கிளிநொச்சி மலையாளபுரம் கிராமத்தில் பாம்பு கடிக்கு இலக்கான கிராம அலுவலரின் ஒரேயொரு மகனின் மரணம் கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த சம்பவம் நேற்று10.11.2019 இரவு இடம்பெற்றுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர் .
நேற்று இரவு குறித்த சிறுவன் படுக்கை அறைக்கு சென்று கட்டிலில் உறங்கிய சிறிது நேரத்துக்குப் பின்னர் வீட்டுக்குள் இருந்து வெளியேறிய கண்டங்கருவளை இனப் பாம்பு ஒன்றை தந்தை அடித்து கொன்றுள்ளார்.
இதன் பின்னர் சிறுவன் மீண்டும் உறக்கத்துக்கு சென்றுவிட்டார் பின்னர் அதி காலையில் மகனை எழுப்பியபோது மகன் நினைவற்று இருந்ததை அவதானித்த பெற்றோர் உடனடியாகக் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.
அங்கு சிறுவனின் உடலை பரிசோதித்த வைத்தியர்கள் சிறுவன் இறந்ததை உறுதி செய்துள்ளனர் இதன் பின்னர் இடம்பெற்ற உடற்கூற்றுப் பரிசோதனையில் குறித்த சிறுவன் பாம்பு தீண்டி இறந்து விட்டான் என்பதை உறுதி செய்துள்ளனர்.
குறித்த மூன்று வயது சிறுவன் பெற்றோருக்கு ஒரே ஒரே மகன் என்பது குறிப்பிடதக்கது
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM