போதைப் பொருட்களுடன் பெண்ணொருவர் உட்பட நால்வர் கைது

Published By: R. Kalaichelvan

31 Oct, 2019 | 12:17 PM
image

(செ.தேன்மொழி)

நாட்டின் பல்வேறு பகுதிகளில்  நேற்று முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புகளின் போது போதைப் பொருட்களுடன் பெண்ணொருவர் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.

இந்த சோதனை முன்னெடுப்பின் போது  நவகமுவ பகுதியில் போதைப் பொருளுடன் பெண்ணொருவர் உட்பட இருவர்  கைது செய்யப்பட்டுள்ளனர்.

நவகமுவ பொலிஸ் பிரிவில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே தம்பதியினரான சந்தேக நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தென் ஆப்பிரிக்கா நாட்டைச் சேர்ந்த 32 வயதுடைய பெண்ணிடமிருந்து 610 மில்லி கிராம் கஞ்சாவும் , கடுவலை பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய சந்தேக நபர் ஒருவரிடம் இருந்து 20 கிராம் ஹெரோயினும் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதேவேளை பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சுன்டிக்குளம் பகுதியில் பொலிஸாரும் , கடற்படையினரும் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது கேரளா கஞ்சாவுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கற்பிட்டி பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன் , இவரிடமிருந்து 105 கிலோ 542 கிராம் கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர் கடல்மார்க்கமாக படகின் மூலம் இந்த கேரளா கஞ்சாவை கடத்தி வந்தப் போதே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

அதேவேளை ஆட்டுப்பட்டித்தெரு பகுதியில் கொழும்பு குற்றப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் படி மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஹெரோயினுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு -11 சேர்ந்த 48 வயதுடைய நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இவரிடமிருந்து 21 கிராம் 710 மில்லி கிராம் ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

4 முதல் 4.5 பில்லியன் டொலர்...

2024-04-17 01:41:44
news-image

புத்தாண்டு காலத்தில் நுகர்வோர் சட்டத்தை மீறிய...

2024-04-17 00:49:55
news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46