(நா.தனுஜா)
நாட்டில் தற்போதும் போதிய ஊடக சுதந்திரம் இல்லை என்றே நான் கருதுகின்றேன். எனவே எதிர்வரும் 16 ஆம் திகதியின் பின்னர் தற்போதைய ஊடக சுதந்திரத்தை விரிவாக்கி, மேலும் வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வேன். அத்தோடு ஊடக சுதந்திரத்தையும் அதன் நடவடிக்கைகளையும் அடுத்தகட்டத்திற்கு கொண்டு செல்வதற்கான சர்வதேச தரத்திற்கு அமைவாக ஊடக அபிவிருத்தி கேந்திர நிலையமொன்றை ஸ்தாபிப்பதற்கு திட்டமிட்டிருக்கிறேன் என்று ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச நேற்று பத்தரமுல்லையில் உள்ள வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலில் ஊடகவியலாளர்களுடன் சந்திப்பொன்றை மேற்கொண்டிருந்தார். அந்நிகழ்வில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் கூறியதாவது:
நாடொன்றைப் பொறுத்தவரை அதன் ஜனநாயகத்தை பாதுகாக்கின்ற நான்காவது தூண் ஊடகம். அரசியலமைப்பு, நிறைவேற்றதிகாரம், நீதிமன்றம் ஆகிய மூன்று தூண்களை அடிப்படையாகக் கொண்டே நாட்டின் நிர்வாகம் நடைபெறுகின்றது. அதன் தொடர்ச்சியாக சுதந்திர ஊடகத்துறை என்பது மக்களின் ஜனநாயகத்தை உறுதிப்படுத்துவதற்கான முக்கிய நான்காவது தூண் என்று நான் உறுதியாக நம்புகின்றேன்.
எனவே நாட்டின் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதில் முக்கிய பங்காற்றும் ஊடகவியலாளர்கள், இம்முறை ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் உருவாகும் அரசாங்கத்தின் ஊடாக ஜனநாயக ரீதியான ஊடக சுதந்திரம் உறுதிசெய்யப்படுமா? இல்லையா? என்பது தொடர்பில் விசேட கவனம் செலுத்த வேண்டும். கடந்த காலத்தில் இடம்பெற்ற சம்பவங்களை மீண்டும் நினைவுபடுத்திக் கொள்வது மாத்திரமே தற்போது எம்மிடம் எஞ்சியிருக்கின்றது.
ஆட்சியதிகாரத்தில் இருந்த அரசாங்கம் தொடர்பில் விமர்சித்தமை, கருத்துக்களை வெளியிட்டமை, யோசனைகளை முன்வைத்தமை உள்ளிட்ட காரணங்களுக்காக லசந்த விக்கிரமதுங்க, பிரகீத் எக்னெலிகொட, கீத் நொயார், போத்தல ஜயந்த, உபாலி தென்னகோன் போன்ற ஊடகவியலாளர்களுக்கு நேர்ந்ததைப் பார்க்கும் போது, கடந்த காலத்தில் வென்றெடுத்த சுதந்திரத்தைத் தக்கவைத்துக் கொள்ளும் பொறுப்பு அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் உண்டு என்பது தெளிவாகின்றது. எனவே இத்தருணத்தில் ஊடகவியலாளர்கள் பெற்றுக்கொண்ட சுதந்திரத்தைத் தொடர்ந்தும் பாதுகாப்பதா? அல்லது ஊடகவியலாளர்களுக்கு பாதுகாப்பற்ற பழைய யுகத்திற்குள் மீண்டும் செல்வதா? என்ற தீர்மானத்தை மேற்கொள்ள வேண்டும்.
தற்போதும், கடந்த காலத்திலும் நாம் ஊடகங்களின் விமர்சனங்களுக்கு இலக்காகியிருக்கின்றோம். எனினும் அதனை அடக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. ஏனெனில் நாம் ஊடக சுதந்திரத்திற்கு மதிப்பளிக்கின்றோம். அதுமாத்திரமன்றி நாட்டின் தலைவராக இருக்கின்ற ஒருவருக்கு பிறருடைய கருத்துக்களை பொறுமையாக செவிமடுக்கும் ஆற்றல் இருக்க வேண்டும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM