குப்பைகள் குவிக்கப்படும் இடங்களுக்கு அண்மையில் வாழ்வது நுரையீரல் புற்றுநோய் ஏற்பட்டு இறக்கும் அபாயத்தை அதிகரிப்பதாக இத்தாலிய விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
அழுகும் குப்பைகள் உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய வாயுக்களை வெளியிடுவதால் அவற் றைச் சுவாசிப்பவர்கள் சுவாச பிரச்சினைகளுக்கு உள்ளாக நேரிடுவதாக இத்தாலிய ரோம் நகரிலுள்ள லஸியோ சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிலையத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
குப்பைகள் குவிக்கப்படும் இடங்களிலிருந்து 3 மைலுக்குள் வசிக்கும் சுமார் 250,000 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வின் போது, அவர்களில் பலர் நோய்வாய்ப்பட்டு மருத்து வமனையில் அனுமதிக்கப்பட்டோ அல்லது நுரையீரல் புற்றுநோயால் இறந்தோ உள்ளமை கண்டறியப்பட் டுள்ளது.
மேற்படி ஆய்வின் முடிவுகள் இன்டர்நஷனல் ஜேர்னல் ஒப் எபிடெமியோலொஜி ஆய்வேட்டில் வெளியிடப்பட்டுள்ளன.
மத்திய இத்தாலியிலுள்ள 9 குப்பை குவிக்கும் மேடுகளில் ஒன்றுக்கு அரு கில் வசிக்கும் மக்களிடம் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வின்போது ஆய்வுக்குட்படுத்தப்பட்டவர்கள் சுமார் 5 வருடங்கள் கண்காணிக்கப்பட்டு அவர் கள் தொடர்பான தகவல்கள் சேகரிக் கப் பட்டன.
இதன்போது அந்தக் குப்பை மேட்டிலிருந்து வெளிவந்த தீங்கான வாயு க்களை அதிகளவில் சுவாசித்தவர்களு க்கு நுரையீரல் புற்றுநோயும் குறைந்தளவில் சுவாசித்தவர்களுக்கு கடுமையான சுவாச பிரச்சினைகளும் ஏற்பட்டிருப்பது அவதானிக்கப்பட்டுள்ளது.
அந்தக் குப்பை மேட்டிலிருந்து பொதுவாக அழுகும் மரக்கறிகளிலி ருந்து வெளிவரும் தீங்கு விளைவிக் கும் வாயுவான ஐதரசன் சல்பைட் அதிகளவில் வெளிப்படுவது மேற்படி ஆய்வில் கண்டறியப்பட்டது. அந்த வாயு அழுகிய முட்டையிலிருந்து வெளிப்படுவதை ஒத்த மணத்தைக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM