(எம்.ஆர்.எம்.வஸீம்)
வாக்குப்பலம் இல்லாத சந்திரிகா குமாரதுங்கவின் தீர்மானம் ஒருபோதும் எமக்கு சவாலில்லை. அமெரிக்காவின் ஒப்பந்தங்களை நிறைவேற்றிக்கொள்ளவே இவர்கள் அனைவரும் ஒன்றிணைந்திருக்கின்றனர் என ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரத் கட்சியின் ஆலோசகருமான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஐக்கிய தேசிய கட்சியுடன் ஒப்பந்தம் செய்துகொண்டு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினர்களை ஒன்றிணைக்க மேற்கொள்ளும் வேலைத்திட்டம் குறித்து குறிப்பிடுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
இதுதொடர்பாக அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
சந்திரிகா குமாரதுங்க எப்போதும் அமெரிக்காவின் தேவையை நிறைவேற்றுவதற்கே செயற்பட்டு வந்திருக்கின்றார். தற்போதும் சஜித் பிரேமதாசவை ஜனாதிபதியாக்கி அவரை பொம்மையாக நிறுத்துவதே இவர்களின் திட்டம். அதன் மூலம் அமெரிக்காவின் மிலேனியம் செலன்ஞ் கோப்பரேஷன், சோபா ஒப்பந்தம் போன்றவற்றை நிறைவேற்றிக்கொள்ள இவர்கள் முயற்சிக்கின்றனர். அதற்காகவே சந்திரிகா குமாரதுங்கவும் அவர்களுடன் இணைந்து செயற்படுகின்றார்.
சந்திரிகா குமாரதுங்கவுக்கு கடந்த காலங்களில் இருந்த மக்கள் செல்வாக்கு இல்லை. எமக்கு சவால் விடுக்கும் வகையில் அவருக்கும் வாக்குப்பலமும் இல்லை. அதனால் அவர் எமக்கெதிராக கூட்டணி அமைத்தாலும் அவரின் நடவடிக்கை ஒருபோதும் எமது பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக் ஷவுக்கு சவாலாகப்போவதில்லை.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம சந்திரிகா குமாரதுங்கவுடன் இணைந்து செயற்படுகின்றார். பொதுஜன பெரமுனவை தோற்கடிக்கவேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே இருக்கின்றார். அவர் சஜித் பிரேமதாசவுக்கோ கோத்தபாய ராஜபக் ஷவுக்கோ வாக்களிப்பதில்லை என தெரிவிக்கின்றார். ஆனால் அவர் சந்திரிகாவுடன் இணைந்துகொண்டு எமக்கெதிராக செயற்படுகின்றார்.
எனவே சந்திரிகா குமாரதுங்க என்ன சதித்திட்டங்களை மேற்கொண்டாலும் அவரின் செயற்பாடுகள் ஒருபோதும் எமக்கு சவாலாகப்போவதில்லை. ஏனெனில் சந்திரிகா குமாரதுங்கவுக்கு மக்கள் பலமோ வாக்குப்பலமோ இல்லை. அத்துடன் குமார வெல்கம தொடர்ந்து அவருடன் இருந்தால் பாரிய கஷ்டத்துக்கு முகம்கொடுக்க நேரிடும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM