கிளிநொச்சியில் வாள்வெட்டு - நால்வர் வைத்தியசாலையில்

Published By: Digital Desk 4

10 Nov, 2019 | 12:42 PM
image

கிளிநொச்சி தட்டுவன் கொட்டி பகுதியில் வாள்வெட்டுச்சம்பவம்  ஒன்று இடம்பெற்றுள்ளது, குறித்த வாள்வெட்டு சம்பவத்தில் நால்வர் படுகாயம் அடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

குறித்த பகுதியில் உள்ள கிராம சேவையாளர் ஒருவரின் சகோதரர்கள் மற்றும் உறவினர்களே இவ்வாறு வாள்வெட்டுக்கு இலக்காகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த கிராம சேவையாளர் அப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டுவரும் சட்டவிரோத மண்ணகழ்வு தொடர்பில் தொடர்ச்சியாக மேற்கொண்ட தடுக்கும் நடவடிக்கையின் உச்ச கட்டத்திலேயே இவ்வாறு வாள்வெட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. நேற்று பிற்பகல் 11 மணியளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. அப்பகுதியில் அநாமதேயமாக சுமார் ஏழுபேர் கொண்ட குழுவினர்  நடமாடியுள்ளனர். 

சிறிது நேரத்தின் பின்னர் குறித்த வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த நபர்கள் மீது வாள்களினால் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர். இதன்போது கிராம சேவையாளரின் இரு சகுாதரர்கள் மற்றும் சகோதரியின் கணவர் ஒன்றுவிட்ட சகுாதரர் ஆகியோரே இவ்வாறு வாள்வெட்டுக்கு இலக்காகி கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

சம்பவம் கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தட்டுவன் கொட்டி பகுதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தை தொடர்ந்து குறித்த வீட்டை இலக்கு வைத்து கண்ணாடி போத்தல்களாலும் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை கடந்த 08.09.2019 அன்று குறித்த கிராமசேவையாளரை தாக்கியமை தொடர்பில் கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு தொடர்ந்தும் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. 

இந்த நிலையில் நேற்று இரவு குறித்த மற்றுமொரு சம்பவம் பதிவாகியுள்ளது. குறித்த பகுதியில் கடமையாற்றிய கிராமசேவையாளர் அச்சம் காரணமாக வேறு இடத்தில் கடமை செய்து வரும் அதேவேளை, பிரிதொரு இடத்தில் தங்கி கடமைகளை செய்து வருகின்றார். அப்பகுதியில் காணப்படும் தொடர்ச்சியான அச்சுறுத்தல் காரணமாகவே இவ்வாறு பிரிதொரு இடத்தில் வாழவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அக்கிராமசேவையாளர் தெரிவிக்கின்றார். அங்கு நின்ற வாகனம் மீதும் தாக்குதல் இடம்பெற்றது.

குறித்த பகுதியில் தொடர்ச்சியாக அதிகளவான மணல் சூரையாடப்பட்டு வெளி மாவட்டங்களிற்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் குறித்த பகுதியில் கடமையாற்றிவந்த அதே பிரதேசத்தை சேர்ந்த குறித்த கிராம சேவையாளர் தடுக்கும் நடவடிக்கைகளை தொடர்ச்சியாக முன்னெடுத்தார். பொலிசாருடன் இணைந்து சட்டவிரோத செயற்பாடுகளை தடுத்து வந்த நிலையில் குறிதத் கிராம சேவையாளரிற்கு அப்பகுதி மக்கள் சிலரால் தொடர் அச்சுறுத்தல் காணப்பட்டது. இந்த நிலையில் அவருடை குடும்பமும் தற்போது பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கதாகும்.

இந்த நிலையில், நேர்மையான முறையில் தமது கடமைகளை நிறைவேற்றும் அதிகாரிகளிற்கு பாதுகாப்பற்ற நிலை தற்போது கிளிநொச்சி மாவட்டத்தில் காணப்படும் அதேவேளை, சட்டவிரோத செயற்பாடுகளை தடுக்க முற்படும் சமூக ஆர்வலர்கள் மீதும் இவ்வாறான அச்சுறுத்தல் காணப்படுகின்றது. 

எனவே இவ்வாறான நிலையில், நேர்மையான அதிகாரிகள், சாட்சியாளர்களை அச்சுறுத்தும் செயற்பாடுகளை கட்டுப்படுத்தும் வகையில் பொலிசார் கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமு் என புத்திஜீவிகள் தெரிவிக்கின்றனர். இந்த நிலை தொடரும் பட்சத்தில் சட்ட விரோத செயற்பாடுகள் மேலும் அதிகரிக்கும் வாய்ப்புக்கள் காணப்படும் அதேவேளை, அதிகாரிகளும், சாட்சியாளர்களும் அச்சம் காரணமாக தமது செயற்பாடுகளை முன்னெடுப்பத தவிர்க்க வேண்டி நிலை ஏற்படும் எனவும் சமூக ஆர்வலர்கள். தெரிவிக்கின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47