(செ.தேன்மொழி)
ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக சுயாதீன தேர்தல் ஆணைக்குழுவிற்கு ஒரு மாதத்தில் 3214 முறைப்பாடுகள் கிடைக்கப்பட்டுள்ளதாக சுயாதீன தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதிகளவிலான முறைப்பாடுகள் தேர்தல் சட்டத்தை மீறியமை தொடர்பிலேயே பதிவாகியுள்ளதுடன், அவ்வாறான முறைப்பாடுகள் மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கே அதிகம் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
நேற்றைய பிற்பகல் 4 மணியிலிருந்து வியாழக்கிழமை பிற்பகல் 4 மணிவரையான 24 மணித்தியாலத்திற்குள் தேர்தல் தொடர்பில் 131 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 97 முறைப்பாடுகளும் , தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 34 முறைப்பாடுகளும் அளிக்கப்பட்டுள்ளன. இதன்போது சட்ட மீறல்கள் தொடர்பில் 128 முறைப்பாடுகளும் , சூன்று முறைப்பாடுகள் தேர்தல் தொடர்பான ஏனைய குற்றச் செயல்கள் தொடர்பிலும் முன்வைக்கப்பட்டுள்ளன.
இதேவேளை கடந்த 8 ஆம் திகதி முதல் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை பிற்பகல் 4 மணிவரையான 31 நாட்களுக்குள் 3214 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன. மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 2250 முறைப்பாடுகளும் , தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 964 முறைப்பாடுகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் தேர்தல் சட்டத்திட்டங்களை மீறியதாக மாத்திரம் 3087 முறைப்பாடுகளும் , தேர்தல் தொடர்பான ஏனைய குற்றச் செயல்கள் தொடர்பில் 102 முறைப்பாடுகளும், தேர்தல் வன்முறைகள் தொடர்பில் 25 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளதாக சுயாதீன தேர்தல் ஆணைக்குழு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.
அதேவேளை பெப்ரல் அமைப்பிற்கு கடந்த மாதம் 27 ஆம் திகதி பிற்பகல் 4.30 மணியிலிருந்து நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 4.30 வரையான 12 நாட்களுக்குள் தேர்தல் தொடர்பில் 273 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதுடன், இதில் 197 முறைப்பாடுகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் , 76 முறைப்படுகள் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்றும் பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இதுவரையில் தேர்தல் வன்முறைகள் தொடர்பில் 464 முறைப்பாடுகளும் , சட்டமீறல்கள் மற்றும் ஏனைய குற்றச்செயல்கள் தொடர்பில் 497 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளன. 39 பாரிய குற்றச் செயல்கள் பதிவாகியுள்ளதுடன் இதனூடாக 47 சட்டமீறல்கள் இடம்பெற்றுள்ளன. வன்முறைகளின் போது காயமடைந்த நிலையில் 21 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பெப்ரல் அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM