மேற்கு ஆபிரிக்காவில் துப்பாக்கி சூடு : சம்பவ இடத்திலேயே 37 பேர் பலி

Published By: R. Kalaichelvan

07 Nov, 2019 | 04:35 PM
image

மேற்கு ஆபிரிக்காவின் பர்கினோ பசோ நாட்டில் அமைந்துள்ள தங்கச் சுரங்கத்தில் பணிபுரியும் ஊழியர்கள் மீது மேற்கொள்ளப்படட துப்பாக்கிச்சூட்டில் 37 பேர் உயிரிழந்துள்ளனர்.

குறித்த தங்கச் சுரங்கத்தில் வேலை செய்யும் பணியாளர்கள் 100 பேருக்கும் அதிகமோனேர் நேற்று  5 பஸ்களில் தங்களின் இடத்திற்கு வேலைக்கு சென்றுகொண்டிருந்தனர். 

ஊழியர்களை ஏற்றிச் சென்ற பஸ்ஸிற்க்கு உள்நாட்டு இராணுவ வீரர்கள் பாதுகாப்பு  வழங்கினர். ஃப்டா-போன்கியுவ் வீதியில் பஸ் சென்றுகொண்டிருந்தபோது அங்கு மறைந்திருந்த மர்ம நபர்கள் சிலர் பஸ்களை குறிவைத்து சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். 

இத் தாக்குதலில் தங்கச்சுரங்க ஊழியர்கள் 37 பேர் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததோடு 60 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் படுகாயமடைந்தவர்களை மீட்டு வைத்தியாசலையில் அனுமதித்துள்ளனர்.

அத்தோடு இக்கொடூரத் தாக்குதல் தொடர்பில் அந்நாட்டு பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

"தெற்காசியாவில் அமெரிக்காவின் ஆதிக்கம்: 'அமெரிக்காவிற்கே முதலிடம்'...

2026-02-13 14:26:43
news-image

இம்ரான் கானின் வலது கண்ணில் 85...

2026-02-13 12:24:39
news-image

சீனாவின் மீன்பிடி படகை கைப்பற்றியது ஜப்பான் 

2026-02-13 12:42:27
news-image

திடீரென வீதி உள்வாங்கப்பட்டதால் பாரிய பள்ளம்!...

2026-02-13 11:39:38
news-image

ரஷ்ய வான்வழித் தாக்குதலால் உக்ரேனில் மின்சார...

2026-02-13 11:20:19
news-image

16 வயதிற்குட்பட்டோர் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்த...

2026-02-13 10:44:56
news-image

பங்களாதேஷ் தேர்தலை இரத்து செய்ய வேண்டும்...

2026-02-13 10:21:02
news-image

பாராளுமன்றத் தேர்தல்: பங்களாதேஷ் தேசியக் கட்சிக்கு...

2026-02-13 09:39:14
news-image

டாசன்ஸ் க்ரீக் நட்சத்திரம் ஜேம்ஸ் வான்...

2026-02-12 16:07:54
news-image

இந்தோனேசியாவில் யானை சவாரிக்கு தடை

2026-02-12 15:18:01
news-image

இந்தியா - பாகிஸ்தான் போரில் 10...

2026-02-12 13:55:34
news-image

பங்களாதேஷ் நெடுஞ்சாலையில் நேருக்கு நேர் மோதிய...

2026-02-12 12:46:56