யாழ்ப்பாணத்தில் பல வாள்வெட்டுச் சம்பவங்கள், வன்முறைகள், கொள்ளை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களில் கடந்த 2 வருடங்களாக பொலிஸாரால் தேடப்பட்டு வந்த “ஆவா” என பொலிஸாரால் தெரிவிக்கப்படும் இளைஞர் மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் நேற்று சரணடைந்தார்.
சந்தேகநபரை இம்மாதம் 18 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆவா குழுவின் முக்கியஸ்தர் எனவும் “ஆவா” எனவும் பொலிஸாரால் குறிப்பிடப்படும் இணுவிலைச் சேர்ந்த குமரேசரத்தினம் வினோதன் என்ற இளைஞனே இவ்வாறு மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் தனது சட்டத்தரணி ஊடாக மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் சரணடைந்தார்.
அச்சுவேலி பொலிஸாரால் மல்லாகம் நீதிமன்றில் முன்வைக்கப்பட்ட வன்முறைச் சம்பவம் ஒன்றின் வழக்கில் சந்தேக நபராகக் குறித்த நபர் நேற்று சரணடைந்தார்.
இந்நிலையில், சந்தேகநபரை எதிர்வரும் 18ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க மல்லாகம் நீதிவான் உத்தரவிட்டார்.
யாழ்ப்பாணம், பனிப்பாய், சுன்னாகம் உட்பட யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள பல பொலிஸ் நிலையங்களால் வினோதன் கடந்த 2 வருடங்களாகத் தேடப்பட்டு வந்துள்ளார்.
வாள்வெட்டு வன்முறை, பொதுமக்களுக்குக் காயம் விளைவித்தமை, கொள்ளை, கூரிய ஆயுதங்களை உடமையில் வைத்திருந்தமை, வீடுகள் மற்றும் வியாபார நிலையங்களுக்குச் சேதம் விளைவித்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் கீழ் சந்தேகநபருக்கு எதிராக நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளன என்று பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய நபர் மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் சரணடைந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM