(நா.தனுஜா)
சஜித்தும், கோத்தபாயவும் 50 சதவீத வாக்குகளுக்காகப் போட்டியிடும் போது 5 சதவீதத்திற்காகப் போட்டியிடுகின்ற அநுரகுமாரவிற்கு வாக்களித்து, வாக்குகளை விரயமாக்க முடியாது. அதேபோன்று வடக்கிலிருந்து சிவாஜிலிங்கமும், கிழக்கிலிருந்து ஹிஸ்புல்லாவும் வேட்பாளர்களாகக் களமிறங்கியிருக்கிறார்கள். இவர்கள் ஒப்பந்தக்காரர்கள்.
உண்மையில் இவ்வாறான ஒப்பந்தக்காரர்களுக்கு வாக்களிப்பதும், அநுரகுமார திஸாநாயக்கவிற்கு வாக்களிப்பதும், எந்தவொரு வேட்பாளருக்கும் வாக்களிக்காமல் பகிஷ்கரிப்பதும் கோத்தபாய ராஜபக்ஷவிற்கு அளிக்கின்ற வாக்குகளாகவே அமையும் என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் அமைச்சர் மனோகணேசன் தெரிவித்தார்.
சினிவேல்ட் டவரில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை மாலை நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்
ஜனாதிபதித் தேர்தல் திகதி நெருங்கியுள்ள நிலையில் தேர்தல் பிரசாரங்கள் முடிவடையவிருக்கின்றன. எனவே இப்போது சில விடயங்கள் குறித்து அவசியம் பேசவேண்டும் என்று கருதுகின்றேன். தற்போது ஜனாதிபதியொருவரை உருவாக்குவதற்காக நாடு முழுவதும் பிரசாரக்கூட்டங்களில் கலந்துகொள்கின்றோம். தொடர்ச்சியாக ஓடிக்கொண்டிருக்கின்றோம். ஜனாதிபதியை உருவாக்குவது என்பதை விடவும், வரப்போகின்ற ஆபத்தைத் தடுத்து நிறுத்துவதற்கான பிரளயம் ஒன்றை செய்கின்றோம் என்பதே பொருத்தமாக இருக்கும்.
புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாஸ மீதான நேசம், பற்று என்பவையெல்லாம் ஒருபுறமிருக்க, எதிர்த்தரப்பின் வேட்பாளர் மீதான வெறுப்பு அதிகமாக இருக்கின்ற காரணத்தினாலேயே அவர் தேர்தலில் வெற்றி பெற்றுவிடக்கூடாது என்பதற்காக பலரும் சஜித்தை ஆதரிக்கின்றார்கள் எனத் தோன்றுகிறது. எனவே சஜித் பிரேமதாஸ ஜனாதிபதியான பின்னர் எதிரணி வேட்பாளர் மீதான வெறுப்பின் காரணமாக வாக்களித்தவர்களின் மனங்களையும் வெற்றிகொள்ள வேண்டிய கடப்பாடு அவருக்கு இருக்கின்றது. அதனைச் செய்வார் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கின்றது.
சஜித் பிரேமதாஸ ஒரு கௌதம புத்தர் என்றோ அல்லது மகாத்மா காந்தி என்றோ கூறி நாங்கள் அவருக்காக வாக்கு கேட்கவில்லை. மாறாக வரவிருக்கின்ற ஆபத்தைத் தடுத்து நிறுத்திவிட வேண்டும் என்பதே வடக்கு, கிழக்கு, மலையகம் உள்ளிட்ட அனைத்து பிரதேசங்களிலும் வாழும் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் மனநிலையாக இருக்கின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் கூட காட்டாறாக வரவிருக்கும் ஆபத்தைத் தடுப்பதற்காக அணை கட்டுவதாகவும், சஜித் பிரேமதாஸவே அந்த அணை என்றும் குறிப்பிட்டார்.
இம்முறை தேர்தல் பிரசாரத்தில் நாம் பாரியதொரு புரட்சியைச் செய்திருக்கிறோம். காலிமுகத்திடலில் இடம்பெற்ற புதிய ஜனநாயக முன்னணியின் முதலாவது தேர்தல் பிரசாரக் கூட்டத்திற்கு அடுத்தபடியாக தமிழ் முற்போக்குக் கூட்டணி ஏற்பாடு செய்திருந்த தலவாக்கலை தேர்தல் பிரசாரக் கூட்டத்திற்கே பெருமளவான கூட்டம் கூடியது.
இரத்தினபுரி, கேகாலை, அவிசாவளை, கொழும்பு மற்றும் கண்டி ஆகிய ஐந்து இடங்களில் பிரம்மாண்டமான கூட்டங்களை சஜித் பிரேமதாஸவிற்கு ஆதரவாக நடத்தினோம். அந்த 5 கூட்டங்களிலும் பெருமளவான பொதுமக்கள் கலந்துகொண்டிருந்தார்கள். எனவே இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாஸ அடையப்போகின்ற பாரிய வெற்றியில் ஜனநாயக மக்கள் முன்னணி மற்றும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் பங்களிப்பு பெருமளவில் உள்ளது என்பது அவர் நன்கு அறிந்திருப்பார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குச் சமளவாக தமிழ் முற்போக்குக் கூட்டணி வட, கிழக்கிற்கு வெளியே சுமார் 7 – 8 இலட்சம் வாக்குகளை திரட்டி சஜித் பிரேமதாஸவிற்கு வழங்கியிருக்கிறது என்பதை மறந்துவிடக்கூடாது.
சஜித்திற்கு ஆதரவு வழங்கும் சிறுபான்மைக் கட்சிகளான தமிழ் முற்போக்குக் கூட்டணி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகியவற்றில் பெருமளவான வாக்குகளை சஜித்திற்குத் திரட்டிக்கொடுத்தது எமது தமிழ் முற்போக்குக் கூட்டணி என்பதே உண்மையாகும். எனவே தேர்தல் முடிவடைந்த பின்னர் இதனை நான் சஜித்திடம் கூறுவேன். ஏனெனில் நாம் கடினமாகப் பாடுபடும் வேளையில், அதற்கான புள்ளிகளை வேறொருவர் பெற்றுக்கொண்டு போவதற்கு அனுமதிக்க முடியாது. அதில் நாம் தெளிவாக இருக்கின்றோம்.
கடந்தகால ஜனாதிபதித் தேர்தல்களைப் பொறுத்தவரை 2010 ஆம் ஆண்டில் பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகாவை களமிறக்கினோம். 2015 இல் களமிறக்கியவர் போதைப்பொருள் குற்றவாளிகளுக்குத் தூக்குத்தண்டனை வழங்குவேன் என்று கூறிவிட்டு, தற்போது மதுபோதையில் அப்பாவிப் பெண்ணைக் கொலை செய்த நபரை விடுதலை செய்துவிட்டுச் செல்கிறார்.
இந்நிலையில் 25 வருடங்களுக்குப் பிறகு ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து ஒருவரைக் களமிறக்குவதன் ஊடாகவே அக்கட்சி மீண்டும் எழுச்சிபெறும் என்று கருதி, அக்கட்சியிலிருந்தே வேட்பாளர் ஒருவரைக் களமிறக்கவேண்டும் என்று தீர்மானித்தோம். எனவே தமிழ், முஸ்லிம் மக்களைப் பொறுத்தவரை ஒரு கேடயமாக, அணையாகத் திகழ்கின்ற சஜித் பிரேமதாஸவை வேட்பாளராகக் களமிறக்க வேண்டுமென்று கோரினோம். ஆனால் அப்போது சஜித்தைக் களமிறக்குவதை எதிர்த்தவர்கள் எல்லாம் இப்போது அவருக்கு ஆதரவாகக் கூட்டம் நடத்தவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டார்கள். இன்றளவில் நாடு முழுவதும் சஜித் பிரேமதாஸவிற்கான ஆதரவு நாளுக்கு நாள் பெருகிவருகின்றது.
அதேவேளை தமிழ், முஸ்லிம் மக்களின் வாக்குகளால் மாத்திரம் சஜித் பிரேமதாஸவை வெற்றி பெறச்செய்துவிட முடியும் என்று கனவு காணக்கூடாது. சிங்கள மக்களின் கணிசமான வாக்குகளுடன் சிறுபான்மையின வாக்குகள் சேரும் போதே சஜித்தின் வெற்றியை உறுதிசெய்ய முடியும். எனவே வாக்குரிமை உள்ள தமிழ், முஸ்லிம் மக்கள் அனைவரும் தமது வாக்குகளைக் கட்டாயமாகப் பயன்படுத்த வேண்டும். அப்போது தான் பெரும்பான்மையினரின் வாக்குகள் குறைந்தாலும், எமது வாக்குகள் ஊடாக ஈடுசெய்யக் கூடியதாக இருக்கும்.
மேலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் சஜித் பிரேமதாஸவை ஆதரிப்பதற்குத் தீர்மானித்திருக்கிறது. அவர்கள் சற்றே தாமதமாகத் தீர்மானித்தாலும் அதில் நியாயமிருக்கிறது. நாங்கள் அரசாங்கத்திற்குள் இருக்கின்ற பங்காளிக்கட்சிகள். ஆனால் அவர்கள் நேசக்கட்சிகள் மாத்திரமே. எனவே எம்மைப் போன்று கட்சி என்ற ரீதியில் விரைவாகத் தீர்மானங்களை மேற்கொள்ள முடியாது. எனினும் அவர்களுக்கு முன்பதாகவே வட, கிழக்கு மக்கள் யாருக்கு வாக்களிப்பது என்பதை முடிவு செய்துவிட்டார்கள் என்பதே உண்மை.
இது ஜனாதிபதித் தேர்தலேயன்றி, பாராளுமன்றத் தேர்தல் அல்ல. இதில் வெற்றி பெறப்போகின்ற சஜித் பிரேமதாஸ மற்றும் தோல்வியடையப் போகின்ற முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ ஆகிய இரு தரப்பினரே உள்ளனர். எனது மிக நெருங்கிய நண்பரான அநுரகுமார திஸாநாயக்க, சஜித் பிரேமதாஸ மற்றும் கோதபாய ராஜபக்ஷ ஆகியோரை விடவும் தகைமைகளின் அடிப்படையில் சிறந்தவராவார். ஆனால் மக்கள் விடுதலை முன்னணி தற்போது தமிழ், முஸ்லிம் மக்களிடம் வாக்கு கோருவது பிழையானது.
அவர்கள் சிங்கள மக்களிடம் சென்று ஓரளவு வாக்குகளைப் பெற்றுக்கொண்டதன் பின்னர் சிறுபான்மை இனத்தவரிடம் வாக்குக் கோரலாம். ஆனால் அவ்வாறு நடக்கும் போது இந்த நாட்டில் தமிழர்களே இல்லாமல் போயிருப்பார்கள். தற்போது சஜித்தும், கோதபாயவும் 50 சதவீத வாக்குகளுக்காகப் போட்டியிடும் போது 5 சதவீதத்திற்காகப் போட்டியிடுகின்ற அநுரகுமாரவிற்கு வாக்களித்து, வாக்குகளை விரயமாக்க முடியாது. அதேபோன்று வடக்கிலிருந்து சிவாஜிலிங்கமும், கிழக்கிலிருந்து ஹிஸ்புல்லாவும் வேட்பாளர்களாகக் களமிறங்கியிருக்கிறார்கள்.
இவர்கள் ஒப்பந்தக்காரர்கள். உண்மையில் இவ்வாறான ஒப்பந்தக்காரர்களுக்கு வாக்களிப்பதும், அநுரகுமார திஸாநாயக்கவிற்கு வாக்களிப்பதும், எந்தவொரு வேட்பாளருக்கும் வாக்களிக்காமல் பகிஷ்கரிப்பதும் கோதபாய ராஜபக்ஷவிற்கு அளிக்கின்ற வாக்குகளாகவே அமையும்.
நான் ரணிலுக்கோ அல்லது சஜித்திற்கோ காவடி தூக்கவுமில்லை, சாமரம் வீசவுமில்லை. ஆனால் எனது மக்களுக்காக காவடி தூக்குவதற்குத் தயாராகவே இருக்கின்றேன்.
சிவாஜி, ஹிஸ்புல்லா ஒப்பந்தக்காரர்கள்: மனோ குற்றச்சாட்டு
Published By: J.G.Stephan
13 Nov, 2019 | 11:06 AM
-
சிறப்புக் கட்டுரை
நாட்டு மக்களின் விவேகத்தை நிந்தனை செய்யும்...
28 Mar, 2024 | 12:02 PM
-
சிறப்புக் கட்டுரை
இந்திய - சீன மேலாதிக்க போட்டியின்...
28 Mar, 2024 | 10:03 AM
-
சிறப்புக் கட்டுரை
ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் சம்பவங்கள் :...
24 Mar, 2024 | 05:29 PM
-
சிறப்புக் கட்டுரை
'நிலைப்பாட்டை அறிவிப்போம்' : ரணிலிடம் கூறிய...
24 Mar, 2024 | 11:48 AM
-
சிறப்புக் கட்டுரை
"ஹர்ஷ, எரான், கபீர் ஏமாற்றிவிட்டார்கள்..." : ...
17 Mar, 2024 | 12:21 PM
-
சிறப்புக் கட்டுரை
ஜனாதிபதி தேர்தலை எதிர்கொள்வதில் அரசியல் கட்சிகளின்...
17 Mar, 2024 | 06:39 AM
மேலும் வாசிக்க
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM