இலங்கை தொலைத்தொடர்பாடல் துறையின் உருநிலைமாற்ற பயணத்தின் அனுபவம்

Published By: Robert

25 May, 2016 | 09:26 AM
image

நாட்டின் முன்­னணி தகவல் தொடர்பு தொழில்நுட்ப தீர்­வுகள் வழங்­கு­ன­ரான ஸ்ரீலங்கா ரெலிகொம் (ஸ்ரீல.ரெ.), உலக தொலைத்­தொ­டர்­பாடல் மற்றும் தகவல் சமூக தினத்­தை­யொட்டி கடந்த 17 ஆம் திகதி புதிய தேசிய தொலைத்­தொ­டர்­பாடல் அருங்­காட்­சி­ய­கத்தை திறந்­து­வைத்­துள்­ளது..

பாதுக்கையில் அமைந்­துள்ள இந்த அருங்­காட்­சி­ய­கத்தில், பிரித்­தா­னிய ஆட்­சிக் ­கா­லத்­தி­லி­ருந்து இன்­று­வரை பயன்­ப­டுத்­தப்­பட்ட தொலைத்­தொ­டர்­பாடல் கரு­விகள் மற்றும் சாத­னங்கள் காட்­சிக்கு வைக்­கப்­பட்­டுள்­ளன. இவை, இங்­கு­வரும் பார்­வை­யா­ளர்­க­ளுக்கு இலங்­கையில் தொலைத்­தொ­டர்­பா­டல்­து­றையில் படிப்­ப­டி­யாக ஏற்­ப­டுத்­தப்­பட்ட மாற்­றங்­களை விளக்­க­மாக சொல்­கின்­றன.

இந்த அருங்­காட்­சி­ய­கத்தின் முக்­கிய நோக்­க­மா­னது, நாட்டின் தொலைத்­தொ­டர்­பா­டல்கள் துறையின் பாரம்­ப­ரி­யத்­தையும் மர­பையும் பாது­காத்து, இந்த தேசிய பொக்­கி­ஷத்தை நாட்டின் அனைத்து குடி­மக்­க­ளு­டனும் பகிர்ந்­து­கொள்­ள­ வேண்டும் என்­ப­தே­யாகும். இந்த அருங்­காட்­சி­ய­கத்தில் காட்­சிக்கு வைக்­கப்­பட்­டுள்ள தொலைத்­தொ­டர்­பாடல் சம்­பந்­த­மான கரு­விகள், உப­க­ர­ணங்கள் மற்றும் சாத­னங்கள் இலங்­கையில் சமூக, பொரு­ளா­தார தொழி­னுட்ப அடிப்­ப­டையில் ஒவ்­வொரு கால­கட்­டத்­திலும் தொலைத்­தொ­டர்­பாடல் எவ்­விதம் பரி­ணாம வளர்ச்­சி­ய­டைந்து வந்­தது என்­பதை தெட்டத்­தெ­ளி­வாக எடுத்­துக்­காட்­டு­கின்­றன.

பிரித்­தா­னியர் ஆட்­சிக்­கா­லத்­தின்­போது தொலைத்­தொ­டர்­புத் ­து­றையில் பயன்­ப­டுத்­தப்­பட்ட கரு­வியும் இங்­குண்டு, நவீன காலத்து ‘ஸ்மார்ட் ஃபோனும்’ உண்டு. பார்­வை­யா­ளர்கள் இந்த இரண்டு கால­கட்­டத்து தொழி­ல்நுட்­பங்­க­ளையும் பார்த்து வியப்­ப­துடன், அவற்றை ஒப்­பிட்டு இர­சிக்­கவும் கூடி­ய­தாக இங்கே காட்­சிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. 150 வரு­டங்­க­ளாக நீண்டு வந்­தி­ருக்கும் இந்த தொலைத்­தொ­டர்­பாடல் பரி­ணா­ம­வ­ளர்ச்­சியை நேரில் பார்ப்­போ­ருக்கு இது ஒரு கன­வுக்­காட்­சி­யாக விரி­கின்­றது. இந்த அருங்­காட்­சி­யகம் இலங்­கையின் சுற்­று­லாத்­து­றைக்கும் ஆத­ர­வ­ளிக்கும் என ஸ்ரீல.ரெ. நம்­பு­கி­றது. வருங்­கா­லத்தில் வெளி­நா­டு­க­ளி­லி­ருந்து வரும் சுற்­று­லாப்­ப­ய­ணி­களை இந்த அருங்­காட்­சி­யகம் கவர்ந்­தி­ழுக்கும். உலக அருங்­காட்­சி­ய­கங்­களின் வடி­வ­மைப்­பு­களைப் பிர­தி­ப­லிக்கும் அதே­நேரம், நவீ­ன­கா­லத்து கட்­டி­டக்­க­லை­யையும் வெளிப்­ப­டுத்­து­வ­தாக இந்த தேசிய தொலைத்­தொ­டர்­பா­டல்கள் அருங்­காட்­சி­யகம் கவ­ன­மாக வடி­வ­மைக்­கப்­பட்­டுள்­ளது.

அருங்­காட்­சி­ய­கத்தை திறந்­து­வைத்­த­பின்னர் உரை­யாற்­றிய ஸ்ரீல.ரெ. தலைவர் பி. ஜி. குமா­ர­சிங்க சிறி­சேன, “இது ஸ்ரீலங்கா ரெலி­கொம்­முக்கு மட்டும் சொந்­த­மா­ன­தல்ல முழு நாட்­டுக்­குமே சொந்­த­மான தேசிய சொத்­தாகும். பிற தொலைத்­தொ­டர்பு இயக்­கு­னர்­களும், இலங்கை குடி­மக்­களும் இந்த தொலைத்­தொ­டர்­பா­டல்கள் அருங்­காட்­சி­ய­கத்­தி­லி­ருந்து நிறைய விட­யங்­களை தெரிந்­து­கொள்­ளலாம். எமது தொலைத்­தொ­டர்­பாடல் பாரம்­ப­ரி­யமும் அறி­வுச்­செல்­வமும் நாட்­டி­லுள்ள அனை­வ­ருக்கும் பயன்­ப­டக்­கூ­டி­ய­தாக தற்­போது திறந்­து­வைக்­கப்­பட்­டுள்­ளது” என்றார்.

இந்த அருங்­காட்­சி­ய­க­மா­னது, பாதுக்­கை­யி­லுள்ள ஸ்ரீல.ரெ. இற்கு சொந்­த­மான செய்­ம­திப்­புவி நிலை­யத்தின் வளா­கத்தில் அமைக்­கப்­பட்­டி­ருக்­கி­றது. இச்­செய்­ம­திப்­புவி நிலையம் டிசம்பர், 1975 இல் அப்­போ­தைய பிர­தமர் சிறிமாவோ பண்டாரநாயக்காவினால் திறந்துவைக்கப்பட்டது. இதுவே இலங்கையில் கட்டப்பட்ட முதலாவது செய்மதிப்புவி நிலையமாகும். இது INTELSAT IOR 60 பாகை செய்மதியுடன் பெறுவழியை கொண்டிருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right