சஜித் பிரேமதாச ஜனாதிபதியானதும், மிகுதி அரசியல் கைதிகளும் பொது மன்னிப்பு அடிப்படையில் விடுவிக்கப்படுவர். அதற்கான அழுத்தங்கள் அரசாங்கத்துக்கு கொடுக்கப்பட்டு வருகின்றன என கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வவுனியா மாவட்ட ஐக்கிய தேசியக்கட்சியின் அமைப்பாளர் கருணாதாசவின் ஏற்பாட்டில் நேற்று முன்தினம் இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
குறித்த கூட்டத்தில் சஜித் பிரேமதாசவின் சகோதரி துலாஞ்சலி பிரேமதாச, முன்னாள் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் ரோகித போகொல்லாகம உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இதில் விஜயகலா மகேஸ்வரன் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
கடந்த காலங்களில் எங்களுக்கு நடைபெற்ற அநீதிகள், துன்பங்கள் எல்லாம் உங்களுக்கு தெரியும். அதிலிருந்து விடுதலை பெற வேண்டும். கடந்த ஜனாதிபதித் தேர்தல் ஊடாக நாங்கள் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியிருந்தோம். அதற்கும் அப்பால் இன்று சஜித் பிரேமதாச தேர்தலில் போட்டியிடுகின்றார். அவருடைய வெற்றி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சஜித் பிரேமதாசவின் ஆட்சியில் வடக்கு–- கிழக்கு பிரதேசத்தில் வாழும் பெண்களின் வாழ்வாதாரத்துக்கான செயற்பாடுகளை முன்னெடுப்பதாக தெரிவித்துள்ளார்.
சுயாதீன ஆணைக்குழுவை அமைப்பதாக கூறியிருக்கின்றார். போரால் பாதிக்கப்பட்ட, கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் இருக்கின்றார்கள். பட்டதாரிகள் தொடக்கம் இன்று வேலையில்லாமல் இருக்கிறார்கள். அவர்களுக்கானக கைத்தொழில் பேட்டைகளை அமைப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. நாடளாவிய ரீதியில் உள்ள முன்பள்ளி ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். ஜனாதிபதித் தேர்தலுக்கு பின்னர் இவைகளை அவர் நிறைவேற்றித் தருவார்.
இந்தமுறை ஜனாதிபதி ஆனதன் பின்னர் தொடர்ந்து 20 வருடங்கள் பயணிக்க இருக்கின்றோம். கடந்த காலத்தில் ஏற்பட்ட அநீதிகளை முள்ளிவாய்க்கால் கூறுகின்றது. முள்ளிவாய்க்கால் போன்ற கொடூரமான வாழ்க்கையை நாம் கடந்த காலத்தில் வாழ்ந்திருக்கின்றோம். அப்படியானவற்றுக்கு நாம் இடமளிக்க கூடாது. வடக்கு – கிழக்கு மாகாணத்தில் ஒவ்வொரு குடும்பமும் பாதிக்கப்பட்டுள்ளது. இறுதி யுத்தத்தால் மாற்றுத் திறனாளிகள், பெண்களை தலைமைத்துவமாக கொண்ட குடும்பங்கள் எனப் பலர் இருக்கின்றனர். குழந்தைகள் பெற்றோர்களை இழந்திருக்கிறார்கள். பிள்ளைகளை இழந்து முதியோர்கள் முதியோர் இல்லங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இவைகள் எல்லாம் உங்களுக்கு ஞாபகத்துக்கு வரவேண்டும்.
குறுகிய காலத்தில் ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் வடக்கு மாகாணத்தில் ஒரு இலட்சம் வரையிலான சமுர்த்தி பயனாளர்களை தெரிவு செய்துள்ளது. உட்கட்டமைப்பு மற்றும் வீதிகள் புனரமைத்து கொடுக்கப்பட்டுள்ளன. கம்பரலிய திட்டத்தின் ஊடாக ஒரு தொகுதிக்கு 300 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு ஆலயங்கள், பாடசாலைகள், பள்ளிவாசல்கள், சிறுவீதிகள் புனரமைக்கப்பட்டுள்ளன.
வறுமைக் கோட்டிற்கு உட்பட்ட குடும்பங்களின் மின்னிணைப்புக்காக ஒரு குடும்பத்துக்கு 30 ஆயிரம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சஜித் பிரேமதாச கிராமங்கள் தோறும் சென்று தனது அமைச்சின் ஊடாக குடியேற்றத்திட்டங்களை அமைத்து வீடுகளை வழங்கியுள்ளார்.
எனவே குறுகிய காலத்தில் அபிவிருத்தியை ஏற்படுத்தி ஜனநாயகத்தை உறுதிப்படுத்தி இந்த நாட்டை ஒரு ஜனநாயக நாடாக கொண்டு வந்திருக்கின்றோம். இந்த வாக்குகளின் ஊடாக ஜனநாயகத்தை உறுதிப்படுத்த முடியும். ஜனநாயக நாடு தான் எங்களுக்கு வேண்டும். வெள்ளை வான் கலாசாரம் வேண்டாம். எங்களுடைய காணிகள் வேண்டும். சிறையில் இருந்து அரசியல் கைதிகளை விடுவித்துள்ளோம். மிகுதி கைதிகளும் விடுவிக்கப்பட வேண்டும்.
சஜித் பிரேமதாச ஜனாதிபதியானதும் மிகுதி அரசியல் கைதிகளும் பொது மன்னிப்பு அடிப்படையில் விடுவிக்கப்படுவர். அதற்கான அழுத்தங்கள் அரசாங்கத் துக்கு கொடுக்கப்பட்டு வருகின்றன. எனவே சஜித் பிரேமதாசவை வெற்றி பெறச் செய்வோம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM