சஜித்தின் தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் மலை­யக மக்­களின் நல­னுக்­காக பல்­வேறு செயற்றிட்­டங்கள் - இராதாகிருஷ்ணன்

Published By: Digital Desk 3

12 Nov, 2019 | 10:50 AM
image

(ஆர்.விதுஷா)

புதிய  ஜன­நா­யக  முன்­ன­ணியின்  ஜனா­தி­பதி வேட்­பாளர் சஜித் பிரே­ம­தா­சவின் தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் மலை­யக  மக்­க­ளு­டைய நல­னுக்­கான பல்­வேறு திட்­டங்கள் முன்­வைக்­கப்­பட்­டுள்­ள­தாக மலை­யக மக்கள் முன்­ன­ணியின் தலை­வரும் விசேட பிர­தே­சங்கள் அபி­வி­ருத்தி அமைச்­ச­ரு­மான வீ. இரா­தா­கி­ருஷ்ணன் தெரி­வித்தார்.

 பெருந்­தோட்ட அபி­வி­ருத்தி தொடர்­பான கலந்­து­ரை­யா­ட­லொன்று நேற்று  கொழும்பு ஜானகி ஹோட்­டலில் இடம்­பெற்­றது.  அந்த கலந்­து­ரை­யா­டலில் உரை­யாற்­றி­ய­போதே இவ்­வாறு தெரி­வித்தார்.

அங்கு  அவர்  மேலும்  கூறி­ய­தா­வது, 

ஜனா­தி­பதி வேட்­பாளர் சஜித் பிரே­ம­தா­சவின் தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் மலை­யக மக்­க­ளு­டைய  நல­னுக்­கான  பல்­வேறு  திட்­டங்கள் வகுக்­கப்­பட்­டுள்­ளன. அவற்றில் ஒன்று  தான்  ஒரு தொழி­லா­ளிக்கு நாளாந்த வேத­ன­மாக 1500  ரூபா­வினை  பெற்­றுக்­கொ­டுத்தல்.  அதேபோல்,  அவர்­க­ளு­டைய    வாழ்க்கை  தரா­த­ரத்தை உயர்த்தி அனை­வ­ருக்கும்  வீடு  என்னும் திட்­டமும் உள்­ள­டக்­கப்­பட்­டுள்­ளது.  மலை­யக  தொழி­லா­ளர்­க­ளையும் தேசிய நீரோட்­டத்தில்  இணைத்தல்  என்­பதும்  இங்கு  குறிப்­பி­டத்­தக்க விட­ய­மாகும்.  

மலை­யக மக்கள்  பல்­வேறு  பட்ட  பிரச்­சி­னை­களை எதிர்­கொண்டு வரு­கின்­றனர்.  அது தொடர்பில் சிந்­தித்து செயற்­பட  வேண்­டி­யதும்  அதனை தீர்த்து வைக்க  வேண்­டி­யதும்  அவ­சி­ய­மா­ன­தாகும். அதற்­காக  அவர்­க­ளுக்கு  சிறந்த கல்­வியை  பெற்­றுக்­கொ­டுக்க  வேண்­டி­யது  முக்­கி­யத்­துவம் வாய்ந்த  விட­ய­மாகும். 

அதற்­காக   தற்­போ­தைய  அர­சாங்­கத்­தினால்  பல்­வேறு  திட்­டங்கள்  முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருந்­தன.  அதன்  ஊடாக  பல  பாட­சா­லை­களை  உரு­வாக்­கி­யுள்ளோம்.  

விஞ்­ஞான, கணித  பாடங்­களை  கற்­பிக்க  கூடிய  வகை­யி­லான பாட­சா­லை­களை உரு­வாக்­கு­வ­தற்­கான  நட­­வடிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளன.  தற்­போது மலை­ய­கத்­துக்கு பல்­க­லைக்­க­ழ­க­மொன்றை கொண்­டு­வ­ரு­வ­தற்கு எதிர்­பார்த்­துள்ளோம். 

சில முன்­னேற்­ற­க­ர­மான வேலைத்­திட்­டங்கள் 52  நாள்  அர­சியல் நெருக்­க­டி­யினால் தடைப்­பட்­டன. முன்னாள்  ஜனா­தி­பதி  ரண­சிங்க  பிரே­ம­தா­சவின் காலத்தில் தான்  மலை­யக  மக்­க­ளுக்கு  குடி­யு­ரிமை  வழங்­கப்­பட்­டது. அவர்கள்  வாக்­க­ளிப்­ப­தற்­கான உரி­மையும்  பெற்­றுக்­கொ­டுக்­கப்­பட்­டது.  ஆகவே தான் தற்­போது  மலை­யக  மக்­க­ளுக்கு  எதிர்­கால   ஜனா­தி­ப­தியை  தெரிவு  செய்­வ­தற்­கான  உரிமை  கிடைக்­கப்­பெற்­றுள்­ளது.    தமிழ்  தேசிய  கூட்டமைப்பு  புதிய  ஜனநாயக  முன்னணியின்  ஜனாதிபதி வேட்பாளர் சஜித்  பிரேமதாசவுக்கு ஆதரவை  வழங்க  தீர்மானித்துள்ள நிலையில் அவர்களுக்கு  சேறுபூசும்  வகையிலான  செயற்பாடுகளை சிலர்  மேற்கொண்டு வருகின்றனர்.  அவ்வாறான செயற்பாடுகள்  உடனடியாக  நிறுத்தப்பட  வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19