கோத்­தாவின் குடி­யு­ரிமை குறித்து, அமெ­ரிக்க இரா­ஜாங்க திணைக்­களம் உண்மை நிலை­வ­ரத்தை வெளி­யிட வேண்டும்: மனோ

Published By: J.G.Stephan

13 Nov, 2019 | 03:52 PM
image

அமெ­ரிக்கா இலங்­கையின் நட்பு நாடு. இன்­றைய சூழலில் கோத்­த­பாய ராஜ­ப­க் ஷவின் குடி­யு­ரிமை தொடர்பில் அமெ­ரிக்கா தமக்கு ஒன்றும் தெரி­யாது என்று நடிப்­பதை  நிறுத்தி விட்டு, அந்­நாட்டு இரா­ஜாங்கத் திணைக்­களம், இது தொடர்பில் உண்மை நிலைவ­ரத்தை விளக்கி அறிக்கை வெளி­யிட வேண்டும். இலங்கை அரசு, எதிர்க்­கட்சி என்ற விட­யங்­களைத் தாண்டி இலங்கை மக்­க­ளுக்கு அமெ­ரிக்க அரசு செய்ய வேண்­டிய பெரும் கட­மை­ இதுவாகும் என்று அமைச்சர் மனோ கணேசன் கேச­ரிக்கு வழங்­கிய செவ்­வியில் தெரி­வித்­துள்ளார்.

அவ­ரது செவ்­வியின் விபரம் வரு­மாறு,

கோத்­த­பாய ராஜ­பக்­ ஷவின் குடி­யு­ரிமைப் பிரச்­சினை இப்­போது சூடு பிடித்­துள்­ளதே. இது ­பற்றி என்ன கூற விரும்­பு­கி­றீர்கள்?

கோத்­த­பா­யவின் குடி­யு­ரிமைப் பிரச்­சி­னையின் சட்­ட­வலு பற்றி நீதி­மன்­றமும், தேர்தல் ஆணை­யமும் தீர்­மா­னிக்­கட்டும். இதுபற்றி நான் பேச விரும்­ப­வில்லை. இதன் அர­சியல் வலுபற்றி ஒன்று சொல்­லலாம். தொட்­ட­தற்கு எல்லாம் அமெ­ரிக்க சதி, அமெ­ரிக்க கைப்­பாவை, அமெ­ரிக்க சி.ஐ.ஏ. என்­றெல்லாம் எங்­களைப் பார்த்து கூக்­குரல் இடும் மஹிந்­த­வா­திகள், குறிப்­பாக விமல் வீர­வன்ச, உதய கம்­மன்­பில, வாசு­தேவ போன்ற அர­சியல் அல்­லக்­கைகள் இன்று கோத்­த­பா­ய­வுடன் இருக்­கி­றார்கள்.

கோத்­த­பாய ஓர் அமெ­ரிக்கர் என்று சொல்­லப்­படும் அள­வுக்கும் கோத்­த­பா­யவின் மனைவி, பிள்­ளைகள் அடங்­க­லான குடும்பம், இன்­ற­ளவும் அமெ­ரிக்­காவில் வாழும் அமெ­ரிக்கப் பிர­ஜைகள். இவர்­க­ளுக்கு இலங்­கையில் குடி­யு­ரிமை, வாக்­கு­ரிமை இல்லை என்ற உண்­மைகள் வெளிப்­படும் அள­வுக்கும், கோத்­த­பாய ஓர் இர­க­சிய அமெ­ரிக்க முகவர், கைப்­பாவை என்று குற்றம் சாட்­டப்­படும் அள­வுக்கும் நிலைமை முற்றி விட்­டதைப் பார்த்து இந்த அல்­லக்­கைகள் இன்று அர­சியல் தற்­கொலை செய்து கொள்ள வேண்டும்.

நான் விதியை  நம்­பு­வது இல்லை. மஹிந்­ததான் அடித்து பிடித்துக் கொண்டு விதியை, சடங்­கு­களை, சாஸ்­தி­ரத்தை நம்­பு­பவர். அப்­ப­டி­யானால் இதுதான் விதியின் கோர விளை­யாட்டோ? விதி வலி­யது என்று காட்டி விட்­டதோ?

இன்­னொன்­றையும் இங்கே சொல்ல வேண்டும். உண்­மையில் அமெ­ரிக்கா இலங்­கையின் ஒரு நட்பு நாடு. ஆகவே இன்­றைய சூழலில் தமக்கு இதுபற்றி ஒன்­றுமே தெரி­யாது என்­பது போல் நடிப்­பதை  நிறுத்தி விட்டு, அமெ­ரிக்க அரசின் இரா­ஜாங்கத் திணைக்­களம், இது தொடர்பில் உண்மை நில­வ­ரத்தை விளக்கி அறிக்கை வெளி­யிட வேண்டும். இது இலங்­கையின் அரசு, எதிர்க்­கட்சி என்ற விட­யங்­களைத் தாண்டி இலங்கை மக்­க­ளுக்கு அமெ­ரிக்க அரசு செய்ய வேண்­டிய பெரும் கடமை என நான் நினைக்­கிறேன்.  

சஜித் பிரே­ம­தா­ச­வுக்­காக உங்கள் கூட்­டணி நடத்­திய பிர­சாரக் கூட்­டங்கள் பற்றிக் கூறுங்கள்?

புதிய ஜன­நா­யக முன்­னணி என்ற பெயரில் எங்கள் ஜன­நா­யக தேசிய முன்­னணி நடத்­திய முதல் பிர­சாரக் கூட்டம் கொழும்பு காலி­முகத் திடலில் நடை­பெற்­றது. அதற்குக் கூடிய கூட்­டமே இலங்கை வர­லாற்றில் கூடிய அதி­கூ­டிய அர­சியல் கூட்­ட­மாகும். அதை­ய­டுத்து சஜித் பிரே­ம­தா­சவின் பிர­சாரக் கூட்ட வரி­சையில் கூடிய அதி­கூ­டிய கூட்டம், எங்கள் தமிழ் முற்­போக்குக் கூட்­டணி, பத்தாம் திகதி தல­வாக்­க­லையில் நடத்­திய கூட்­ட­மாகும். இதை திகா தலை­மையில் எங்கள் தமிழ் முற்­போக்கு  கூட்­டணிக் கட்­சி­யான தொழி­லா ளர் தேசிய முன்­னணி பிர­மாண்­ட­மாக ஏற்­பாடு செய்­தி­ருந்­தது. மலை­யக மக்கள் முன்­ன­ணியும் ஒத்­து­ழைப்பு வழங்கியிருந்­தது.  

இது தானாகக் கூடிய கூட்­டமா அல்­லது கூட்­டிய கூட்­டமா?

இது சினிமா வசனம். நல்­லது. தோட்டத் தொழி­லா­ளர்­களை தோட்­டங்­களில் இருந்து போக்­கு­வ­ரத்து வசதி வழங்கி அழைத்து வர வேண்­டு­மல்­லவா? இல்­லா­விட்டால் எப்­படி நேரத்­துக்கு அவர்கள் வரு­வார்கள்? ஆனால், அங்கே வந்­த­வர்கள் நுவ­ரெ­லியா மாவட்­டத்தைச் சேர்ந்­த­வர்­கள்தான். எவரும் வெளியிலிருந்து அழைத்து வரப்­ப­ட­வில்லை. அங்கே வந்து எவரும், சஜித் ­திடம் 'கடலில் மீன்­பி­டிக்கப் படகு' கேட்­க­வில்லை. அதா­வது கூட்டம் காட்ட வேண்டும் என்­ப­தற்­காக எவரும் வெளியில் இருந்து அழைத்து வரப்­ப­ட­வில்லை.

கொழும்பு கொலொன்­னாவைத் தொகு­தியில் நடை­பெற்ற மஹிந்த அணி கூட்­டத்தில் கலந்­து­கொண்ட ஒரு பெண், தனக்கு, தமது ஊருக்குள் காட்டு யானை வரு­வதைத் தடுக்கும் 'யானை வேலி' வேண்டும் என சத்­த­மாக கேட்­டதைப் பார்த்து நாடு சிரித்­தது. கொழும்பு கொலொன்­னா­வையில் எங்கே காட்டு யானை? ஆகவே அந்தக் கூட்டம் வெளியில் இருந்து அழைத்து வரப்­பட்ட கூட்டம். இப்­ப­டியே வடக்கு, கிழக்கில் நடை­பெற்ற மஹிந்த அணி கூட்­டங்கள் உட்­பட அவர்­க­ளது பல கூட்­டங்­க­ளுக்கு, கூட்டம் பேரூந்­து­களில் வெளியிலிருந்து அழைத்துச் செல்­லப்­பட்­டது என்­பதை புலா­னாய்வு அறிக்­கைகள் மூலம் அறிந்து நாம் சிரித்தோம்.  

நுவரெ­லியா மாவட்­டத்­துக்கு வெளி­யேயும் இம்­முறை தமிழ் முற்­போக்குக் கூட்­டணி பல கூட்­டங்­களை நடத்­தி­யது அல்­லவா?

ஆம். இங்கே ஒரு புதிய மாற்­றத்தை நாம் கொண்டு வந்தோம். வழ­மை­யாக நுவ­ரெ­ லி­யாவில் மாத்­தி­ரமே எமது பிர­தான கூட்டம் நடை­பெறும். வேட்­பா­ளரும் வந்து நமது மக்­களைப் பற்றி அங்கே பேசி­விட்டுப் போய் விடுவார். ஏனைய மாவட்­டங்­களில் ஐ.தே.க.வின் அமைப்­பா­ளர்கள் நமது மக்­களை கூட்­டங்­க­ளுக்கு அழைத்து வந்து கூட்­டத்தை வேட்­பா­ள­ருக்கு காட்­டு­வார்கள். வேட்­பா­ள­ருக்கு கூட்­டத்­துக்கு வந்­த­வர்கள் யார் என்று தெரி­யாது. அவர் வந்து பொது­வாகப் பேசி விட்டு போய் விடுவார். இந்த முறை இந்த நடை­முறை மாற வேண்­டு­மென நாம் தீர்­மா­னித்தோம்.

ஆகவே இந்த முறை கண்­டி-­,மாத்­தளை பெருந்­தோட்ட மக்­க­ளுக்­காக கண்­டியில், களுத்­து­றை-­, கொ­ழும்பின் அவி­சா­வளை பெருந்­தோட்ட மக்­க­ளுக்­காக அவி­சா­வ­ளையில், இரத்­தி­ன­பு­ரியில், கேகா­லையில் மற்றும் கொழும்­பு-­, வத்­த­ளை, -­நீர்­கொ­ழும்பு நக­ரவாழ் மக்­க­ளுக்­காக கொழும்பில் என இன்­னமும் ஐந்து மேல­திக பெருங்­கூட்­டங்­களை நாம் நடத்­தினோம். இந்த ஐந்­திலும் எமது வேட்­பாளர் சஜித் வந்து கலந்­து­கொண்டு எமது மக்­களைப் பற்றி மட்டும் பேசினார்.

இதன்­மூலம் நாளைய தனது வெற்­றியில் நுவ­ரெ­லியா, பதுளை, இரத்­தின­புரி, கேகாலை, கண்டி, மாத்­தளை, களுத்­து­றை-­, கொ­ழும்பின் அவி­சா­வளை மற்றும் கொழும்­பு-­,வத்­த­ளை,-­நீர்­கொ­ழும்பு நக­ரவாழ் நமது மக்­களும் பங்­கா­ளிகள் என்­பதை சஜித் இப்­போது மிகத்­தெ­ளி­வாக உணர்ந்­துள்ளார். இந்தக் கூட்­டங்­களை தமிழ் முற்­போக்குக்  கூட்­ட­ணியின் சார்­பாக  ஜன­நா­யக மக்கள் முன்­னணி பிர­மாண்­ட­மாக ஏற்­பாடு செய்­தி­ருந்­தது.

உண்­மையில் நுவ­ரெ­லியா, பதுளை ஆகிய மாவட்­டங்­களில் நமது மக்­களின் வாக்குத் தொகை சுமார் 350,000.  ஏனைய மாவட்­டங்­களில் சுமார் 450,000. மொத்தம் சுமார் எட்டு இலட்சம் ஆகும். இந்தக் கூட்­டங்­களை அடுத்து நமது கட்­சி­யா­ளர்கள், ஒவ்­வொரு மாவட்­டத்­திலும் வீடு வீடாகச் சென்று பேசி, எமது மக்­களின் இந்த வாக்­குகள் எமது வேட்­பா­ள­ருக்கு விழு­வதை உறுதி செய்து வரு­கி­றார்கள். உண்­மையில் பதுளை, புத்­தளம் ஆகிய மாவட்­டங்­களில் இப்­படி வேட்­பா­ளரை அழைத்து தனித்­துவ கூட்­டங்­களை ஏற்­பாடு செய்ய முடி­யாமை குறித்து நான் வருந்­து­கிறேன். எதிர்­கா­லத்தில் இது நிவர்த்தி செய்­யப்­படும்.

எனது வழி­காட்­டலில் தம்பி வேலுகுமார் கட்சி மாவட்ட அமைப்­பா­ளர்­க­ளுடன் இணைந்து பெருந்­தோட்டப் பிர­சா­ரத்­துக்­காகப் பணி­யாற்­று­கிறார்.  கொழும்­பு-­,கம்­ப­ஹாவில் எனது வழி­காட்­டலில் குரு­சாமி, பிரகாஷ் கணேசன், சஷி­குமார் ஆகியோர் பணி­களை ஆற்­று­கின்­றனர்.  அதேபோல் வடக்கு, கிழக்கில் மன்னார், வவு­னியா, மட்­டக்­க­ளப்பு ஆகிய மாவட்ட சஜித் பிரே­ம­தாச கூட்­டங்­க­ளுக்கும் நமது கட்சி பங்­க­ளிப்பை வழங்கி இருந்­தது. இவற்றை ஜனகன், கோபி, விமல், தீபன், சீலன் ஆகிய அமைப்­பா­ளர்கள் செய்­தி­ருந்­தனர்.  

மலை­யக மக்கள் தொடர்பில் சஜித்­துடன் உடன்­பாடு உண்டா?

த.மு.கூ. சஜித்­துடன் சமூக உண்­ட­பாடுதான் இருக்­கி­றது. இது கட்­சி­க­ளுக்கு இடையில் இர­க­சிய பேச்­சு­க­ளுக்குப் பின்னர் நடை­பெறும் ஒப்­பந்தம் இல்லை. இதில் பிர­யோ­ஜனம் இல்லை என்­பதை கடந்த அனு­ப­வங்கள் எமக்கு உணர்த்­தி­யுள்­ளன. தமிழ் முற்­போக்குக் கூட்­ட­ணி­யான எமக்கு இர­க­சியத் தேவைகள் இல்லை. ஆகவே சஜித்தை அழைத்து வந்து எம் மக்கள் மத்­தியில் நேர­டி­யாக கலந்­து­ரை­யாடச் செய்து, நமது பிரச்­சி­னை­க­ளுக்­கான தீர்­வு­களை அவ­ரது தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் இடம்­பெறச் செய்து விட்டோம்.

முதலில் ஒன்று, ஒரு சமூகம் என்ற அடிப்­ப­டையில், தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் மலை­யக மக்­க­ளுக்கு மட்­டுமே விசேட ஓர் அத்­தி­யாயம் இடம்­பெற்­றுள்­ளது. இது எங்கள் கூட்­ட­ணியின் சாணக்­கிய வெற்றி ஆகும். கூட்­டணித் தலை­வ­ராக இதனுள் மிகவும் பிர­தா­ன­மாக நான் கரு­து­வது, மலை­நாட்டில் பாடு­படும் நாற்­கூலி தோட்டத் தொழி­லா­ளர்கள், இனி எதிர்­கா­லத்தில் சொந்த குத்­தகை பயிர்­நிலக் காணியும், வீடு கட்டி வாழ சொந்த வாழ்­விடக் காணியும், பெற்று மலை­ய­கத்தில் 'தமிழ் விவ­சாயி'களாக, கிரா­ம­வா­சி­க­ளாக மாற்­றப்­ப­டுவர் என்ற கொள்கை புரிந்­து­ணர்­வுதான். 'மலை­ய­கத்தில் தமிழ் விவ­சாயி' என்ற சொற்­றொடர் தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் இடம்பெறு­கி­றது. இந்த வெற்­றியை ஒரு நாள் வர­லாறு பதிவு செய்யும்.

இது­வ­ரை­யி­லான உங்கள் ஆட்­சியும் உங்கள் ஆட்­சி­தானே... என்ன செய்­தீர்கள்?

இப்­பவும் ஒரு­ சிலர் கடந்த நான்கு வரு­டங்­க­ளாக நீங்கள் என்ன செய்­தீர்கள் என்று சிறு­பிள்­ளைத்­த­ன­மாக எம்மைக் கேட்­கி­றார்கள். நாம் நிறையச் செய்து அவற்றின் அடுத்த கட்ட நட­வ­டிக்­கை­யா­கத்தான், சஜித்­ததை வெற்றி  பெற வைக்கப் பாடு­ப­டு­கிறோம். நாம் செய்­த­வற்றையும், அடுத்த கட்ட உடன்­பா­டு­க­ளையும் இதோ கேளுங்கள்.          

தோட்­டங்­களில் ஏழு பேர்ச் காணி வழங் கல், அமைச்­ச­ரவைப் பத்­திரம் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்டு பணிகள் நடை­பெ­று­கின்­றன. அடுத்த கட்ட நட­வ­டிக்­கை­யாக, தற்­போ­தைய நிலையிலிருந்து முன்­சென்று, காணி வழங்­கலில் உள்ள நிர்­வாகத் தடை­களை நீக்கி, வீடுகள் கட்­டப்­ப­டு­வ­தற்கு முன்­னரே, மலை­ய­க­மெங்கும் காணியை முதலில் பிரித்து சொந்த உறுதிப் பத்­தி­ரத்­துடன் வழங்கும் கொள்­கையை இந்தத் தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் கொண்டு வந்­துள்ளோம்.வழங்­கப்­பட்ட காணி­களில் தனி வீடுகள் மலை­நாட்டில் கட்­டப்­ப­டு­கின்­றன. கட்­டப்­படும் குடி­யி­ருப்­புகள் மலை­ய­கத்தில் இப்­போது தமிழ்க் கிரா­மங்­க­ளாக மாறி வரு­கின்­றன. மலை­யக அபி­வி­ருத்­திக்­கான தனி­யான அதி­கார சபை அமைக்­கப்­படும். அமைச்­ச­ரவைப் பத்­திரம் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்டு, அதி­கா­ர ­சபை இயங்­கு­கி­றது.

நுவ­ரெ­லியா மாவட்­டத்தில் மேல­திக புதிய ஆறு பிர­தேச சபைகள் மூல­மான அர­சியல் அதி­காரப் பகிர்வு ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளது. அடுத்த கட்ட நட­வ­டிக்­கை­யாக, இந்­ந­டை­மு­றையை ஏனைய மலை­யக மாவட்­டங்­க­ளுக்கும் கொண்டு செல்வோம்.

புதிய ஆறு பிர­தேச சபை­க­ளுக்குள், புதிய பிர­தேச செய­ல­கங்­களும், கிராம சேவை­யாளர் பிரி­வு­களும் அமைக்கும் எல்லை நிர்­ணயப் பணி இப்­போது நடை­பெ­று­கி­றது. அடுத்த கட்ட நட­வ­டிக்­கை­யாக, இந்­ந­டை­மு­றையை ஏனைய மலை­யக மாவட்­டங்­க­ளுக்கும் கொண்டு செல்வோம்.

“கடந்த காலத்தில் மலை­யக மக்­கள் வாக்­க­ளித்து பிர­தேச சபை­களைத் தெரிவு செய்ய முடியும். ஆனால் தோட்டப் புறங்­க­ளுக்கு, அந்தப் பிர­தேச சபை­களால் நிதி ஒதுக்­கீடு, அபி­வி­ருத்தி செய்ய முடி­யாது” என்று இருந்த மலை­யக பிர­தேச சபை அதி­கார எல்லை சட்டம், எமது அமைச்­ச­ரவை, பாரா­ளு­மன்ற நட­வ­டிக்­கைகள் கார­ண­மாக இன்று திருத்­தப்­பட்­டுள்­ளது.

சுமார் 300 தோட்­டப்­புற பாட­சா­லை­க­ளுக்கு அவ்வவ் தோட்­டங்­களில் மேல­திக காணிகள் வழங்­குதல் தொடர்பில் அமைச்­ச­ரவைப் பத்­திரம் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்டு காணி வழங்கல் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளது.மலை­யக மக்­க­ளுக்கு, தேசிய அர­சி­ய­ல­மைப்பு பணியில் காத்­தி­ர­மான சம பங்கும், அந்­தஸ்தும் வழங்­கப்­பட்­டுள்­ளது. அடுத்த கட்ட நட­வ­டிக்­கை­யாக, புதிய அர­சி­ய­ல­மைப்பு பணி தொடரும் என்­பதை இந்தத் தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் கொண்டு வந்­துள்ளோம்.

தோட்டத் தொழி­லா­ளர்­களின் வரு­மா­னத்தை அதி­க­ரித்து, அவர்­களை "மலை­யக தமிழ் விவ­சாயி" களாக மாற்றி, தோட்ட நிறு­வ­னங்­களும், இந்த மலை­யக விவ­சா­யி­களும் பங்­கா­ளர்­க­ளாகும் வெளிப்­ப­யிர்ச்­செய்கை வரு­மானத் திட்டம் தயார் செய்­யப்­ப­டு­கி­றது. அடுத்த கட்ட நட­வ­டிக்­கை­யாக இதை இந்த தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் கொண்டு வந்­துள்ளோம்.

 உயர்­கல்வித் துறையில், மலை­யக பல்­க­லைக்­க­ழகம் பற்­றிய சாத்­தி­யப்­பாடு அறிக்கை தயார் செய்­யப்­பட்­டுள்­ளது. பாட­சாலை கல்வித் துறையில், மேலும் பத்து கணித, விஞ்­ஞான தேசிய பாட­சா­லை­களை மலை­யக மாவட்­டங்­களில் அமைக்­கவும் போகிறோம். அடுத்த கட்ட நட­வ­டிக்­கை­யாக இவற்றை இந்தத் தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் கொண்டு வந்­துள்ளோம்.

பிர­தான எதிர்க்­கட்­சியின் நான்கு முனை தந்­திர திட்டம் என்று கூறு­கி­றீர்கள். அது என்ன?

தமிழ், -­முஸ்லிம் மக்கள், தமக்கு வாக்­க­ளிக்க வேண்டும் அல்­லது தமிழ், முஸ்லிம் வேட்­பா­ளர்­க­ளுக்கு வாக்­க­ளிக்க வேண்டும் அல்­லது சஜித் அல்­லாத ஏனைய சிங்­கள வேட்­பா­ளர்­க­ளுக்கு வாக்­க­ளிக்க வேண்டும் அல்­லது பகிஷ்­க­ரிக்க வேண்டும். இதுதான் கோத்தா அணியின் திட்டம்.  மேற்­கண்ட அனைத்தும் சஜித்­துக்கு எதி­ரான வாக்­குகள் என்­பதால், வாக்­கு­களைச் சித­ற­டித்து, தாம் வெற்றி பெறலாம் என்­பதே இவர்­க­ளது இலக்கு. இதற்­காக பலரை தமிழ் பேசும் மக்கள் மத்­தியில் நேரடி பிர­சார களத்தில் இறக்­கி­யுள்­ளார்கள்.  அது­மட்­டு­மல்ல, பரிச்­ச­ய­மான பலரை விலைக்கு வாங்­கியும், போலி கணக்­கு­களைப் பாவித்தும் சமூக ஊட­கங்­க­ளிலும் பிர­சாரம் செய்­கி­றார்கள்.

மறு­புறம், சஜித்தும் கோத்­தாவும் ஐம்­பது சத­வி­கித வாக்­கு­க­ளுக்­காகப் போராடும் போது, ஜே.வி.பி.  ஐந்து சத­வி­கித வாக்­கு­க­ளுக்குப் போரா­டு­கி­றது. இது பாரா­ளு­மன்றத் தேர்தல் அல்ல. இது இரண்டு பிர­தான வேட்­பா­ளர்­க­ளுக்கு மத்­தியில் இடம்­பெறும் ஜனா­தி­பதித் தேர்தல் ஆகும். இவற்றை  சிறு­பான்மை இன வாக்­கா­ளர்கள் மனதில் கொள்ள வேண்டும். பாரா­ளு­மன்றத் தேர்­தலில் விரும்­பி­ய­வர்­க­ளுக்கு வாக்­க­ளிக்­கலாம். ஆனால், இந்தத் தேர்­தலில் விளை­யாட்­டுத்­த­ன­மாக வாக்­க­ளித்து விட்டு பின்னர் வருந்­து­வதில் பிர­யோ­சனம் இல்லை.    

தமிழ் தேசிய கூட்­ட­மைப்பை அரசில் நேர­டி­யாக இணை­யும்­படி மன்னார், மட்­டக்­க­ளப்பு ஆகிய இரண்டு இடங்­களில் நடை­பெற்ற கூட்­டங்­களில் கூறி­னீர்கள். ஏன்?

இரண்டு சந்­தர்ப்­பத்­திலும் இந்த யோச­னையை நாக­ரிக­மா­கத்தான் கூறினேன். இது­ பற்றி முடிவு எடுக்க வேண்­டி­யது கூட்­ட­மைப்பே. கிழக்கு மாகாண தமி­ழர்­களும், வன்னி மாவட்டத் தமி­ழர்­களும் 30 வருட போரினால் வாய்ப்­பு­க­ளையும், வளங்­க­ளையும், உரி­மை­க­ளையும் இழந்து, இன்று சில சுய­லா­பி­க­ளால் மென்­மேலும் ஒடுக்­கப்­ப­டு­கி­றார்கள்.

வாக்­க­ளித்து ஜனா­தி­ப­தியை உரு­வாக்கி விட்டு வெளியிலிருந்து வேடிக்கை பார்க்கும் கிழக்கு மற்றும் வன்னித் தமிழர் தலை­யெ­ழுத்து இனி மாறியே ஆக­ வேண்டும். அதற்கு ஒரே வழி, அரசில் இணை­வது ஆகும். இது எனது அபிப்­பி­ராயம். முஸ்லிம் மக்கள் சார்­பாக அங்கே அமைச்­சர்கள் உள்­ளார்கள். தமக்கு இல்­லையே என தமி­ழர்கள் ஏங்­கு­கி­றார்கள்.

வன்னி, மட்­டக்­க­ளப்பு, அம்­பாறை மாவட்­டங்­களில் நிலவும் தமிழ், முஸ்லிம் விரிசல் என்னை ஆச்­ச­ரி­யப்­ப­டவும், வருத்­தப்­ப­டவும் வைத்து விட்­டது. இந்த விரி­ச­லுக்கு நமது அரசு அணியில் இருக்கும் ஒரு­சில முஸ்லிம் அர­சி­யல்­வா­தி­களும் கார­ண­மாக அமை­கின்­றார்கள். இந்தத் தேர்தல் பிர­சா­ரத்தில் கூட தமிழர் பெரும்­பான்­மை­யாக வாழும் வவு­னியா, மன்னார், மட்­டக்­க­ளப்பு மாவட்­டங்­களில் சஜித் பிரே­ம­தா­சவின் பிர­சாரக் கூட்­டங்­களை முஸ்லிம் அர­சி­யல்­வா­திகள் முழு­மை­யாக கையில் எடுத்தமை பிழை. இது தமிழர்களுக்கு பெரும் சந்தேகங்களை ஏற்படுத்தி விட்டதை நான் நேரடியாக பார்த்தேன். உண்மையில் இவற்றை தமிழர்களுடன் கூட்டு சேர்ந்து அரசில் உள்ள முஸ்லிம் அரசியல்வாதிகள் செய்திருக்க வேண்டும். நல்ல வேளையில் மட்டக்களப்பு களுதாவளை கூட்டத்தில் நான் முக்கிய உரையை ஆற்றினேன். அதனால் தமிழர்களின் பல சந்தேகங்களைத் தீர்க்க என்னால் முடிந்தது. ஆனால், மன்னார் கூட்டத்தில் எங்கள் கட்சி வன்னி மாவட்ட அமைப்பாளர் ஜனகனை அங்குள்ள ஒருசில பிரதேச மட்ட முஸ்லிம் அரசியல்வாதிகள் எதிரியாக பார்த்ததை நான் கண்கூடாகப் பார்த்தேன்.  

இந்த நிலைமைகளை இப்போது எதிரணியிலுள்ள ஒருசில தமிழ் அரசியல்வாதிகள் பயன்படுத்திக்கொள்ள முயல்கிறார்கள். இது இந்த மாவட்டங்களில் சஜித்துக்கு வருகின்ற தமிழ் வாக்குகளை குழப்பிவிடக் கூடாது. இதுவும் என் கவலை.

இந்த தமிழ், முஸ்லிம் சிக்கலை எப்படித் தீர்ப்பது?

நீண்ட காலமாக போரினால் பலதையும் இழந்த தமிழர்களுக்கு புதிய நம்பிக்கையை நாம் ஏற்படுத்த வேண்டும். இன்று இவர்களுக்கு ஏனையவர்களை விட மேலதிக சலுகைகள், விசேட ஒதுக்கீடுகள் கிடைத்தால் கூட அதில் தப்பில்லை. ஏனென்றால் முப்பது வருட காலத்தில் கிடைக்காமல் போன நிலுவை இருக்கிறதே.  இதுபற்றி நான் எனது மட்டக்களப்பு களுதாவளை கூட்டத்திலும் பேசினேன். இந்த தேர்தல் பிரசாரம் இப்போது முடிந்து விட்டது. இந்நிலையில் இது பற்றி ஒன்றும் செய்ய முடியாது. ஆனால், எதிர்காலத்தில் இதுபற்றி கவனத்தில் கொள்ள வேண்டும்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21
news-image

நுவரெலியா - லிந்துலை சிறுவர் பராமரிப்பு...

2024-04-16 16:28:10
news-image

சட்டவிரோதமாக காணிக்குள் நுழைந்து பெண்ணின் 14...

2024-04-16 16:23:03
news-image

நானுஓயா ரயில் நிலையத்தில் பயணிகள் அவதி!

2024-04-16 16:05:39
news-image

புத்தாண்டு நிகழ்வில் கிரீஸ் மரம் சரிந்து...

2024-04-16 16:02:02
news-image

முட்டை விலை அதிகரிப்பினால் கேக் உற்பத்தி...

2024-04-16 14:59:40
news-image

உலகில் மிகவும் சுவையான அன்னாசிப்பழத்தை இலங்கையில்...

2024-04-16 14:28:01
news-image

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வழங்கப்படும் உணவுகள்...

2024-04-16 14:22:41
news-image

மரக்கறிகளின் விலைகள் குறைவடைந்தன!

2024-04-16 14:35:09
news-image

கொழும்பு கோட்டை ரயில் நிலைய மேடையை...

2024-04-16 13:46:47
news-image

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து சில...

2024-04-16 13:15:21
news-image

பாதாள உலகக் குழுக்களைச் சேர்ந்த 7...

2024-04-16 13:15:00