தமிழ் மக்­களின் வாக்­கு­களை சித­றடிப்­ப­தற்­கான முயற்­சிகள்

12 Nov, 2019 | 12:21 PM
image

வடக்கு கிழக்கைச் சேர்ந்த சில தமிழ்  தேசி­யக்­கட்­சி­களின் செயற்­பா­டுகள்  ஜனா­தி­பதி தேர்­தலில் தமிழ் மக்­களின் வாக்­கு­களை  சித­ற­டிப்­ப­தற்கும் வாக்­க­ளிப்பு வீதத்தை குறை­வ­டையச் செய்­வ­தற்கும் ஏற்­ற­வ­கையில் அமைந்­துள்­ளன.  இத்­த­கைய  கட்­சி­களின் செயற்­பாடுகள்   யுத்­தத்தால் பெரும் பாதிப்­புக்­குள்­ளான மக்­களின்  அர­சியல் எதிர்­காலத்தை  சூனி­ய­மாக்கும் நட­வ­டிக்­கை­யா­கவே  அமைந்­து­ வ­ரு­கின்­றமை கவ­லை­ய­ளிக்கும் விட­ய­மாக உள்­ளது. 

ஜனா­தி­பதி தேர்­தலில் புதிய ஜன­நா­யக முன்­ன­ணியின் வேட்­பா­ள­ராக  சஜித் பிரே­ம­தா­சவும் பொது­ஜன பெர­மு­ன­வின்­ வேட்­பா­ள­ராக கோத்­த­பாய ராஜ­ப­க்ஷவும் போட்­டி­யி­டு­கின்­றனர். இவர்கள் இரு­வரில் ஒரு­வரே ஜனா­தி­ப­தி­யாக தெரி­வு­செய்­யப்­ப­ட­வுள்ளார்.  இந்த நிலையில் கோத்­த­பாய ராஜ­­ப­க் ஷவுக்கு  ஈ.பி.டி.பி. உட்­பட  சில கட்­சிகள் ஆத­ரவு வழங்­கி­யி­ருந்­தன. 

ஜனா­தி­பதி தேர்­தலில் யாருக்கு ஆத­ரவு வழங்­கு­வது என்­பது தொடர்பில் தமிழ் தேசி­யக்­கட்­சிகள் ஒன்­றி­ணைந்து ஒரு­மித்த முடி­வினை எடுக்­க­வேண்டும் என்று  வலி­யு­றுத்­தப்­பட்டு வந்­தது. தமிழ் மக்­களின் பிரச்­சி­னைகள் தொடர்பில் பொது­வான நிலைப்­பா­டொன்­றுக்கு வந்து அத­ன­டிப்­ப­டையில் ஜனா­தி­பதி தேர்தல் தொடர்பில் முடி­வெ­டுக்­க­வேண்டும் என்ற நிலைப்­பாடு மேலோங்கி வந்­தது.  இவ்­வி­டயம் தொடர்பில் தமிழ் மக்கள் பேர­வை­யா­னது சுயா­தீன குழு­வொன்­றினை அமைத்து கட்­சி­களின் தலை­வர்­க­ளுடன்  கலந்­து­ரை­யா­டல்­களை மேற்­கொண்­டது. 

ஆனால்  தமிழ் மக்­களின் சார்பில் பொது­ வேட்­பாளர் ஒருவர்  நிய­மிக்­கப்­ப­ட­வேண்டும் என்ற தோர­ணை­யி­லேயே இந்­தக்­கு­ழு­வி­ன­ரது செயற்­பா­டுகள் அமைந்­தி­ருந்­தன.  இதனால்  இந்த முயற்சி கைகூடி­யி­ருக்­க­வில்லை. இதற்கு முன்னர் தமிழ் தேசிய பணிக்­கு­ழுவின்  தலை­வரும் முன்னாள் மேல்­மா­கா­ண­சபை உறுப்­பி­ன­ரு­மான நல்­லையா  கும­ர­கு­ரு­ப­ரனும் கட்­சி­களை ஒன்­றி­ணைத்து ஒரு­மித்த முடி­வுக்கு வரு­வது தொடர்பில் கலந்­து­ரை­யா­டல்­களை மேற்­கொண்­டி­ருந்தார். ஆனால் அந்த முயற்­சியும் பய­ன­ளிக்­க­வில்லை. 

இத­னைத்­தொ­டர்ந்தே யாழ்ப்­பாணம், மட்­டக்­க­ளப்பு பல்­க­லைக்­கழக மாணவர் ஒன்­றி­யத்­தினர்  ஆறு தமிழ் தேசிய கட்­சி­களின்  தலை­வர்­க­ளு­டனும் கலந்­து­ரை­யாடி  அவர்­களை சந்­திப்­ப­தற்கு  ஏற்­பாடு செய்­தனர்.  இத­ன­டிப்­ப­டையில் தமிழ் மக்­களின் பிரச்­சி­னைகள் தொடர்பில் பொது­வான நிலைப்­பா­டொன்­றுக்கு ஆறு கட்­சி­களும் வந்­த­துடன்  அவ்­விடயம் தொடர்பில் 13 அம்ச திட்­டமும் தயா­ரிக்­கப்­பட்­டி­ருந்­தது.  

இந்த முயற்சி நடை­பெற்று வந்­த­நி­லையில் கஜேந்­தி­ர­குமார் பொன்­னம்­பலம் தலை­மை­யி­லா­ன ­தமிழ் தேசிய மக்கள் முன்­னணி ஜனா­தி­பதி தேர்தல் தொடர்பில் தமது தீர்­மா­னத்தை  வெளி­யிட்­டி­ருந்­தது. தேர்­தலை தமிழ் மக்கள் பகிஷ்­க­ரிக்­க­வேண்டும் என்று அறி­விப்பை வெளி­யிட்­டது.  ஆனாலும்  ஆறு கட்சித் தலை­வர்­களின்  கலந்­து­ரை­யா­டல்­க­ளிலும்  இந்­தக்­கட்சி பங்­கேற்­றி­ருந்­தது. பின்னர் அந்த கலந்­து­ரை­யா­டல்­க­ளிலும் முரண்­பட்­டுக்­கொண்டு தமிழ் தேசிய மக்கள் முன்­னணி வெளி­யே­றி­யது. 

இந்த நிலையில் ஐந்து கட்­சிகள்  ஒன்­றி­ணைந்து 13 அம்ச  திட்­டங்­களின் அடிப்­ப­டையில் ஜனா­தி­பதி வேட்­பா­ளர்­க­ளுடன் பேசு­வ­தற்கு தீர்­மா­னிக்­கப்­பட்ட போதிலும் தென்­ப­கு­தியில்  மேற்­கொள்­ளப்­பட்ட இன­வாத பிர­சாரம் கார­ண­மாக அந்த  முயற்­சியும் வெற்­றி­ய­ளிக்­க­வில்லை.  ஐந்து கட்சி தலை­வர்­களும் சந்­தித்து அடுத்த கட்டம் குறித்து  ஆராய்ந்த நிலையில் நீதி­ய­ரசர்  விக்­கி­னேஸ்­வரன் தலை­மை­யி­லான  தமிழ் மக்கள் கூட்­ட­ணி­யா­னது முந்­திக்­கொண்டு ஜனா­தி­பதி தேர்தல் தொடர்பில் தமது கட்­சியின் முடிவை அறி­வித்­தி­ருந்­தது. 

இரு பிர­தான வேட்­பா­ளர்­களும் 13 அம்ச கோரிக்­கைகள் தொடர்பில் கவனம் செலுத்­தா­மை­யினால் எந்­த­வொரு சிங்­கள வேட்­பா­ள­ரையும் ஆத­ரிக்­கு­மாறு தம்மால் கோர முடி­யாது என்றும் மக்கள் விரும்­பி­ய­வாறு வாக்­க­ளிக்­கு­மாறும்  விக்­கி­னேஸ்­வரன் தனது நிலைப்­பாட்டை அறி­வித்­தி­ருந்தார்.  இதன் பின்னர் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பில் அங்கம் வகிக்கும்  இலங்கை தமி­ழ­ர­சுக்­கட்சி தனது முடிவை அறி­வித்­தது.  அதன்­பின்னர்  கூட்­ட­மைப்பில் அங்கம் வகிக்கும் ரெலோ, புௌாட் என்­ப­னவும் தனித்­த­னி­யாக முடி­வு­களை எடுத்­த­தை­ய­டுத்து தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்­பா­னது  புதிய ஜன­நா­யக முன்­ன­ணியின் வேட்­பாளர் சஜித் பிரே­ம­தா­ச­வுக்கு ஆத­ரவை தெரி­வித்­தி­ருந்­தது. 

சுரேஷ் பிரே­மச்­சந்­திரன் தலை­மை­யி­லான  ஈ.பி.ஆர்.எல்.எவ். கட்­சியும் 13 அம்ச கோரிக்­கைகள் தொடர்பில் பிர­தான வேட்­பா­ளர்கள் கலந்­து­ரை­யா­டா­மை­யினால் மக்கள் தமது விருப்­பப்­படி வாக்­க­ளிக்­கலாம் என்று தமது தீர்­மா­னத்தை அறி­வித்­தி­ருந்­தது. 

ஜனா­தி­பதி தேர்தல் அறி­வித்­த­வு­ட­னேயே  கூட்­ட­மைப்பில் அங்கம் வகிக்கும் ரெலோ கட்­சிக்குள் முரண்­பா­டான நிலைமை ஏற்­பட்­டி­ருந்­தது. அதன்  முக்­கி­யஸ்­த­ரான எம்.கே. சிவா­ஜி­லிங்கம் ஜனா­தி­பதி தேர்­தலில் தான் போட்­டி­யி­ட­வுள்­ள­தாக அறி­வித்­த­தை­ய­டுத்தே இந்த முரண்­பாடு உரு­வா­னது. ஆனாலும்  தனது முடிவில் விடாப்­பி­டி­யாக இருந்த சிவா­ஜி­லிங்கம் வேட்­பு­மனு தாக்கல் செய்­த­துடன் தமிழ் மக்கள் சார்­பி­லான பொது­வேட்­பாளர்  தானே என்றும் தனக்கே தமிழ் மக்கள் ஆத­ரவு தர­வேண்டும் என்றும் கோரிக்­கை­ வி­டுத்­தி­ருந்தார். 

சிவா­ஜி­லிங்­கத்தின் இந்த முடிவை ரெலோவின் தலை­மைக்­குழு கண்­டித்­த­துடன் அவர் போட்­டி­யிலி­ருந்து  வில­கு­வ­தற்­கான கால அவ­கா­சத்­தையும் வழங்­கி­யி­ருந்­தது. கட்­சியின் தலைமை நட­வ­டிக்கை எடுப்­ப­தற்கு முன்­னரே தான் கட்­சியின் பொறுப்­புக்­க­ளி­லி­ருந்து வில­கிக்­கொள்­வ­தாக சிவா­ஜி­லிங்கம் அறி­வித்­தி­ருந்தார். 

இவ்­வா­றான நிலை­யில்தான் கடந்த 6ஆம் திகதி வவு­னி­யாவில் ரெலோவின் தலை­மைக்­குழு கூடி சஜித் பிரே­ம­தா­ஸ­விற்கு ஆத­ரவு வழங்­கு­வ­தாக முடிவு எடுக்­கப்­பட்­டி­ருந்­தது.  இந்த முடிவு எடுக்­கப்­பட்டு சில தினங்­களில் ரெலோவின் செய­லாளர்  என் சிறி­காந்தா தலை­மையில் யாழ்ப்­பா­ணத்தில் கூடிய ரெலோவின் யாழ். மாவட்ட  குழுக்­கூட்­டத்தில் இந்த தேர்­தலில் சஜித் பிரே­ம­தா­சவை  தாம் ஆத­ரிப்­ப­தில்லை என்றும்  சிவா­ஜி­லிங்­கத்­திற்கே தமது ஆத­ரவு எனவும் தீர்­மானம்  எடுக்­கப்­பட்­ட­தாக அறி­விக்­கப்­பட்­டது. 

சிறி­காந்தா தலை­மை­யி­லான யாழ். மாவட்ட  ரெலோவின் முடி­வா­னது பெரும் சர்ச்­சையை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது. இந்த விடயம் தொடர்பில் கட்­சியின்  தலைவர் பாரா­ளு­மன்ற உறுப்­பினர்  செல்வம் அடைக்­க­ல­நாதன்  நேற்று முன்­தினம் அறிக்­கை­யொன்றை விடுத்­தி­ருந்தார். கட்சி கட்­டுப்­பாட்டை மீறி தேர்­தலில் போட்­டி­யிடும் சிவா­ஜி­லிங்­கத்தை ஆத­ரிப்­பது என யாழ். மாவட்ட  குழு எடுத்த முடி­வா­னது ஏற்­றுக்­கொள்­ளக்­கூ­டி­ய­தல்ல.  கட்­சியின்  தலை­மைக்­குழு எடுத்த முடி­வுக்கு மாறாக தீர்­மானம் நிறை­வேற்­றி­ய­வர்கள் மீதும் அதற்கு ஆத­ர­வாக  செயற்­படும் கட்சி அங்­கத்­த­வர்கள் மீதும் கட்­சி­யா­னது யாப்பு விதி­க­ளுக்கு அமைய நட­வ­டிக்கை எடுக்கும் என்று தெரி­வித்­தி­ருக்­கின்றார். 

இதி­லி­ருந்து  ஜனா­தி­பதி தேர்தல் விட­யத்தில்  ரெலோ­விற்குள் பிரி­வினை ஏற்­பட்­டுள்­ளமை நன்கு புல­னா­கின்­றது.  ரெலோவைப் பொறுத்­த­வ­ரையில் ஒவ்­வொரு தேர்­தல்­க­ளிலும் இவ்­வா­றான முரண்­பா­டுகள் ஏற்­ப­டு­கின்­றமை  வர­லா­றாக உள்­ளது.  

2010 ஆம் ஆண்டு நடை­பெற்ற ஜனா­தி­பதி தேர்­தலில் ரெலோவின் முக்­கி­யஸ்­த­ரான எம்.கே. சிவா­ஜி­லிங்கம்  போட்­டி­யிட்­டி­ருந்தார்.  இவர் போட்­டி­யிட்டு 9ஆயிரம் வாக்­குகள் வரையில் பெற்­றி­ருந்தார். அப்­போது  தற்­போ­தைய கட்­சியின் செய­லா­ள­ரான ஸ்ரீகாந்­தாவும் இவ­ருடன் இணைந்து செயற்­பட்­டி­ருந்தார்.  அந்த தேர்­தலில் மஹிந்த ராஜ­­ப­க்ஷவும்  சரத் பொன்­சே­காவும்  போட்­டி­யிட்­டி­ருந்­தனர்.  வாக்­கு­களை பிரிக்கும் வகை­யி­லேயே இவர்கள் அந்தத் தேர்­தலில் செயற்­பட்­டி­ருந்­தனர்.  

இதே­போன்றே கடந்த பாரா­ளு­மன்றத் தேர்­த­லிலும்  முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­­ப­க்ஷ குரு­நாகல் மாவட்­டத்தில் போட்­டி­யிட்­டி­ருந்­த­போது  அவ­ருக்கு எதி­ராக கள­மி­றங்­கு­வ­தாக கூறி குரு­ணா­கலில் சிவா­ஜி­லிங்கம்  போட்டியிட்டிருந்தார். 

 தற்போது  மீண்டும் இந்த ஜனாதிபதி தேர்தலிலும் அவர் களமிறங்கி­யுள்ளதுடன்  அவருக்கு ஆதரவாக யாழ்ப்பாண  கிளையும் தீர்மானம்  எடுத்திருக்கின்றது.  ரெலோவின் இத்தகைய செயற்பாடானது தமிழ் மக்களின் வாக்குகளை  சிதறடிப்பதற்கே உதவுமே தவிர தமிழ் மக்களின் அரசியல்  எதிர்காலத்திற்கு எந்தவகையிலும் நன்மையாக அமையப்போவதில்லை.  

தமிழ் மக்கள் இந்தத் தேர்­தலில்  தீர்க்­க­மான முடி­வினை எடுக்க வேண்­டிய சூழ்­நி­லையில் தேர்­தலை  பகிஷ்­க­ரிக்­கு­மாறு தமிழ் தேசிய மக்கள் முன்­ன­ணியும்  யாருக்கு ஆத­ரவு என்ற விட­யத்தில் ரெலோ­வுக்குள் ஏற்­பட்­டி­ருக்கும் முரண்­பா­டு­களும் ஏனைய கட்­சி­க­ளான  தமிழ் மக்கள் கூட்­டணி,  ஈ.பி.ஆர்.எல்.எப்.பின் உறு­தி­யற்ற செயற்­பா­டு­களும்  தமிழ் மக்­களின் வாக்­கு­களை  சித­ற­டிப்­ப­தற்கே உதவும்.  எனவே  இந்த விட­யத்தை கருத்தில் கொண்டு தமது ஜன­நா­யக உரி­மை­யான வாக்­கு­களை உரிய வகையில் பயன்­ப­டுத்த தமிழ் மக்கள்  முன்வரவேண்டியது அவசியம் என்பதை வலியுறுத்த விரும்புகின்றோம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வதேச சமூகத்திடமிருந்து ஆதரவை பெறுதல்

2024-12-11 11:18:31
news-image

இனவாதத்தை ஒழிப்பது குறித்த அரசாங்கத்தின் கருத்துக்களும்...

2024-12-11 11:05:09
news-image

இலங்கையை அதிர்ச்சிக்குள்ளாகிய விமான விபத்து -...

2024-12-10 12:27:56
news-image

மாகாணசபை தேர்தல்களை நடத்துவதற்கு குறுக்கே நிற்கும்...

2024-12-10 09:04:49
news-image

தமிழரசு கட்சி மட்டக்களப்பில் பெற்ற பெருவெற்றியும்...

2024-12-09 10:45:04
news-image

அசாத் எங்கே – மர்மத்தை தீர்த்துவைத்தது...

2024-12-09 09:48:21
news-image

ஐந்தாண்டுகளுக்கு ஆளுகை தொடரும் - பிரதியமைச்சர்...

2024-12-08 15:45:45
news-image

ரஷ்ய-உக்ரேன் போர் முனைக்கு வலிந்து தள்ளப்பட்டுள்ள...

2024-12-08 15:48:28
news-image

அநுர அரசின் அணுகுமுறை தமிழ் கட்சிகளை...

2024-12-08 12:41:32
news-image

கல்முனை விவகாரம் பிச்சைக்காரன் புண்ணாக தொடரக்...

2024-12-07 11:51:32
news-image

பங்களாதேஷில் தொடரும் வன்முறை : சிறுபான்மையினருக்கு...

2024-12-08 15:49:06
news-image

மிரட்டப்படும் எதிர்க்கட்சிகள்

2024-12-07 11:12:36