“கிரீடா சக்தி” நிதியுதவித்திட்டத்தை உடனடியாக மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்- சிவசக்தி 

Published By: Daya

07 Nov, 2019 | 04:00 PM
image

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

வவுனியா மாவட்டத்தில்  கடந்த நான்கு ஆண்டுகளில் இடை நிறுத்தப்பட்டுள்ள விளையாட்டு வீரர்களுக்கான "கிரீடா சக்தி" நிதியுதவித்திட்டத்தை உடனடியாக மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமென வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்  சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். 

பாராளுமன்றத்தில்  இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற விளையாட்டுத்துறை ஒழுங்குவிதிகள் தொடர்பான சட்டமூல திருத்த விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இதனை வலியுறுத்திய சிவசக்தி ஆனந்தன் எம்.பி. மேலும் தெரிவிக்கையில், 

அனைத்து மாவட்டங்களிலும் உள்ள விளையாட்டு வீரர்கள்,விளையாட்டு பயிற்சியாளர்களுக்கு கிரீடா சக்தி நிதிஉதவித் திட்டம் மூலம் முறையே 1500 ரூபா,7500 ரூபா மாதமொன்றுக்கு வழங்கப்படுகின்றது. ஆனால் இது வவுனியா மாவட்டத்தில்  கடந்த 4 வருடங்களாக இடை நிறுத்தப்பட்டுள்ளது.

எனவே கிரீடா சக்தி நிதி உதவித்திட்டத்தை உடனடியாக மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும்.

அத்துடன் ஓமந்தையில் அமைக்கப்பட்டு வந்த விளையாட்டு அரங்கு பணிகள் நிதியன்றி இடைநிறுத்தப்பட்டுள்ளன. இதே போன்று    கிளிநொச்சி, மன்னாரிலும்  நான்கு  விளையாட்டரங்குப்பணிகள்  நிதியின்றி இடை நிறுத்தப்பட்டுள்ளன. 

இதனால் ஒப்பந்தக்காரர்கள் தொடர்ந்தும் பணிகளை முன்னெடுக்க முடியாது  சிரமப்படுகின்றனர்.எனவே இவற்றுக்கான நிதிகள் உடனடியாக வழங்கப்படவேண்டும். வடக்கு,கிழக்கு விளையாட்டுவீரர்கள் தேசியமட்ட போட்டிகளில் பங்கேற்க வாய்ப்புக்கள் வழங்கப்படுவதுடன் வெளிநாட்டுப் பயிற்சிகளுக்கும் அனுப்பி வைக்கப்படவேண்டும். அத்துடன் சுகததாசா விளையாட்டரங்கு போல் மாவட்டத்துக்கொரு விளையாட்டரங்கு அமைக்கப்பட வேண்டும்  என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பட்டலந்த போல வடகிழக்கில் இயங்கிய பல...

2025-03-17 17:14:23
news-image

பொகவந்தலாவ பகுதியில் வாள்வெட்டு ; விசாரணைகள்...

2025-03-17 17:12:17
news-image

ஏனைய கட்சிகளில் தேர்தல் கேட்பதற்கு வேட்பாளர்கள்...

2025-03-17 16:50:49
news-image

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா புதன்று...

2025-03-17 16:27:28
news-image

மேர்வின் சில்வாவுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

2025-03-17 16:26:43
news-image

சட்டவிரோத செயற்பாடுகளை தடுத்து நிறுத்தி எமது...

2025-03-17 16:48:51
news-image

கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் தாதியர்கள்...

2025-03-17 16:00:41
news-image

'வெலே சுதா'வின் சகோதரன் 'தாஜூ' கைது!

2025-03-17 15:35:07
news-image

சிவப்பிரகாசம் காண்டீபன் இலங்கைத் தமிழரசுக் கட்சியிலிருந்து...

2025-03-17 15:30:37
news-image

மட்டக்களப்பில் உள்ளூராட்சி அதிகார சபை தேர்தலுக்கு...

2025-03-17 15:43:38
news-image

குருநாகலில் சேவல் சின்னத்தில் களமிறங்கும் இலங்கை...

2025-03-17 15:28:13
news-image

களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் தாதியர்கள் பதாகைகளை...

2025-03-17 15:05:13