சமூகத்துக்கான பங்களிப்பை அங்கீகரித்து மாமனிதர் ரவிராஜ் ஞாபகார்த்த விருதுகள் 

Published By: Digital Desk 4

11 Nov, 2019 | 11:13 AM
image

சுட்டுக்கொல்லப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் மாமனிதர் நடராஜா ரவிராஜின் 13ம் ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு நேற்று (10) சாவகச்சேரியில் இடம்பெற்ற ரவிராஜ் நினைவுப் பேருரையின் போது இரண்டு தனிநபர்கள் மற்றும் இணைய நிறுவனம் ஒன்றுக்கும் விருதுகள் வழங்கி வைக்கப்பட்டன.

அரசியல் சட்டம் மற்றும் சமாதானத்தைக் கட்டியெழுப்புதலுக்கான ரவிராஜ் நிறுவனத்தினால் சமூகத்துக்கான பங்களிப்பை அங்கீரித்து அமரர் ந.ரவிராஜ் ஞாபகார்த்த விருதாக இந்த மூன்று விருதுகளும் வழங்கப்பட்டன.

இந்த விருதுகளை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும், அதற்கான சான்றிதழ்களை இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவும் வழங்கி வைத்திருந்தனர்.

இந்த விருது வழங்கல் நிகழ்வில், முதலாவதாக சிவசிறி விக்னராஜா ஐயர் பாலகுமார குருக்களுக்கு நீராவியடிப் பிள்ளையார் ஆலயம், கன்னியா வெந்நீருற்று பிள்ளையார் ஆலயம் உள்ளிட்ட ஆலயங்களை பாதுகாப்பதற்கான செயற்பாடுகளை மேற்கோளிட்டு "சைவத் தமிழ் மரபுரிமை காவலுக்கான விருது" வழங்கப்பட்டது.

இரண்டாவதாக தசைத் திறன் குறைபாடு நோயினால் பாதிக்கப்பட்டவரான சுயாதீன ஊடகவியலாளர் ஞானப்பிரகாசம் பிரகாசுக்கு முகநூலில் பலரையும் ஒருங்கிணைத்து அநீதிக்கு எதிரான போராட்டங்களை நடத்தியவர் என்பதை மேற்கோள்காட்டி "சமூக ஊடகங்கள் மூலம் ஒருங்கிணைப்பு செயற்பாடு விருது" வழங்கப்பட்டது.

மூன்றாவதாக ஊறுகாய் இணைய ஊடகத்தின் இயக்குனர் நந்தகுமார் சஞ்சை மற்றும் "நந்திக்கடல் பேசுகிறது" நூலின் தொகுப்பாளரான ஊடகவியலாளர் ஜெரா தம்பி ஆகியோருக்கு நந்திக்கடல் பேசுகிறது நூலை வெளியிட்டமைக்காக "போருக்கு பின்னரான ஆவணப்படுத்தல் விருது" வழங்கி வைக்கப்பட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

குளோபல் ஆர்ட்ஸ் சர்வதேச நடன திருவிழா...

2025-02-07 19:48:31
news-image

ஆழ்வாப்பிள்ளை கந்தசாமியின் பவள விழா

2025-02-07 14:34:55
news-image

சதன்யன் அசோகனின் மிருதங்க அரங்கேற்றம்

2025-02-07 14:38:23
news-image

இந்திய தொழில்நுட்ப, பொருளாதார ஒத்துழைப்பு திட்டத்தின்...

2025-02-07 11:02:30
news-image

“நாட்டிய கலா மந்திர்” மாணவியர்களான அக்ரிதி,...

2025-02-06 18:49:46
news-image

திருக்கோணேச்சரம் ஆலயத்தின் பொதுச்சபை கூட்டம்

2025-02-06 17:37:04
news-image

மூவ் கல்குடா டைவர்ஸ் அனர்த்த அவசரப்...

2025-02-06 12:07:16
news-image

கொழும்பில் இந்தியாவின் சர்வதேச “பாரத் ரங்...

2025-02-05 22:17:16
news-image

160ஆவது ஆண்டு விழா கொண்டாட்டங்களை ஆரம்பித்த...

2025-02-04 17:42:17
news-image

கலாசார போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு

2025-02-03 20:07:59
news-image

திருகோணமலை மடத்தடி ஸ்ரீ கிருஷ்ண பகவான்...

2025-02-03 13:51:47
news-image

திருகோணமலையில் மலேசிய எழுத்தாளர் பெருமாள் இராஜேந்திரனின்...

2025-02-03 12:19:02