(நா.தனுஜா)
நாட்டில் 2015ஆம் ஆண்டுக்கு முன்னர் ஊடக நிறுவனங்களும், ஊடகவியலாளர்களும் எவ்வாறு நடத்தப்பட்டார்கள் என்பதை அனைவரும் அறிவர். பல ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டனர். தாக்கப்பட்டனர். காணாமலாக்கப்பட்டனர். அதேபோன்று ஊடக நிறுவனங்களுக்கு தீ வைக்கப்பட்ட, தாக்கப்பட்ட சம்பவங்களையும் கடந்த காலத்தில் பார்த்திருக்கிறோம். தற்போது மீண்டும் அத்தகையதொரு கலாசாரத்தை கோத்தபாய ராஜபக் ஷ தரப்பு ஏற்படுத்துவதை காணமுடிகின்றது. எதிரணியினரால் ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக நிறுவனங்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்படுவதுடன், அழுத்தங்களும் பிரயோகிக்கப்படுகின்றன என்று ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் நேற்று புதன்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில்,
அண்மைக்காலமாக பெரும் சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கும் மிலேனியம் சலென்ஞ் கோப்பரேஷன் உடன்படிக்கை ஜனாதிபதித்தேர்தலுக்கு முன்பதாகக் கைச்சாத்திடப்படாது என நேற்று முன்தினம் ஜனாதிபதி வேட்பாளர்களான சஜித் பிரேமதாச மற்றும் கோத்தபாய ராஜபக் ஷ ஆகியோர் கடிதம் மூலம் உறுதி வழங்கியிருக்கிறார்கள். எனினும் இவ்விருவரினதும் கடிதத்தின் உள்ளடக்கத்தில் காணப்படும் வேறுபாடுகள் அவதானத்துக்குரியவையாகும்.
புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் கடிதத்தில், வெளிநாட்டு ஒப்பந்தங்கள் குறிப்பாக மிலேனியம் சலென்ஞ் கோப்பரேஷன் உடன்படிக்கையில் கைச்சாத்திடுவது தொடர்பில், ஜனாதிபதித் தேர்தல் முடிவடைந்த பின்னர் மகாநாயக்க தேரர்கள் உள்ளிட்ட மதகுருமாருடனும், பாராளுமன்ற உறுப்பினர்களுடனும் கலந்துரையாடிய பின்னரே தீர்மானிக்கப்படும் என்று உறுதியளித்திருக்கின்றார்.
ஆனால் பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோத்தபாய ராஜபக் ஷ அத்தகைய உறுதியான கருத்து எதனையும் தெரிவிக்காத அதேவேளை, அவர் ஒரு அமெரிக்கப் பிரஜை என்பதால் அவருடைய கருத்துக்களை முழுமையாக நம்ப முடியாத நிலையும் உள்ளது.
அடுத்ததாக கடந்த 2015ஆம் ஆண்டுக்கு முன்னர் வரை நாட்டில் ஊடக நிறுவனங்களும், ஊடகவியலாளர்களும் எவ்வாறு நடத்தப்பட்டார்கள் என்பது அனைவரும் அறிந்த விடயமாகும். ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க கொல்லப்பட்டார். பிரகீத் எக்னெலிகொட காணாமலாக்கப்பட்டதுடன், அவருடைய மனைவி இன்னமும் நீதிகோரி போராடுகின்றார். மேலும் பல ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டனர். தாக்கப்பட்டனர். காணாமலாக்கப்பட்டனர். அதேபோன்று ஊடகநிறுவனங்களுக்கு தீ வைக்கப்பட்ட, தாக்கப்பட்ட சம்பவங்களையும் கடந்த காலத்தில் பார்த்திருக்கிறோம்.
தற்போது மீண்டும் அத்தகையதொரு கலாசாரத்தை கோத்தபாய ராஜபக் ஷ தரப்பு ஏற்படுத்துவதை காணமுடிகின்றது. ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் நடத்தப்பட்ட அனைத்து கருத்துக்கணிப்புக்களிலும் எமது வேட்பாளர் சஜித் பிரேமதாசவே முன்நிலை வகிக்கின்றார். எனவே தமது தோல்வியை அறிந்துகொண்ட எதிரணியினர் தற்போது ஊடகங்களை அச்சுறுத்தவும், அவற்றுக்கு அழுத்தம் வழங்கவும் ஆரம்பித்திருக்கிறார்கள். இவற்றிலிருந்து மஹிந்த ராஜபக் ஷ குடும்பம் கடந்த காலத்திலிருந்து எவ்வித பாடமும் கற்றுக்கொள்ளவில்லை என்பதையும், அவர்கள் சிறிதும் மாறவில்லை என்பதையும் உணரமுடிகிறது. மஹிந்த தரப்பினால் கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் ஏற்படுத்தப்பட்ட 52 நாட்கள் அரசியல் நெருக்கடியின் போது ஊடகங்கள் எவ்வாறு நடத்தப்பட்டன என்பதே எதிரணியின் செயற்பாடுகளுக்கு சிறந்த உதாரணமாகும். அரச ஊடகங்களின் பிரதானிகள் மாற்றப்பட்டார்கள்.
செய்திகளை வெளியிடுவது தொடர்பில் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டன. எனவே கடந்த 2015ஆம் ஆண்டு பெற்றுக்கொண்ட சுதந்திரத்தை அனை வரும் ஒன்றிணைந்து பாதுகாத்துக் கொள் வது அவசியமாகும். அதற்கேற்றவாறான பொருத்தமான தீர்மானத்தை மேற்கொள்ள வேண்டும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM