புத்தளம் மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சாந்த அபேசேகரவை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு சிலாபம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிணை நிபந்தனையை மீறிய குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட ஐக்கிய தேசிய கட்சியின் புத்தளம் மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சாந்த அபேசேகரவையே எதிர்வரும் 15 ஆம் திகதி வரை மீள விளக்கமறியலில் வைக்குமாறு சிலாபம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2004 ஆம் ஆண்டு கைதுசெய்யப்பட்ட நிலையில் கடந்த 2011 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31 ஆம் திகதி அவருக்கு பிணை வழங்கப்பட்டதுடன், பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் காலை 9 மணிக்கும் 12 மணி இடைப்பட்டதொரு நேரத்தில் சிலாபம் பொலிஸ் நிலையத்தில் கையொப்பம் இடவேண்டும் என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டிருந்தது.
பின்னர் 2018 ஆம் ஆண்டு மே மாதம் 15 ஆம் திகதி பிரதிவாதியின் தரப்பினரால் சிலாபம் மேல் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டிருந்த கோரிக்கைக்கு அமைய, வாராந்தம் கையொப்பமிட வேண்டும் என்ற நிபந்தனை தளர்த்தப்பட்டு, ஒவ்வொரு மாதாந்தத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமை சிலாபம் பொலிஸ் நிலையத்திற்கு சென்று கையொப்பமிட வேண்டும் என நீதிமன்றம் அறிவித்திருந்தது.
இந்நிலையில், சந்தேக நபர் நிபந்தனையை மீறியிருப்பதாக நீதிமன்றத்தின் கவனத்திற்குகொண்டுவரப்பட்ட நிலையில் அவர் கடந்த ஒக்டோபர் மாதம் 10 ஆம் திகதி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், இன்றையதினம் அவர் நீதிமன்றில் ஆஜர்படுத்திய நிலையிலேயே அவரை எதிர்வரும் 15 ஆம் திகதி மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM