முன்னாள் ஜனாதிபதி அமரர் ரணசிங்க பிரேமதாசவின் புதல்வரான சஜித் பிரேமதாச ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுகின்றார். அதேபோல், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரர் கோத்தபாய ராஜபக்ஷ போட்டியிடுகின்றார்.
களமிறங்கியுள்ள இரண்டு வேட்பாளர்களில் யார் தமக்கு தேவை என்பதை மக்களே தீர்மானிக்க வேண்டிய முக்கியமான தேர்தல் இதுவாகும் என நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம். திலகராஜ் தெரிவித்தார்.
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் புதிய ஜனநாயக முன்னணி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு தெரிவித்து தமிழ் முற்போக்கு கூட்டணி தலவாக்கலை நகர சபை மைதானத்தில் ஏற்பாடு செய்திருந்த பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
மலையக மக்களுக்கு தனி வீடுகளை அமைத்துக் கொடுத்து காணி உரிமையையும் பெற்றுக்கொடுத்து கிராமங்களில் கௌரவமாக வாழச் செய்து வழிகாட்டிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை என்றும் மறக்க மாட்டோம். மலையக வரலாற்றில் அவரது பெயர் நிச்சயம் இடம்பெறும்.
தோட்டத் தொழிலாளர்களுக்கு தனி வீடு என்பது பகற்கனவு என்றும், அவர்கள் குடியிருக்கும் லயனும் சுற்றியுள்ள மரக்கறித் தோட்டமும் சொந்தமாக வேண்டும் என்றும் தெரிவித்திருந்த நிலையில்தான், தனி வீடு சாத்தியம் என்பதை எடுத்துக் காட்டி மலையக தோட்டத் தொழிலாளர்களுக்கு காணி உறுதிப் பத்திரங்களையும் அமைச்சர் திகாம்பரம் பெற்றுக் கொடுத்து அது சாத்தியமாகும் என்பதை நிரூபித்துக் காட்டியுள்ளார்.
இந்நாட்டில் ஏழை எளிய மக்களின் தோழனாக இருக்கும் சஜித் பிரேமதாச அரசாங்கத்தின் வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த இ.தொ.கா. வினர் எதிர்க்கட்சி வரிசையில் இருந்தாலும் ஆறுமுகன் தொண்டமான் 300 வீடுகளையும் முத்து சிவலிங்கம் 300 வீடுகளையும் அமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்திருந்தார்.
இந்த நாட்டில் இருவர் ஐக்கிய நாடுகள் சபையில் பிரபலமானவர்களாக இருக்கின்றார்கள். ஒருவர் முன்னாள் ஜனாதிபதி அமரர் ரணசிங்க பிரேமதாச. அவர் 'அனைவருக்கும் வீடு' என்ற தொனிப்பொருளில் 1987 ஆம் ஆண்டை சர்வதேச வீடமைப்பு ஆண்டாக பிரகடனம் செய்திருந்தார். அதனூடாக அவர் உலகளாவிய ரீதியில் பிரபலமடைந்திருந்தார். அத்தகையவரின் புதல்வரான சஜித் பிரேமதாச, ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுகின்றார்.
இரண்டாவது சர்வதேச பிரபலமாக கோத்தபாய ராஜபக் ஷ விளங்குகின்றார். அவர் இலங்கையில் வெள்ளை வேன் கடத்தல், கொத்து கொத்தாக மக்களை கொன்று குவித்தல் போன்ற குற்றச்சாட்டுகளுடன் ஐக்கிய நாடுகள் முன்னால், குற்றவாளிக் கூண்டில் நிற்கின்றார். இவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் சகோதரராவார்.
எனவே, முன்னாள் ஜனாதிபதிகளின் வாரிசுகளான இருவரும் தேர்தல் களத்தில் நிறுத்தப்பட்டுள்ளார்கள்.
இது ஒரு முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாக காணப்படுகின்றது. இவர்களில் எமக்கு நன்மை செய்யக் கூடியவர்கள் யார் என்பதை மக்களே தீர்மானித்து முடிவு செய்ய வேண்டும்.
இந்த இருவரில் மலையக மக்கள் மீது அக்கறை கொண்டவராக சஜித் இருப்பதால் தான், தமிழ் முற்போக்கு கூட்டணி அவரை ஆதரிக்க முடிவு செய்து பிரசாரம் செய்து வருகின்றது. அதே முடிவில் தான் மக்களும் இருக்கின்றார்கள். சஜித் வெற்றி பெற்று மலையக மக்களின் வாழ்வில் சுபீட்சம் ஏற்பட அன்னம் சின்னத்துக்கு வாக்களித்து அவரின் வெற்றியை நிலைநாட்ட வேண்டும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM