நாட்டுக்கு ஒரு மாற்றம் ஒன்று வரும் அந்த மாற்றம் மகிந்த – கோத்தாபய மாற்றமாக அமையும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார்.
அவரின் தலைமையில் இன்று கொட்டகலை விளையாட்டு மைதானத்தில் எற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும் அங்கு தனது உரையில் தெரிவித்த அவர்,
நுவரெலியா – மஸ்கெலியா தேர்தல் தொகுதியில் மொட்டு சின்னத்தை வெற்றிப்பெற வைக்கும் போது பாரிய அபிவிருத்திகளை நாம் எதிர்பார்க்க முடியும்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு ஆதரவு வழங்கும் கட்சிகளில் பெரும்பான்மையான சிறுபான்மை கட்சி இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் என்பதை அவர் தெளிவுப்படுத்தினார்.
வானமே நமது எல்லை. ஒற்றுமையே நமது பலம். எனவே மக்கள் அணைவரும் ஒற்றுமையை பலப்படுத்தி தாமரை மொட்டு சின்னத்திற்கு வாக்களித்து வெற்றிப்பெற செய்ய வேண்டும் வலியுறுத்தவதாக அவர் தெரிவித்தார்.
இந்த மேடையில் பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ச முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆகியோர் நாம் நமது மக்களுக்காக கேட்டுக் கொண்டதுக்கு அமைய செய்ய வேண்டிய அபிவிருத்திகள் தொடர்பில் உங்களிடம் தெரிவித்தார்கள்.
அந்தவகையில் மலையக மக்கள் எதிர்பார்க்கும் அபிவிருத்திகள் அவர்கள் ஊடாக நமக்கு கிடைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. கொத்மலையில் இடம்பெற்ற பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் ஒருவர் 1500 ரூபாய் சம்பமளாக தருவதாக கூறினார். அது கிடைக்குமா என உருக்கமான கேள்வியை எழுப்பினார்.
நாம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிடம் முன்வைத்த கோரிக்கைகளில் எமக்கு வீடமைப்பு திட்டம் வேண்டும். வீடுகளுக்கு கூரை வேண்டாம் என தெரிவித்தோம். மாறாக கூரைகளுக்கு பதில் மேல் மாடிகள் அமைக்கும் வகையில் வீடமைப்பு திட்டத்தை நாம் கேட்டுள்ளோம்.
இதில் எதிர்காலத்தில் எமது பிள்ளைகள் பயன்பெற கூடிய ஒன்றாக அமையும். மாடி வீட்டில் மேலே இருந்து எச்சில் துப்பினால் கீழே வருவதாக சிலர் சொல்லுகின்றார்கள். எச்சில் கீழே விழாமல் வேறு எங்கு விழும் என வித்தியாசமாக தெரிவித்தார்.
நடைமுறைகளுக்கு சாத்தியமான விடயங்களை இந்த தலைவர்கள் நமக்கு செய்து கொடுப்பதாக உங்கள் மத்தியில் தெரிவித்துள்ளனர்.
அந்தவகையில் நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் தாமரை மொட்டு சின்னத்திற்கு வாக்களித்து தாமரையை போல வாழ்க்கை மலையக மக்களுக்கு மலர வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM