(நா.தனுஜா)
அமெரிக்காவுடன் கைச்சாத்திடுவதற்குத் திட்டமிட்டிருக்கின்ற மிலேனியம் சலென்ஞ் கோப்பரேஷன் உடன்படிக்கையினால் நாட் டுக்குப் பாதிப்பு ஏற்படும் என்று கூறுகின்ற எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, எத்தகைய பாதிப்பு ஏற்படும் என்று தெளிவுபடுத்தவில்லை.
எனவே ஜனாதிபதித் தேர்தல் திகதி நெருங்கும் நிலையில் மக்களை தவறாக வழிநடத்தாமல், மிலேனியம் சலென்ஞ் கோப்பரேஷன் உடன்படிக்கையினால் நாட்டுக்கு அல்லது மக்களுக்கு எத்தகைய தீங்கு ஏற்படும் என்பதை வெளிப்படுத்துமாறு எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட பொதுஜன பெரமுனவின் தலைவர்களுக்கு சவால் விடுப்பதாக நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். மில்லேனியம் சவால் ஒப்பந்தம் குறித்து நிதி அமைச்சர் மங்கள சமரவீர நேற்று செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள விசேட அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
அமெரிக்காவுடன் கைச்சாத்திடுவதற் குத் திட்டமிட்டிருக்கின்ற மிலேனியம் சலென்ஞ் கோப்பரேஷன் உடன்படிக்கையினால் நாட்டுக்குப் பாதிப்பு ஏற்படும் என்று கூறுகின்ற எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, எத்தகைய பாதிப்பு ஏற்படும் என்று தெளிவுபடுத்தவில்லை. மாறாக அமெரிக்காவினால் அழிவு ஏற்படும் என்பது போன்ற மாயையை உருவாக்க முயற்சிக்கின்றார். ஜனாதிபதித் தேர்தல் திகதி நெருங்கும் நிலையில் மக்களை தவறாக வழிநடத்தாமல், மிலேனியம் சலென்ஞ் கோப்பரேஷன் உடன்படிக்கையினால் நாட்டுக்கு அல்லது மக்களுக்கு ஏற்படும் தீங்கு என்ன என்பதை வெளிப்படுத்துமாறு எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக் ஷ உள்ளிட்ட பொதுஜன பெரமுனவின் தலை வர்கள் அனைவருக் கும் சவால் விடுக்கின்றேன். தேர்தல் சமயத்தில் அமெரிக்கா குறித்த பாரிய அச்ச மொன்றைக் கட்டமைத்து சிகிரியா, சிங்கராஜவனம் மற்றும் காலி கோட்டை ஆகியவற்றை அமெரிக்காவுக்கு விற்பதற்கான ஆயத்தங்கள் இடம்பெறுவதாக எதிரணியினர் பொய்யான பிரசாரமொன்றை முன்னெடுத்துச் செல்கின்றனர். எனினும் அதில் எவ்வித உண்மையும் இல்லை என்பதை மக்கள் புரிந்துகொண்டிருப்பார்கள் என்று நம்புகின்றேன். இந்த உடன்படிக்கையை கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகையும் எதிர்ப்பதாக அண்மையில் சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவியுள்ளன. அதுவும் பொய்யான முன்னெடுக்கப்பட்டதொரு பிரசாரமேயாகும். இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைவோம் என்பதைப் புரிந்துகொண்டு, மதத்தைப் பயன்படுத்தி தனிப்பட்ட அரசியல் இலாபத்தை பெறுவதற்காக மஹிந்த ராஜபக் ஷவும், கோத்தபாய ராஜபக் ஷவும் மிகவும் கீழ் நிலைக்கு இறங்கியிருக்கிறார்கள் என்பது தெளிவாகின்றது. இதனூடாக மக்களை ஏமாற்றி எவ்வாறேனும் அவர்களுடைய வேட்பாளரை தேர்தலில் வெற்றி பெறச்செய்ய வேண்டும் என்பதே அவர்களது நோக்கமாக இருக்கின்றது.
எமது நாட்டின் வரலாற்றில் முதற்தடவையாக அமெரிக்கப் பிரஜையொருவரை ஜனாதிபதியாக்குவதற்கும், அமெரிக்கப் பிரஜையொருவரை நாட்டின் முதற்பெண்மணி ஆக்குவதற்கும் முயற்சிக்கின்ற தரப்பினர் அமெரிக்காவினால் ஆபத்து என்பது போன்ற மாயை ஏற்படுத்துவது நகைப்புக் குரியதாக இருக்கின்றது.
மிலேனியம் சலென்ஞ் கோப்பரேஷன் உடன்படிக்கையைப் பெற்றுக்கொள்வதற்கு 2005 ஆம் ஆண்டில் மஹிந்த ராஜபக் ஷ அரசாங்கத்தினால் பெரும் முயற்சி எடுக்கப்பட்டது. எனினும் அந்த அரசாங்கத்துக்கு எதிராக தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் சுமத்தப்பட்டிருந்த ஊழல் மற்றும் மனித உரிமைகள் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்களின் காரணமாக அந்த உடன்படிக்கையை அவர்களால் கைச்சாத்திட முடியாமற்போனது.
மஹிந்த ராஜபக் ஷ மிலேனியம் சலென்ஞ் கோப்பரேஷன் உடன்படிக்கை தொடர்பில் மக்கள் மத்தியில் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்தியிருக்கின்றார். ஆகையினாலேயே நாட்டுக்கு எத்தகைய தீங்கு ஏற்படும் என்பதை இதுவரையில் அவர் வெளிப்படுத்தவில்லை. இவ் ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதால் நாட்டின் இறைமைக்குத் தீங்கேற்படும் என்று விமல் வீரவன்ச, உதய கம்மன்பில போன்றோர் கூறிவருகின்றனர். எனினும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக் ஷ, இந்த ஒப்பந்தத்தை நடை முறைப்படுத்துவதற்கு முன்னர் பாராளு மன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் மாத்திரம் அவரது குற்றச் சாட்டை மட்டுப்படுத்தியதன் மூலம், மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தும் பொறுப்பை மேற்படி இரு பாராளுமன்ற உறுப்பினர்களிடமும் ஒப்படைத்திருக்கிறார் என்பது தெளிவாகின்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM