(எம்.மனோசித்ரா)
13 வருட கட்டாய கல்வி திட்டத்தின் கீழ் உயர்தரத்தில் தொழிற்கல்வியை வழங்கும் பாடசாலைகளுக்கு நிதி உதவி வழங்குவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்திருக்கிறது.
இதன்படி குறித்த பாடசாலைகளுக்கு மூன்று கட்டங்களாக நிதி உதவி வழங்க திட்டமிடப்பட்டுள்ளன. குறைந்த பட்ச நிதியுதவியாக 500,000 ரூபா வழங்கப்படவுள்ளது.
இந்த நிதியுதவியை உரிய ஒழுங்குகளின் பிரகாரம் செலவிட வேண்டும் என 40;2018 சுற்று நிருபத்தின் ஊடாக குறித்த பாடசாலைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
13 வருட உத்தரவாதப்படுத்தப்பட்ட கல்வி திட்டத்தின் ஊடாக சாதாரண தர பரீட்சையில் சித்திப்பெற்றாலும் பெறாவிட்டாலும் உயர்தரத்தில் தொழிற் கல்வி பாடத்தை பயிலும் வாய்ப்பு அனைத்து மாணவர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.
13 வருட கல்வியின் பின்னர் NVQ 4 சான்றிதழும் பரீட்சைகள் திணைக்களத்தினால் தொழில் கல்வி தொடர்பான உயர் சான்றிதழும் வழங்க்பபடும் என்றும் கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM