செல்டா விகோ அணிக்கெதிரான ஆட்டத்தில் மெஸ்ஸி ஹெட்ரிக் கோல் அடித்து கைகொடுக்க பார்சிலோனா 4-–1 என்ற கோல்கள் அடிப்படையில் எளிதில் வெற்றி பெற்றது.
லா லிகா கால்பந்து லீக்கில் நேற்று முன்தினம் நள்ளிரவு நடைபெற்ற ஆட்டத்தில் புகழ்பெற்ற கழக அணியான பார்சிலோனா, செல்டா விகோ அணியை எதிர்கொண்டது.
சொந்த மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் பார்சிலோனா ஆதிக்கம் செலுத்தியது. 23-ஆவது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பைப் பயன்படுத்தி மெஸ்ஸி முதல் கோலை பதிவு செய்தார். 42ஆ-வது நிமிடத்தில் செல்டா விகோ ஒரு கோல் அடித்தது. இதனால் 1–-1 என சமநிலை யில் இருந்தது.
முதல் பாதி நேர ஆட்டம் முடிவடைவதற்கு சற்று முன் (45+1) மேலும் ஒரு கோல் அடித்தார். இதனால் பார்சிலோனா முதல் பாதி நேரத்தில் 2–-1 என முன்னிலை பெற்றது.
2ஆ-வது பாதி நேர ஆட் டம் தொடங்கியதும் 3-ஆவது நிமிடத்தில், அதாவது ஆட்டத்தின் 48 ஆவது நிமிடத்தில் மெஸ்ஸி ஹெட் ரிக் கோலை பதிவு செய்தார். 85ஆ-வது நிமிடத்தில் செர்ஜியோ பஸ்குயட்ஸ் ஒரு கோல் அடிக்க பார்சிலோனா 4–-1 என வெற்றி பெற்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM