கிழக்கு உள்ளிட்ட நாடளாவிய ரீதியில் உள்ள குறைந்த வசதிகளையுடைய விகாரைகளை அபிவிருத்தி செய்வதற்கும், அவற்றில் உள்ள பிக்குமார்களின் நலன்பேணலுக்காகவும் ஜனாதிபதி கடந்த ஐந்து வருட காலப்பகுதியில் விரிவான பல நிகழ்ச்சித்திட்டங்களை முன்னெடுத்ததாகவும் தேரர்கள் குறிப்பிட்டனர்.

திரிபீடகத்தை உலக நினைவுப் பதிவேட்டில் உள்ளடக்குவதற்காக அடுத்த கட்ட செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காகவும் பௌத்த சாசனத்தின் பாதுகாப்பிற்காகவும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிகழ்ச்சித்திட்டங்களின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

அகில இலங்கை சாசன பாதுகாப்பு சபைக்கு ஜனாதிபதியினால் 100 இலட்ச ரூபா நிதியுதவி வழங்கப்பட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02