தாய்லாந்தில் 16 அடி உயரமான பாரிய புத்தர் சிலையொன்றை திரைநீக்கம் செய்துவைக்க கௌரவ அதிதியாக சென்ற மதத் தலைவர் ஒருவர் அந்த சிலை சரிந்து விழுந்ததால் அதன் கீழ் சிக்கி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
கொன் கேன் எனும் இடத்தில் கடந்த திங்கட்கிழமை பிற்பகல் இடம்பெற்ற இந்த சம்பவம் குறி த்து நேற்று புதன்கிழமை தகவல் கள் வெளியாகியுள்ளன.
சம்பவ தினம் கிராம மதத் தலை வரான சமன் சாந்தஜோதி (52 வயது) குறிப்பிட்ட புத்தர் சிலையை வைபவ ரீதியாக திறந்துவைப் பதற்கு சென்றுள்ளார். இதன்போது அந்த சிலை அவர் மீது சரிந்து விழுந்ததால் அதன் கீழ் சிக்கி நசுங்குண்டு அவர் உயிரிழந்துள்ளார்.
அவரது சடலத்தை அந்தப் பாரிய சிலையின் கீழிருந்து மீட்க மீட்புப் பணியாளர்கள் கடும் போரா ட்டத்தை எதிர்கொள்ள நேர்ந்த தாகத் தெரிவிக்கப்படுகிறது. அந்த சிலையை பிராந்தியத்தில் வசிக் கும் மக்களுக்கு சுபீட்சத்தையும் அதிர்ஷ்டத்தையும் தருவதற்காக ஸ்தாபிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சிலையை திறந்து வைக்கச் சென்ற மதகுரு அந்த சிலையை மூடியிருந்த துணியை இழுத்து அதனைத் திரைநீக்கம் செய்து வைக்க முயன்றபோது அந்த சிலையின் அடித்தளத்தில் விரிசல் ஏற்பட்டு அந்தச் சிலை அவரின் தலையின் மீது விழுந்து அவரை தரையோடு தரையாக நசுக்கியுள்ளது.
சிலை திடீரென சரிந்து விழுவ தைப் பார்த்த அங்கு கூடியிருந்த மக்கள் பீதியடைந்து நாலாபுறமும் சிதறியோடியதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
அந்த சிலை ஸ்தாபிக்கப்பட்டி ருந்த கொங்கிறீட் அடித்தளம் உறுதியற்று இருந்ததே இந்த அனர்த்தத்திற்குக் காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் மேற்படி சம்பவம் குறித்து பிராந்திய பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM