(எம்.நியுட்டன்)
தமிழ் தேசியக் கூட்டமைப்பு சரியானமுடிவைத்தான் எடுத்து மக்களுக்கு அறிவித்துள்ளது எமக்குள்ள கடமையை நாங்கள் சரியாகச் செய்துள்ளோம் என இலங்கை தமிழரசு கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிறாஜா தெரிவித்தார்.
ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக தமிழ்தேசியக் கூட்டமைப்பு எடுத்துள்ள முடிவுகள் மற்றும் பல்கலைகழக மாணவர்களின் ஒருமைப்பாடுகள் தொடர்பாக கேட்டபோதே அவர் இதனைத் தெரிவித்தார்
அவர் மேலும் தொரிவிக்கையில்
மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்கள் நாங்கள் சிந்தித்துதான் முடிவுகள் எடுத்துள்ளோம் மற்ரவர்கள்போல் நாம் செயற்பட முடியாது.
பல்கலைக்கழக மாணவர்கள் முன்னேடுத்த முடிவுகளுக்கு கூட நாங்கள் நிதானமாகவே செயற்பட்டோம் நாங்கள் முடிவுகளையோ அறிக்கைகளையோ விட்டுவிட்டு மாணவர்களின் சந்திப்புகளுக்கு வரவில்லை வாக்கு உரிமையை கருத்தில் எடுத்து நாம் ஒன்று கூடினோம் தீர்மானங்கள் ஏடுத்தோம். அதனை வைத்து முன்னகர்தினோம் பேச்சுவார்த்தைகள் நடாத்தினோம் என தெரவித்தார்.
ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் எதுவும் கூறவில்லை ஏன்றார்கள் தற்போது புதிய ஜனநாயக முன்னணிக்கு ஆதரவளித்து விட்டு அவர்களின் மேடைகளில் ஏறவில்லையேன கூறுகிறார்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ன செய்கின்றது ஏன்பதைப்பார்த்து சிலரும் தமக்கு சாதகமாக விடயங்களை செய்வதற்கு பார்த்துக் கொண்டிருக்கிறார் நாங்கள் மேடைகளில் ஏறித்தான் ஆதரவு திரட்டவேண்டும் என்றில்லை நாங்கள் எமது நிர்வாகத்திற்குட்பட்ட பகுதிகளில் எமது ஆதரவாளர்களுடன் இணைந்து செயலாற்ரத் தொடங்கி விட்டோம்.
நாங்கள் எதைச் செய்தாலும் நிதானத்துடன் தான் செய்வோம். சஜித் பிரேமதாசவை வெல்லவைப்பதற்காக மக்களை வாக்களிக்கச் செய்வதற்காக அனைத்து நடவடிக்கைகளையும் செய்ய ஆரம்பித்து விட்டோம் கலந்துரையாடல்களை செய்து கொண்டிருக்கின்றோம் என அவர் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM