சிறுபான்மை மக்கள் நிம்மதியாக வாழ வேண்டுமானால் சஜித் பிரேமதாசவிற்கே வாக்களிக்க வேண்டும். இந்த நாட்டில் அண்மையில் ஏற்பட்ட கலவரங்களின் போது சிறுபான்மை மக்களை காப்பாற்றிய பெருமை ஐக்கிய தேசிய கட்சி யைச் சார்ந்தாக இருந்தது.
பிரச்சினைகளை பின்புறமாக இருந்து உருவாக்கியவர்கள் எதிரணியில் தற்போது ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளருக்கு வாக்குக் கேட்கின்றார்கள் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சருமான வே. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து கொத்மலை ஹப்புகஸ்தலாவ பகுதியில் நேற்று முன்தினம் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக்கூட்டத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
அண்மையில் ஏற்பட்ட கலவரங்களினால் முஸ்லிம் மக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்தனர். இதனாலேயே முஸ்லிம் அமைச்சர்கள் ஒன்றாக விலகினர். பின் நிரபராதிகள் என்றதும் மீண்டும் இணைந்துகொண்டனர். சஹ்ரான் என்ற தீவிரவாதியை வளர்த்தெடுத்த பெருமை எதிர்க்கட்சியினரையே சாரும். அன்று ஐக்கிய தேசிய கட்சி எங்களை காப்பாற்றியது. குறுகிய காலத்தில் சம்பந்தப்பட்டவர்களை கைதுசெய்து சட்ட நடவடிக்கை எடுத்து தற்போது சுமுகமான நிலைமை நிலவி வருகின்றது. இதற்கு காரணம் ஐக்கிய தேசிய கட்சியே.
அந்த வகையில் சிறுபான்மை மக்க ளுக்கு ஐ.தே.கட்சி பாதுகாப்பான ஒரு கட்சியாகும். ஆகையால் அனைவரும் அன்னம் சின்னத்திற்கு வாக்களித்து சஜித் பிரேமதாசவை வெற்றி பெறச்செய்ய வேண் டும் எனவும் கூறினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM