கடந்த முறை நீங்கள் ஆட்சி மாற்றத்தை உருவாக்கி ஜனநாயகத்தை உறுதிப்படுத்தி இன ஒற்றுமைக்கான வழியை ஏற்படுத்திக் கொடுத்துள்ளீர்கள், அதேபோன்று நவம்பர் 16ஆம் திகதி அதனை முன்கொண்டு செல்லப்போகின்றோமா அல்லது அதனைச் சீரழிக்கப் போகின்றோமா என்பதனை சித்தித்து வாக்களிக்க வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸினால் சம்மாந்துறையில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்ட இளைஞர் மாநாட்டில் பிரதம் அதிதியாகககலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவுத்தார்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் த்லைமையில் சம்மாந்துறை அப்துல்மஜீத் மண்டபத்தில் நடை பெற்ற நிகழ்வில் பிரதமர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சரைத்தீர்மானிக்கும் பொறுப்பு அந்தமாகாணத்தில் வாழும் மக்களின் தீர்மானத்திலேயே உள்ளது. இதனை மஹிந்த ராஜபக்ஷவோ ரணில் விக்ரமசிங்கவோ தீர்மானிக்க முடியது.
ராஜபக்ஷவும், மொட்டு அணியினரும் இனவாதத்தை எதிர்பார்க்கின்றனர். கிழக்கு மாகாணத்துக்கு ஒரு தமிழ் முதலமைச்சர் வேண்டும். நாங்கள் பிள்ளையானை முதலமைச்சராக்குவோம் என மஹிந்த ராஜபக்ஷ, கோத்தாபய ராஜபக்ஷ ஆகியோர் கூறுகின்றார்கள். கிழக்கு மாகாணத்தில் தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள மக்கள் வாழ்கின்றனர். இங்கு முதலமைச்சராக வருவதற்கு எந்த இனமாக இருந்தாலும் செயற்றிறன் மிக்கவராக இருக்க வேண்டும்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக இளைஞர்கள் மிகத் தெளிவாக இருக்க வேண்டும். 2015 ஆம் ஆண்டு நாம் எல்லோரும் இணைந்து ஏற்படுத்திய புரட்சியின் மூலம் மஹிந்த ராஜபக்ஷ் குடும்பத்தைத்தோற்கடித்து நாட்டில் ஜனநாயகத்தை உருவாக்கி
னோம். அந்த ஜனநாயகத்தை மீண்டும் அவர்களிடம் தொலைத்துவிடுவதா அல்லது அந்த ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதா என்பதை நீங்கள் தீர்மானிக்க வேண்டும்.
மொட்டுக் கட்சியினர் தெற்கில் ஒன்றையும் வடக்கில் ஒன்றையும் கிழக்கில் ஒன்றையும்.பேசித்திரிகின்றனர் அண்மையில் மட்டக்களப்புக்கு வந்த மஹிந்த ராஜபக்ஷ பிள்ளையானை சந்தித்து அவரை கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சராக ஆக்குவதாக உத்தரவாதம் வழங்கியுள்ளர். கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சராக அந்த மாகாணத்தில் வாழும் எவரும் வரலாம். அதில் யாருக்கும் ஆட்சேபனை இல்லை. ஆனால் பிள்ளையானை தமிழ மக்கள் யாரும் விரும்பவில்லை. இந்த மாகாணத்தில் வாழும் சிங்கள முஸ்லிம் தமிழ் மக்கள் யாராக இருந்தாலும் ஒரு திறமைசாலி மக்கள் விரும்பும் ஒருவர் முதல்ச்மைச்சராக ஆக முடியும். இதனை நானோ அல்லது மஹிந்தவோ தீர்மானிக்க முடியாது.கடந்த ஐந்து ஆண்டுகளில் நாம் நாட்டில் பாரிய சேவைகளைச்செய்துள்ளோம்.எதிர்காலத்தில் அம்பாறை மாவட்டம் பல வழிகளிலும் அபிவிருத்தி செய்யப்படும் இளைஞர் யுவதிகளின் நன்மை கருதி தொழில் பேட்டை ஒன்றை அம்பாறை மாவட்டத்தில் உருவாக்க திட்டமிட்டுள்ளோம் சுற்றுலாத்துறையும் அபிவிருத்தி செய்யப்படும்.
மட்டக்களப்பு கல்முனை சம்மாந்துறை ஆகிய நகரங்கள் அபிவிருத்தி செய்யப்படும். மட்டக்களப்பிலிருந்து சென்னைக்கான நேரடி விமான சேவை விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதன் மூலம் இப்பிரதேசம் பல நன்மைகளை அடையும். இந்த மாகாணத்தில் நெல் மற்றும் அர்சி உற்பத்தியை அதிகரிக்கவேண்டும் இதற்காக விவசாயிகளிக்கு சலுகைகள் வழங்கப்பட வேண்டும். அதேபோன்று மீனவர்களின் தேவைகளும் பூர்த்தி செய்யப்பட வேண்டும் அவரகளுக்கும் நவீன இயந்திரங்கள் வழங்கப்பட வேண்டும் எதிர் காலத்தில் இவை அனைத்தையும் செய்ய வேண்டுமானால் எதிர் வரும் 16 ஆம் திகதி அன்னம் சின்னதிற்கு வாக்களித்து சஜித் பிரேமதாசவை ஆதரித்து வெற்றி பெற்று நாட்டை முன்னேற்ற இளைஞர்கள் முன்வரவேண்டும் என தெரிவித்தார்.
மாநாட்டில் அமைச்சர் ரவி கருணாநாயக பிரதியமைச்சர்களான அப்துல்லாஹ் மஹ்ரூப் அனோமா கமகே பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மாயில் முன்னாள் ஆளுனர்களான ரோஹித போகொல்லாகம அஸாத் சாலி முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களான கே.எம்.ஏ.ரஸாக் யூ.எல்.அமீர் நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.தாஹிர் கல்முனை மாநகர சபை முதல்வர் சிராஸ் மீராசாஹிப் ஐக்கிய தேசியக்கட்சியின் அமைப்பாளர்களான எம்.ஏ.ஹஸன் அலி சட்டத்தரணி ஏ.எம்.ஏ.ரஸாக் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கிழக்கு மாகாண இளைஞர் அமைப்பாளர் எம்.எஸ்.எம்.முஸர்ரப் ஆகியோர் உட்பட பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் கலந்து கொண்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM