கருத்­தடை சத்­திர சிகிச்­சையின் பின்­னரும் கரு தங்­குமா.?

Published By: Robert

25 May, 2016 | 11:29 AM
image

குடும்பக் கட்­டுப்­பாட்டு முறைகள் பல இருந்­தாலும் நிரந்­தர குடும்ப கட்­டுப்­பாட்டு முறை­யாக சொல்­லக்­ கூ­டி­யது கருத்­தடை சத்­திர சிகிச்­சையே ஆகும். கருத்­தடை சத்­திர சிகிச்சை முறை­யா­னது பெண்­களின் பலோப்பின் குழாய்கள் கட்டுப் போடப்­பட்டு வெட்­டப்­பட்­டதன் மூலம் செய்­யப்­ப­டு­கின்­றது. இதனை LRT சத்­திர சிகிச்­சை­யென அழைப்­பார்கள். இவ்­வா­றான நிரந்­தர குடும்பக் கட்­டுப்­பாட்டு முறையின் பின்னர் பெண் ஒருவர் தற்­செ­ய­லாகக் கூட மீண்டும் கருத்­த­ரிக்க முடி­யுமா? அவ்­வாறு கருத்­த­ரிக்கும் போது கரு­வான கர்ப்பப் பையினுள் வள­ருமா? அல்­லது கர்ப்­பப்­பைக்கு வெளியே பலோப்­பியன் குழாயில் தங்­குமா என அறிய வேண்டும். இதற்கு விளக்கம் தர நான் அண்­மையில் கண்ட உண்மைச் சம்­ப­வத்தை தரு­கின்றேன்.

கடந்த இரு வாரங்­க­ளுக்கு முன்னர் எனது கிளி­னிக்கில் என்­னிடம் ஆலோ­சனை பெற வந்த தம்­ப­தி­களில் ஒரு பெண்­மணி அதி­கூ­டிய வயிற்று வலியில் இருந்தார். அவர் 34 வய­து­டைய 3 பிள்­ளை­களின் தாய். அவ­ரது 3 பிள்­ளை­களும் சிசே­ரியன் முறை மூலமே பிர­ச­விக்­கப்­பட்­டார்கள். மூன்­றா­வது சிசே­ரியன் பிர­சவ நேரத்தில் நிரந்­தர குடும்பக் கட்­டுப்­பாட்டு சத்­திர சிகிச்­சை­யான LRT செய்­யப்­பட்­டுள்­ள­தாகக் கூறினார். இவ்­வா­றான LRT குடும்பக் கட்­டுப்­பாட்டு சத்­திர சிகிச்சை இவ­ருக்கு கடைசி சிசே­ரியன் பிர­சவ நேரத்தில் 3 வரு­டங்­க­ளுக்கு முன்னர் கொழும்பில் ஒரு பிர­பல வைத்­தி­ய­சா­லையில் செய்­யப்­பட்­டுள்­ளது.

இம்­முறை இவ்­வாறு வயிற்று வலி வரும் போது அவர் ஏற்­க­னவே இரு இடங்­களில் மருந்­து­களை எடுத்­துள்ளார். இதன்­போது வயிற்று வலிக்கு பல கார­ணங்­களை எண்ணி மருந்­துகள் கொடுக்­கப்­பட்­டுள்­ளது. ஆனாலும் வயிற்று வலியோ குறைந்­த­தாகத் தெரி­ய­வில்லை. அவ­ரது மாத­விடாய் சக்­க­ரமும் ஒழுங்­கற்­ற­தா­கவே இருந்து வந்­துள்­ளது. அத்­துடன் நிரந்­தர குடும்பக் கட்­டுப்­பாட்டு சத்­திர சிகிச்சை செய்­துள்­ள­மையால் கருத்­த­ரிக்க வாய்ப்பும் இல்லை. அதனால் ஏற்­படும் சிக்­கல்­க­ளையும் எவரும் எண்­ணி­யி­ருக்­க­வில்லை.

எனினும் வயிற்று வலி ஒரு நடுத்­தர வய­து­டைய பெண்ணில் கடு­மை­யாக வரும்­போது நாம் எதற்கும் கருத்­த­ரித்தால் வரக்­கூ­டிய நோய்­க­ளையும் நினைக்­கத்தான் வேண்டும். இதற்­க­மைய இப்­பெண்ணின் சிறு நீரை பரி­சோ­தித்து பார்த்தால் அதிர்ச்­சி­யான தக­வல்­கள்தான் கிடைத்­தது. அதா­வது இப்பெண் கருத்­த­ரித்­துள்­ள­தா­கவே அறிய வந்­தது. இந்த தக­வலை குடும்­பத்­தி­ன­ருக்கு கூறும்­போது கணவர் அதிர்ச்­சி­ய­டைந்தார். எவ்­வாறு ஒரு பெண் நிரந்­தர குடும்பக் கட்­டுப்­பாட்டு சத்­திர சிகிச்சை செய்த பின்­னரும் கருத்­த­ரிக்க முடியும் என்றே கேட்­டனர். அத்­துடன் நாம் ஸ்கான் பரி­சோ­தனை ஒன்றை செய்து வயிற்றில் உள்ள சரி­யான கார­ணத்தை கண்­ட­றிய முயற்­சித்தோம் அதன்­போது தெரி­ய­வந்­தது. அப்பெண் கருத்­த­ரித்­துள்ளார். ஆனால் கரு­வா­னது கர்ப்பப் பையில் தங்­காது கர்ப்­பப்­பைக்கு வெளியே பலோப்­பியன் குழா­யினுள் தங்­கி­யுள்­ளது. இவ்­வா­றான நிலை­மைகள் நிரந்­த­ர­மாக குடும்பக் கட்­டுப்­பாட்டு சத்­திர சிகிச்சை செய்த பெண்­களில் சிலரில் ஏற்­பட வாய்ப்­புள்­ளது. அதா­வது 200 பெண்­களில் நிரந்­தர குடும்பக் கட்­டுப்­பாட்டு சத்­திர சிகிச்சை செய்தால் அதில் ஒரு­வ­ருக்கு இவ்­வா­றான நிலைமை ஏற்­படும். எனவே இதனை அந்தக் குடும்­பத்­தி­ன­ருக்கு விளக்க வேண்டி இருந்­தது.

அடுத்­த­தாக பெண்­களில் ஏற்­படும் இந்த கர்ப்பப் பைக்கு வெளி­யி­லான கருத்­தங்­க­லா­னது எந்த அளவு கவ­னிக்­கப்­பட வேண்­டி­யது என்று பார்க்க வேண்டும். இந்த பெண்­ணுக்கு இதனை நாம் கண்­ட­றிந்­த­வுடன் அடுத்­த­தாக இந்த கருக்­கட்­டிய பலோப்­பியன் குழாய் வெடித்தால் வயிற்­றினுள் பெண்­ணுக்கு அதி­கூ­டிய இரத்தப் போக்கு ஏற்­பட்டு ஆபத்­தான நிலை­மைகள் கூட ஏற்­ப­டலாம். ஆகையால் சத்­திர சிகிச்சை செய்து கருத்­தங்­கிய பலோப்­பியன் குழாயை அகற்ற வேண்டும். அத்­துடன் சிலர் கேட்கத் தோன்றும் இந்தக் கருவைக் காப்­பாற்றி ஒரு குழந்­தை­யாக பெற்­றெ­டுக்க முடி­யுமா என்று. இதற்கு பதில் என்­ன­வென்றால் இந்தக் கரு பலோப்­பியன் குழாயில் வளர இட­வ­சதி இல்­லா­ததால் குழா­யுடன் சேர்ந்து வெடித்தால் தாய்க்கு ஆபத்­தைத்தான் ஏற்­ப­டுத்தும். எனவே இவ்­வா­றான சிக்­கலை தவ­ற­வி­டாமல் சரி­யான நேரத்தில் கண்­ட­றிந்து சரி­யான சத்­திர சிகிச்­சையை உட­ன­டி­யாக செய்­வது தான் சிறந்த சிகிச்சை. இவற்­றை­யெல்லாம் நாம் அந்த குடும்­பத்­தி­ன­ருக்கு விளங்க வைத்து உட­ன­டி­யான சத்­திர சிகிச்­சையை திட்­ட­மிட்டோம்.

இந்த சத்­திர சிகிச்சை பெண்ணை முழுதும் மயக்­கித்தான் செய்­யப்­பட்­டது. இதன்­போது வயிற்றில் ஒரு சிறிய துளை மூலம் லப்­ரஸ்­கோப்பி கம­ராவை செலுத்தி வயிற்றுள் உள்ள பாதிக்­கப்­பட்ட வெடிப்­ப­டைந்த பலோப்­பியன் குழாயை கண்­ட­றிந்து அதனை அகற்­றினேன்.

இதன் மூலம் வயிற்­றுனுள் ஏற்­பட்ட குருதி இழப்பைக் கட்­டுப்­ப­டுத்தி பெண்ணை ஆபத்தில் இருந்து காப்­பாற்ற முடிந்­தது. இந்த வகை சத்­திர சிகிச்சை வயிற்றில் சிறிய காயத்­துடன் கிட்­டத்­தட்ட 30 நிமி­டங்­க­ளுக்குள் முடித்­து­விட்டோம். அதனை தொடர்ந்து அப்பெண் முற்று முழு­தாக குண­மாகி மறுநாள் வீடு சென்றார். எனவே இதி­லி­ருந்து நாம் அறியத் தரு­வது என்­ன­வென்றால் கருத்­தடை சத்­திர சிகிச்சை LRT ஒரு நிரந்­தர குடும்பக் கட்­டுப்­பாட்டு முறை. எனினும் ஒரு சிலரில் இம்­மு­றையின் பின்­னரும் கருத்­தங்கக் கூடி­ய­வ­றான சிறிய சந்­தர்ப்பம் ஒன்­றுள்­ளது. அதிலும் கரு­வா­னது பலோப்­பியன் குழாயில் தங்கி வெடித்து வயிற்று வலி வரக்­கூ­டிய வாய்ப்பும் உள்­ளது. எனவே இதனை ஞாப­கத்தில் வைத்து நடுத்­தர வயது பெண்­ணொ­ரு­வ­ருக்கு வயிற்று வலி சற்று அதி­க­மாக உள்ள போது கருத்­தங்கல் தொடர்­பா­கவும் அதன் சிக்­கல்கள் தொடர்­பா­கவும் கருத்தில் கொள்ள வேண்டும். இதன் போது தான் பெண்­களில் ஏற்­படும் மிகவும் ஆபத்­தான பலோப்­பியன் குழாய் கருத்­தங்­கலை தவ­ற­வி­டாமல் கண்­ட­றிந்து பெண்­களை ஆபத்தில் இருந்து காப்­பாற்ற முடியும்.

குடும்பக் கட்­டுப்­பாட்டு சத்­திர சிகிச்சை செய்த பெண்­களில் இதனை மீள் இயங்க வைக்­க­லாமா?

நிரந்­தர குடும்பக் கட்­டுப்­பாட்டு சத்­திர சிகிச்சை செய்த பெண்கள் சில வேளை மனம் மாறி மீண்டும் ஒரு குழந்தை பெற வேண்டும் என நினைப்­பது சில சந்­தர்ப்­பத்தில் ஏற்­ப­டு­கின்­றது. சில பெண்கள் கண­வரை இழந்து மீள் திரு­மணம் செய்த சந்­தர்ப்­பத்­திலும் அல்­லது ஏற்­க­னவே இருந்த பிள்­ளையை விபத்­திலோ அல்­லது டெங்கு போன்ற கொடிய நோயினால் இழந்த சந்தர்ப்பத்திலும் மீண்டும் ஒரு பிள்ளை வேண்டும் என்று திட்டமிடுவார்கள். இந்நிலையில் ஏற்கனவே நிரந்தர குடும்பக் கட்டுப்பாட்டு சத்திர சிகிச்சை செய்த பெண்கள் என்ன செய்வது என ஏங்குவதுண்டு. இவர்களுக்கு நாம் ஏற்கனவே செய்யப்பட்ட நிரந்தர குடும்பக் கட்டுப்பாட்டு LRT சத்திர சிகிச்சையை மீள் சீராக்கி மீண்டும் இயங்க வைக்க சத்திர சிகிச்சை செய்ய வேண்டிவரும். இவ்வாறு மீள் சீராக்கல் சத்திர சிகிச்சை கிட்டதட்ட நூற்றுக்கு ஐம்பது சதவீதம் வெற்றியளிக்க வாய்ப்புண்டு.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிளஸன்டா அக்ரிடா எனும் பாதிப்புக்குரிய நவீன...

2025-03-22 16:55:55
news-image

பார்க்கின்சன் நோய் பாதிப்பிற்கு நிவாரணமளிக்கும் நவீன...

2025-03-21 15:58:03
news-image

புற்றுநோய் பாதிப்பை ஏற்படுத்துகிறதா உடற்பருமன்?

2025-03-20 14:09:44
news-image

உறக்கத்திற்கு ஏன் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்?

2025-03-19 15:46:23
news-image

மூல வியாதிக்கு நிவாரணம் அளிக்கும் நவீன...

2025-03-18 17:35:54
news-image

வெப்ப அலையை எதிர்கொள்வது எப்படி?

2025-03-17 16:49:37
news-image

நியூமோகாக்கல் தடுப்பூசியை யார் செலுத்திக் கொள்ள...

2025-03-15 16:44:59
news-image

நுரையீரல் பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2025-03-14 18:48:08
news-image

நிணநீர் நுண்ணறை வீக்க பாதிப்பிற்குரிய சிகிச்சை

2025-03-13 19:58:33
news-image

அன்கிலொக்லொஸியா எனும் நாக்கில் ஏற்படும் பாதிப்பிற்குரிய...

2025-03-12 15:11:15
news-image

டெம்போரோமாண்டிபுலர் ஜாயிண்ட் டிஸ்பங்சன் என காதில்...

2025-03-11 17:36:18
news-image

கண் புரை சத்திர சிகிச்சைக்கு பின்னரான...

2025-03-10 16:47:15