எம்மில் பலருக்கு பேசிக்கொண்டிருக்கும் பொழுது குரல் ஒலியின் அளவு குறைந்துவிடும் அல்லது பேச்சு வராத நிலை அல்லது தவறான உச்சரிப்பு அல்லது தொண்டையில் குரல் நாண் அடைப்பு போன்றவை ஏற்பட்டு, தர்ம சங்கடத்தை உருவாக்கி விடும். அதே தருணத்தில் தங்களின் குரலை வாழ்வாதாரமாக கொண்டிருப்பவர்களுக்கு திடீரென்று குரலால் தர்மசங்கடங்கள் ஏற்படும். இதற்கு தற்பொழுது புதிய முறையிலான வைத்திய சிகிச்சை முறை கண்டறியப்பட்டிருக்கிறது.
ஆன்மீக சொற்பொழிவாளர்கள், மேடைப் பேச்சாளர்கள், அரசியல் மேடை பேச்சாளர்கள், பட்டிமன்ற பேச்சாளர்கள், சுயமுன்னேற்ற பேச்சாளர்கள், பாடகர்கள், ஆசிரியர்கள் என குரலை மையப்படுத்தி, தங்களின் வாழ்க்கையை நடத்தி வருபவர்களுக்கு, அவர்களின் குரலில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்பட்டால். அவர்கள் சொல்லொணா துயரத்திற்கு ஆளாகி விடுகிறார்கள்.
இதற்கு காது-மூக்கு-தொண்டை சிறப்பு சிகிச்சை நிபுணரிடம் சென்று வைத்திய சிகிச்சையும் ஆலோசனையும் பெற்றாலும், அவர்களுக்கு முழுமையான நிவாரணம் கிடைப்பதில்லை. இந்நிலையில் இதனை தவிர்க்கவும், முழுமையான நிவாரணம் பெறவும் நவீன வைத்திய ஆலோசனை ஒன்று ஊட்டசத்து நிபுணர்களால் முன் வைக்கப்பட்டிருக்கிறது.
உங்களின் குரல் வளம் ஆயுள் முழுவதும் ஆரோக்கியமாக நீடிப்பதற்கு உங்களின் இரத்த வகைக்கு ஏற்ற உணவு முறையை பின்பற்ற வேண்டும் என வலியுறுத்துகிறார்கள். உங்களது இரத்த வகை A பிரிவு என்றால். அதற்கு ஒரு வகையான உணவு முறை. B. O. AB ஆகிய இரத்த வகைகளுக்கு ஏற்ற வகையிலான உணவு முறைகளை ஊட்டசத்து நிபுணர்களை சந்தித்து, அவர்களின் ஆலோசனையும் பெற்று, பட்டியலை தயாரித்து, அதனை பின்பற்றினால், உங்கள் குரல் நாண் பாதுகாக்கப்படுவதுடன், ஆயுள் முழுவதும் எந்தவித தடையும் இல்லாமல் முழுமையான ஒத்துழைப்பு வகையில் குரலொலியைப் பராமரிக்க முடியும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM