பொலிவிய முன்னாள் ஜனாதிபதி ஈவோ மொராலஸுக்கு மெக்ஸிக்கோ அரசியல் புகலிடம் வழங்கியுள்ளது.
தேர்தலில் மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக குற்றஞ்சாட்டி நாடளாவிய ரீதியில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதையொட்டி அவர் தனது பதவியை இராஜினாமா செய்தமைக்கு மறுதினம் அவருக்கு இவ்வாறு புகலிடம் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஈவோ மொராலஸ் டுவிட்டர் இணையத்தளத்தில் தன்னால் வெளியிடப்பட்ட செய்தியில், தான் பொலிவியாவை விட்டுச் செல்வதாகவும் ஆனால் மேலும் பலத்துடனும் சக்தியுடனும் தான் திரும்பி வரவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மெக்ஸிக்கோ அரசாங்கத்திற்குச் சொந்தமான விமானமொன்றில் ஈவோ மொராலஸ் ஏறியுள்ளதை மெக்ஸிக்கோ வெளிநாட்டு அமைச்சர் மார்செலோ எப்ரார்ட் உறுதிப்படுத்தியுள்ளார்.
அதேசமயம் பொலிவிய இராணுவக் கட்டளைத் தளபதி, மொராலஸின் ஆதரவாளர்களுடன் மோதலில் ஈடுபட்டுள்ள பொலிஸாருக்கு ஆதரவளிக்க படையினருக்கு உத்தரவிட்டுள்ளார். மேற்படி மோதலில் சுமார் 20 பேர் காயமடைந்துள்ளனர்.
தன்னை பதவியிலிருந்து இராஜினாமா செய்வதற்கு நிர்ப்பந்தித்த இருண்ட சக்திகளை எதிர்த்து நிற்க மொராலஸ் ஏற்கனவே தனது ஆதரவாளர்களை வலியுறுத்தியிருந்தார்.
பொலிவிய பாராளுமன்ற செனட் சபையின் பிரதித் தலைவர் ஜீனைன் அனெஸ் கூறுகையில், புதிய தேர்தல்கள் இடம்பெறும் வரை அந்நாட்டின் இடைக்கால ஜனாதிபதியாக தான் பதவி வகிக்கவுள்ளதாக தெரிவித்தார்.
இந்நிலையில் மொராலஸ் பதவி லிலகியதையும் அவர் நாட்டை விட்டு வெ ளியேறுவதையும் அவரது எதிர்ப்பாளர்கள் விழாவாக கொண்டாடினர்.
மொராலஸின் பதவி விலகல் தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கருத்து வெ ளியிடுகையில், அவரது இராஜினாமா மேற்கு அரைக்கோளத்திற்கான ஜனநாயகத்தில் முக்கிய தருணமாகும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
அதேசமயம் ரஷ்ய வெளிநாட்டு அமைச்சால் விடுக்கப்பட்ட செய்தியில், எதிர்க்கட்சியினரால் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறை அலை ஈவோ மொராலஸிற்கு தனது ஜனாதிபதிக்கான ஆணையை பூர்த்தி செய்வதற்கு அனுமதிக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிவியாவில் ஜனநாயகத்துக்கு எதிராக வன்முறைமிக்க கோழைத்தனமான சதிப்புரட்சியொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கியூப ஜனாதிபதி மிகுயல் டியஸ் கானெல் தன்னால் டுவிட்டர் இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
பொதுவுடைமை நாடுகளான நிகரகுவா மற்றும் வெனிசுலா ஆகியன தாம் மொராலஸுடன் ஒன்றுபட்டு நிற்பதாக உறுதியளித்துள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM