செல்பி எடுக்கும் போது அவதானம் தேவை ! ( செல்பி இணைப்பு )

Published By: Priyatharshan

27 May, 2016 | 12:33 PM
image

தமது தரத்தை இழக்கக்கூடிய வகையில் தவறான முறையில் எடுக்கப்படும் செல்பிகள் தொடர்பில் அவதானமாக இருக்கவேண்டுமென சர்வதேச இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

குறித்த இணைத்தள செய்தியில் செல்பி தொடர்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

இதேவேளை, தவறான முறையில் எடுக்கப்பட்ட செல்பிகளின் தொகுப்பொன்றையும் அவ் இணையத்தளம் வெளியிட்டுள்ளது.

செல்பி எடுத்துக்கொள்ளும்போது நாம் கவனிக்கவேண்டிய சில விடயங்கள் இருக்கின்றன என்பதை நாம் உணர்ந்திருக்கவேண்டும்.

  

அவ்வாறு எடுக்கப்படும் செல்பிகள் தவறுதலாக வலைத்தளங்களில் பதிவேற்றப்பட்டாலும்  சமூகத்தில் குறித்த நபருக்கு தரக்குறைவு ஏற்பட நேரிடும் என அவ் இணையத்தளம் சுட்டிக்காட்டியுள்ளது.

நாம் செல்பி எடுக்கும்போது  நம்மைச் சுற்றி சுத்தமாக இருக்கின்றதா? அல்லது குப்பைகள் நிறைந்துள்ளதா என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும். நாம் செல்பி எடுப்பதற்கான இடங்களை தெரிவு செய்யும்போது அவதானம் தேவை. 

இடம் சுத்தமாக இருக்கின்றதா? குறித்த இடத்தில் செல்பிகள் எடுப்பது நாகரீகமானதா? புகைப்படத்தை பார்ப்பவர்களிடையே சலனம் ஏற்படக்கூடிய வாய்ப்புகள் உள்ளனவா? தன்னை தவிர வேறு ஒரு நபருடைய செயற்பாடுகள் குறித்த செல்பி புகைப்படத்தில் இருக்கின்றதா?  போன்ற விடயங்களில் கவனம் செலுத்துதல் முக்கியமானதாகும். 

நீங்கள் எடுக்கக்கூடிய செல்பி  பார்ப்பவர்களின் மனதை பாதிக்குமாக இருந்தால் நிச்சயமா அதனை இணையங்களில் தரவேற்றுவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும்.

எனவே செல்பி எடுக்கும்போது அவதானமாக இருக்கவேண்டுமென குறித்த இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

“செல்பி” தற்கால இளைஞர் ,யுவதிகளின் தாரக மந்திரம். நாளுக்குநாள் இந்த செல்பி தொல்லைகளுக்கு  அளவே இல்லாமல் போய்விட்டது. நாம் எங்கிருந்தாலும் பரவாயில்லை, என்ன நடந்தாலும் பரவாயில்லை .... நமக்கு தேவை “செல்பி” மட்டும்தான்.

  

செல்பியில் உள்ள பிரச்சினைகள் என்னவென்று தெரியாமலேயே அதனை வலைத்தளங்களில் தரவேற்றுவது நகரீகமற்றதுடன் தரக்குறைவையேற்படுத்தும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right