(செ.தேன்மொழி)
உள்நாட்டு யுத்தம் முடிவுற்றதன் பின்னர் முன்னைய ஆட்சியாளர்கள் பிரபாகரனுக்கு சொந்தமான பல சொத்துக்களை கொள்ளையிட்டதாக, வெள்ளை வேனில் கடத்திக் கொலை செய்ய முயற்சிக்கப்பட்டதாக கூறப்படும் முச்சக்கர வண்டி சாரதியான அத்துல சஞ்சீவ மதநாயக்க என்பவர் தெரிவித்தார்.
கிருளப்பனையில் அமைந்துள்ள ஜனநாயக தேசிய அமைப்பு காரியாலயத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை சுகாதார அமை ச்சர் ராஜித சேனாரத்னவின் தலைமையில் விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்று இடம்பெற்றது. அந்த செய்தியாளர் மாநாட் டில் கலந்துகொண்ட அத்துல சஞ்சீவ மதநாயக்க இந்த தகவல்களை வெளிப்படுத்தினார்.
இவர் மேலும் குறிப்பிடுகையில்,
விடுதலைப் புலிகளின் தலைவரான பிரபாகரனின் பெருந்தொகையான சொத்துக்களை முன்னைய ஆட்சியாளர்கள் கொள்ளையிட்டனர். முன்னைய ஆட்சியின் பாதுகாப்பு அதிகாரியின் ஆலோசனையின் பெயரிலே இந்த கொள்ளைத் திட்டங்கள் செயற்படுத்தப்பட்டன.
இவ்வாறு பிரபாகரனுக்கு சொந்தமான 80 இலட்சம் பெறுமதியான யூரோக்களும், 200 கிராம் தங்க கூறுகள் இரண்டும் நகை விற்பனை நிலையமொன்றில் விற்பனை செய்வதற்காக யாழில் இருந்து நபரொருவரால் எடுத்துவரப்பட்டன. இந்த விடயத்தை அறிந்த அந்த விற்பனை நிலையத்தின் ஊழியர் ஒருவர் எனக்குத் தெரிவித்தார். இதனைக் கொள்ளையிட்டால் எமக்கு பெருந்தொகையான பணத்தை பெற்றுக்கொள்ள முடியும் என்றார். பின்னர் நான் அந்த பணத்தையும், தங்கத்தையும் கொண்டு வந்த நபரிடமிருந்து அவற்றை கொள்ளையிட்டேன்.
இந்த விடயம் தொடர்பில் தெரியவந்ததை அடுத்தே முன்னைய அரசின் பாதுகாப்பு அதிகாரி என்னை கடத்துமாறு அறிவுறுத்தியுள்ளார்.பின்னர் சிலர் என்னை கடத்திச் சென்று மறைத்து வைத்திருந்தனர். அப்போது அவர்கள் எனது புகைப்படத்தை காண்பித்து 'நீதானே இது' என்று கேட்டார்கள். பின்னர் தொலைபேசியில் ஒருவரை தொடர்புகொண்டு 'சேர் நீங்கள் கூறிய நபரை கடத்தி விட்டோம்' என்று தெரிவித்தார்கள்.
இதன்போது அவர்கள் எனக்கு தேநீரும், தண்ணீரும் பருகக் கொடுத்தார்கள். நான் அவர்களிடம் இறுதியாக ஒரு தடவை என் மனைவியிடம் பேச அனுமதி தாருங்கள் என்று கேட்டேன். அதற்கு அவர்கள் அனுமதி வழங்கினர். நான் என் மனைவியை தொடர்பு கொண்டு 'நான் மீண்டும் வருவேனா என்று சொல்ல முடியாது அதனால் நீ பிள்ளைகளுடன் கவனமாய் இரு' என்று கூறிவிட்டு அழைப்பைத் துண்டித்து விட் டேன்.
மறுநாள் காலை மீண்டும் எனது முகத்தை மூடி வேறொரு இடத்திற்கு அழைத்து வந்தார்கள், பத்தரமுல்லை பகுதிக்கே இவ்வாறு என்னை அழைத்து வந்தனர். அங்குள்ள பெரிய மாளிகை ஒன்றில் நான் 17 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டேன். பிறகு ஒருவர் வந்து நாங்கள் யார் என்று தெரியுமா? ஏன் உன்னை கடத்தி வைத்துள்ளோம் என்று தெரியுமா என்று கேட்டார்கள். குறித்த பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தானே என்னை கடத்தச் சொன்னார் என்று நான் கேட்டேன். ஆம் ஏன் கடத்த சொன்னார் என்று தெரியுமா? என்று அவர்கள் கேட்டார்கள். பின் னர் நான் யாழில் இருந்து கொண்டு வரப்பட்ட பணத்தையும் நகையையும் கொள்ளையிட்டதினால்தானே என்னைக் கடத்தியுள்ளீர்கள் என்று கேட்டேன். ஆம் அதற்காக தான் கடத்தியுள்ளோம். நாங்கள் யார் தெரியுமா? நாங்கள் பயங்கரவாத விசாரணைப்பிரிவினர். பயங்கர வாத தடுப்பு சட்டத்தின் கீழே நீ கைது செய்யப்பட்டுள்ளாய் என்று கூறினார்கள்.
பின்னர் அவர்களுக்கு என்னை நீதி மன்றத்தில் ஆஜர்படுத்துங்கள் என்று தெரிவித்தேன். ஆனால் அவர்கள் என்னை அந்த மாளிகையில் 17 நாட்கள் தடுத்து வைத்தனர். இதன்போது எனது மனைவி இந்த கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய மற்றையவர்களும் சட்டதரணியின் மூலம் மன்றில் ஆஜராகியதை அடுத்து பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் என்னை கொலை செய்யாமல் தெமட்டகொட குற்றத்தடுப்பு பிரிவினரிடம் என்னை ஒப்படைத்தனர்.
பின்னர் நான் சிறைவைக்கப்பட்டு கடந்த மார்ச் மாதம் 29 ஆம் திகதியே சரீர பிணையில் விடுவிக்கப்பட்டேன். இந்த விவகாரம் தொடர்பில் எனக்கு தகவலை வழங்கியவர் நான் கடத்தப்பட்டேன் என்று தெரிந்தவுடன் இந்தியாவுக்கு தப்பிச் சென்று விட்டார். கொள்ளைச் சம்பவம் தொடர்பில் எனக்கு எதிராக வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வருகின்ற போதிலும். இந்த சொத்துகள் தொடர்பில் தகவல்கள் வழங்கப்பட வேண்டும் என்பதினால் நான் துப்பாக்கி மற்றும் கைக்குண்டுகளுடன் கைதுசெய்யப்பட்டதாக ஆவணங்கள் மாற்றியமைக்கப்பட்டு அதில் முன்னாள் ஜனாதிபதி கையொப்பமிட்டுள்ளார். இவ் வாறு துப்பாக்கிகள் மற்றும் கைக்குண்டுகளை வைத்திருந்தவர்கள் யாராவது வெறும் சரீர பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்களா? இவர்கள் அந்த பணத்தை கொள்ளையிட்டு விட்டு அதனை மறைப்பதற்காகவே இவ் வாறான சூழ்ச்சியை செய்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM