கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய நேற்று காலை 10.30 மணியளவில் மீதொட்டமுல்ல பிரதேசத்தில் 2 கிராம் 100 மில்லிகிராம் ஹெரோயின் போதை பொருளை வைத்திருந்த பெண் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் குறிப்பிட்டனர்.
வெல்லம்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 31 வயதுடைய மொஹமட் பாத்திமா என்ற சந்தேக நபரே இதன்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்டுவருகின்றனர்.
இதேவேளை, கல்கிஸ்ஸை பொலிசாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய 2 கிராம் 50 மில்லிகிராம் மற்றும் 3 கிராம் 400 மில்லிகிராம் ஹெராயின் போதை பொருளை வைத்திருந்த பெண்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கல்கிஸ்ஸை பொலிசார் குறிப்பிட்டனர்.
படோவிட்ட பிரதேசத்தை சேர்ந்த 46 வயதுடைய சுசிலா நில்மினி, 30 வயதுடைய சாமலி தில்ருக்க்ஷி என்ற சந்தேகநபர்களே இதன்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM