கொழும்பு - சென்னைக்கான ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவைக்கு சொந்தமான மேலும் 14 விமான சேவைகள் இன்று முதல் 6 ஆம் திகதி வரை இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சென்னையில் கடந்த இரு நாட்களாக பெய்துவரும் அடைமழையின் காரணமாக சென்னை விமான நிலையம் மூடப்பட்டுள்ளது.
இந்நிலையிலேயே கொழும்பில் இருந்து சென்னைக்கான ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.
அந்தவகையில், இன்று 3 ஆம் திகதி சென்னைக்கு பயணமாகவிருந்த யு. எல். 128, யு. எல். 129, யு. எல். 123, யு. எல். 124 ,விமான சேவைகளும் 4 ஆம் திகதி பயணமாகவிருந்த யு. எல். 125,யு. எல். 126, யு. எல். 121, யு. எல். 122, யு. எல். 127, யு. எல். 128, யு. எல். 123, யு. எல். 124 , விமான சேவைகளும் 5 ஆம் திகதி பயணமாகவிருந்த யு. எல். 125, யு. எல். 126 ஆகிய ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவைகளே இரத்துச் செய்யப்பட்டுள்ளன.
இதேவேளை, மிஹின் லங்கா விமான சேவைக்கு சொந்தமான எம்.ஜே. 129, எம்.ஜே.130 ஆகிய விமான சேவைகளும் இரத்துச் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM