(இராஜதுரை ஹஷான்)
நானே பிரதமர் என்று குறிப்பிடும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் கருத்து ஒருபோதும் நிறைவேறாது. நவம்பர் 16ம் திகதி ஜனாதிபதியை மாத்திரமல்ல பிரதமர் மற்றும் அவர் தலைமையிலான புதிய அரசாங்கத்தினையும் நாட்டு மக்கள் ஐக்கிய தேசிய கட்சியை புறக்கணித்து தெரிவு செய்வார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரசன்ச தெரிவித்தார்.
ருவான்வெல்ல நகரில் இன்று ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ ஜனாதிபதி தேர்தலில் வெற்றிப் பெற்றதும் அமைக்கவுள்ள அரசாங்கத்தில் தானே பிரதமர் என்று ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளமை அவரது அரசியல் ரீதியிலான கனவுகளை வெளிப்படுத்தியுள்ளது.
நாட்டு மக்கள் 2015ம் ஆண்டு அரசியல் ரீதியில் தவறான தீர்மானததை முன்னெடுத்ததை கடந்த உள்ளுராட்சி மன்ற தேர்தலின் ஊடாகக் திருத்திக் கொண்டார்கள்.
அன்றே ஐக்கிய தேசிய கட்சியை முழுமையாக புறக்கணித்து விட்டார்கள். மக்களின் ஆணையினை பெற்று அதிகாரத்தை பெற்றுக் கொள்ளமாட்டார்.
மீண்டும் தானே பிரதமர் என்று அவர் கருதுவது வெறும் கனவாகவே காணப்படும். முதலில் நாட்டு மக்கள் ஜனாதிபதி தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவை தேர்ந்தெடுக்க வேண்டும்.
அதன் பிறகே ஏனைய விடயங்கள் நாட்டு மக்கள் மீண்டும் அரசியல் ரீதியில் தவறான தீர்மானத்தை முன்னெடுக்க மாட்டார்கள் என அவர் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM