கோத்தாபய வெற்றி பெற்றால் இரா­ணுவ ஆட்­சி­யே உரு­வாகும் - ஐ.தே.க.

29 Oct, 2019 | 02:31 PM
image

(நா.தனுஜா)

முஸ்லிம் மக்­களின் வாக்­கு­களைப் பெற்­றுக்­கொள்­வ­தற்­காக தேர்­த­லுக்கு முன்­ன­ரேயே அவர்­களை அச்­சு­றுத்தும் வகையில் செயற்­படும் எதி­ர­ணி­யினர், ஆட்­சியைக் கைப்­பற்­றினால் எவ்­வாறு செயற்­ப­டு­வார்கள் என்ற கேள்வி எழு­கின்­றது. கோத்தாபய ராஜ­பக்ஷ வெற்றி பெற்றால் ஒரு பாரிய இரா­ணுவ ஆட்­சி­யொன்றே உரு­வாகும் என்று ஐக்­கிய தேசியக் கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரி­வித்தார்.

கொழும்­பி­லுள்ள ஐக்­கிய தேசியக் கட்­சியின் அலு­வ­ல­கத்தில் நேற்று திங்­கட்­கி­ழமை இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்­பி­லேயே அவர் இவ்­வாறு குறிப்­பிட்டார்.

அங்கு அவர் மேலும் கூறி­ய­தா­வது:

ஜனா­தி­பதித் தேர்தல் நெருங்கும் நிலையில்  எதிர்த்­த­ரப்­பி­னரால் வாக்­கா­ளர்­களை அச்­சு­றுத்தும் செயற்­பா­டுகள், அவர்கள் மீது அழுத்­தங்­களைப் பிர­யோ­கித்தல் போன்­றவை மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன. குறிப்­பாக நாட்டில் வாழும் முஸ்லிம் மக்­களை அச்­சு­றுத்தும் நிலை­யொன்று தற்­போது தோன்­றி­யி­ருக்­கி­றது. ஜனா­தி­பதி சட்­டத்­த­ர­ணி­யான அலி சப்ரி, தேர்தல் பிர­சாரக் கூட்­ட­மொன்றில் 'கோத்தாபய ராஜ­பக் ஷ ஏற்­க­னவே வெற்றி பெற்­று­விட்டார். எனவே அதன் ஒரு பங்­கு­தா­ரர்­க­ளாக முஸ்லிம் மக்கள் மாற­வேண்டும். அல்­லா­விடின் ஆபத்து நேரிடும்' என்ற தொனியில் கருத்து வெளி­யி­டு­கின்றார். ஜனா­தி­பதி சட்­டத்­த­ர­ணி­யான அவர், தேசிய பட்­டியல் மூல­மான உறுப்­பு­ரி­மை­யையோ அல்­லது அதற்கும் மேலான உயர் பத­வி­யையோ எதிர்­பார்த்து இவ்­வாறு அச்­சு­றுத்தும் வித­மாகக் கருத்து வெளி­யி­டு­வது கவ­லை­ய­ளிக்­கின்­றது. முஸ்லிம் மக்­களின் வாக்­கு­களைப் பெற்­றுக்­கொள்­வ­தற்­காக தேர்­த­லுக்கு முன்­ன­ரேயே இவ்­வாறு செயற்­ப­டக்­கூ­டி­ய­வர்கள், ஆட்­சியைக் கைப்­பற்­றினால் எவ்­வாறு செயற்­ப­டு­வார்கள் என்ற கேள்வி எழு­கின்­றது. எனவே அவர் வெற்றி பெற்றால் ஒரு பாரிய இரா­ணுவ ஆட்­சி­யொன்றே ஏற்­ப­டப்­போ­கின்­றது என்­பது தெளி­வா­கின்­றது.

அதே­போன்று அமைச்­சுக்­களின் செய­லா­ளர்­க­ளாக ஓய்­வு­பெற்ற இரா­ணுவ அதி­கா­ரி­களை நிய­மிப்­ப­தற்கு எதி­ர­ணி­யினர் திட்­ட­மிட்டு வரு­வ­தாக எமக்குத் தகவல் கிடைத்­துள்­ளது. இரா­ணு­வத்தில் பணி­பு­ரிந்த அவர்­களால் சுதந்­திரம், அமைதி என்­ப­வற்றைப் புரிந்­து­கொள்ள முடி­யாது. எதி­ர­ணி­யினர் ஆட்­சிக்கு வந்தால், வெளியே சென்ற தனது மகன் பேஸ்­புக்கில் மேற்­கொண்ட பதி­விற்­காக வெள்ளை வேனில் கடத்திச் செல்­லப்­பட்­டாரா இல்­லையா என்று அவ­ரது தாய் அச்­சத்­துடன் வாழும் நிலையே ஏற்­படும். எமது வாக்­கு­ரி­மையைப் பயன்­ப­டுத்தி, அத்­த­கை­ய­தொரு அச்­ச­சூழ்­நி­லையை நாமே ஏற்­ப­டுத்­திக்­கொள்ள வேண்­டுமா என்று மக்கள் சிந்­தித்துப் பார்க்க வேண்டும்.

 நாட்டின் ஜனா­தி­ப­தி­யாகப் போகின்ற ஒரு­வ­ரிடம் நாட்டின் அனைத்துத் துறைகள் தொடர்­பிலும் ஒரு தெளி­வான இலக்கும், அதனை அடை­வ­தற்­கான கொள்­கைகள் மற்றும் செயற்­திட்­டங்­களும் காணப்­பட வேண்டும். அவ்­வா­றா­ன­தொரு கொள்­கையும், இலக்கும் சஜித் பிரே­ம­தா­ஸ­விடம் இருப்­ப­தா­லேயே அவ­ரு­ட­னான விவா­த­மொன்­றுக்கு வரு­மாறு அழைப்பு விடுக்­கின்றோம். ஆனால் கோத்தாபய ராஜ­பக் ஷ விவா­தத்தைத் தவிர்த்து வரு­கின்றார்.

உண்­மை­யி­லேயே அவர்­க­ளிடம் நாட்டை முன்­நி­றுத்­திய தெளி­வான இலக்கு  இருக்­கு­மானால் விவா­தத்­திற்கு முன்­வ­ர­வேண்டும். நாம் தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்­புடன் ஒப்­பந்­த­மொன்றைக் கைச்­சாத்­திட்டு, நாட்டைப் பிள­வு­ப­டுத்­து­வ­தற்குத் திட்­ட­மி­டு­வ­தாக அவர்கள் சமூ­க­வ­லைத்­த­ளங்­களின் ஊடாக பிர­சா­ரங்­களை முன்­னெ­டுக்­கின்­றனர். ஆனால் வடக்­கிற்குச் சென்று வேறொரு கதையைக் கூறு­கின்­றனர். அதே­போன்று கிழக்கில் மற்­றொரு கருத்­தையும், தெற்கில் மற்­றொன்­றையும் கூறு­கின்­றனர். எனவே ஒரே மேடையில் பகி­ரங்க விவா­த­மொன்றின் ஊடாக அவர்­க­ளு­டைய சந்­தே­கங்­களை நேர­டி­யாகத் தெளி­வு­ப­டுத்­திக்­கொள்ள முடியும்.  

அடுத்த­தாக நாம் எதிர்­வரும் 31 ஆம் திகதி புதிய ஜன­நா­யக முன்­ன­ணியின் தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தை வெளி­யிடத் தீர்­மா­னித்­தி­ருக்­கின்றோம். அதில் நாட்டை முன்­நி­றுத்தி அனைத்துத் துறைகள் தொடர்­பிலும் எமது அர­சாங்கம் மேற்­கொள்­ள­வி­ருக்கும் செயற்­திட்­டங்கள் தூர­நோக்கு சிந்­த­னையின் அடிப்­ப­டையில் தயா­ரிக்­கப்­பட்­டி­ருக்கும். அதனை வெளி­யிட்­டதன் பின்­ன­ரேனும் எதி­ர­ணி­யினர் விவா­தத்­திற்கு வர­வேண்டும். உண்­மையில் கோத்தாபய ராஜ­ப­க் ஷ­விற்கு அவ­ரு­டைய திட்டம், கொள்கை என்­ன­வென்­பதே தெளி­வாகத் தெரி­யாது. ஆகை­யினால் அவர் ஜனா­தி­பதித் தேர்­தலில் வெற்­றி­பெ­றப்­போ­வதும் இல்லை. மேலும் சஜித் பிரே­ம­தாஸ அடிப்­ப­டை­வா­தத்­தையும், பயங்­க­ர­வா­தத்­தையும் ஒழிக்க வேண்டும் என்­பதில் எவ்­வித இரட்டை நிலைப்­பா­டு­க­ளையும் கொண்­டி­ருக்­க­வில்லை. ஏனெனில் அவர் விடு­தலைப் புலி­களின் குண்­டுத்­தாக்­கு­தலில் கொல்­லப்­பட்ட ஒரு­வரின் மக­னாவார். அப்­ப­யங்­க­ர­வா­தி­க­ளுடன் போரிட்டு, குண்­டு­களின் பாகங்­களை உடலில் கொண்­டி­ருக்கும் ஒரு­வரே நாட்டின் தேசிய பாது­காப்பைப் பொறுப்­பேற்­றுக்­கொள்ளப் போகின்றார். எனவே பயங்­க­ர­வா­தத்­திற்கு எமது நாட்டில் இட­மில்லை.

 தேசப்­பற்­றா­ளர்கள் போன்று வேட­மிட்டுக் கொண்­டி­ருப்­போரே எதி­ர­ணியில் இருக்­கின்­றனர். எனினும் எமது பக்­கத்தில் உண்­மை­யான தேசப்­பற்­றா­ளர்­களே உள்­ளனர். எனவே எந்­த­வொரு கட்­சி­யி­னதும், எத்­த­கை­ய­தொரு தரப்­பி­ன­ரதும் நிபந்­த­னை­க­ளுக்கு நாம் அடி­ப­ணிய மாட்டோம். நாம் யாரு­டனும் திரை­ம­றைவில் எவ்­வித ஒப்­பந்­தங்­க­ளிலும் கைச்­சாத்­தி­ட­வில்லை. சஜித் பிரே­ம­தா­ஸவின் கொள்­கைகள் தெளி­வாகப் பகிரங்கமாகக் கூறப்பட்டுள்ளன. அவற்றுடன் உடன்படுபவர்கள் எம்முடன் வந்து இணைந்துகொள்ள முடியும். நாம் யாருக்கும் பின்னால் செல்ல மாட்டோம். அத்தோடு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கைகள் எவையும் எம்மிடம் கையளிக்கப்படவில்லை.

நாம் ஜனா­தி­பதித் தேர்­தலில் வெற்றி பெற்­ற­வுடன் பாரா­ளு­மன்­றத்தைக் கலைத்து, பொதுத்­தேர்தல் ஒன்றின் ஊடாக புதிய பாரா­ளு­மன்­றத்தைத் தெரிவு செய்­வ­தற்­கான வாய்ப்பை மக்­க­ளுக்கு வழங்­குவோம். ஆனால் எதி­ர­ணியில் கோத்தாபய வெற்­றி­ய­டைந்தால் அவ­ரு­டைய சகோ­தரன் பிர­த­ம­ராவார். மற்­றைய சகோ­தரன் அமைச்­ச­ராவார். அவ­ரு­டைய பிள்­ளைகள் அனை­வரும் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களாவர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுராதபுரத்தில் ஆறு துப்பாக்கிகளுடன் இருவர் கைது

2025-02-18 15:51:52
news-image

வேன் - முச்சக்கரவண்டி மோதி விபத்து...

2025-02-18 15:23:00
news-image

“உங்களுடைய தீர்மானம் பல வருடங்களாக காத்திருக்கும்...

2025-02-18 15:20:25
news-image

கண்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும்...

2025-02-18 15:05:00
news-image

வெல்லவாய - தணமல்வில பிரதான வீதியில்...

2025-02-18 14:31:12
news-image

பாகிஸ்தானில் பயிற்சியை முடித்துக்கொண்டு இலங்கையை வந்தடைந்தது...

2025-02-18 15:31:41
news-image

மே மாதம் வரை வெப்பநிலை தொடரும்...

2025-02-18 13:40:43
news-image

கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான வழக்கு விசாரணை...

2025-02-18 13:06:16
news-image

உள்ளூராட்சி சபை தேர்தல் தொடர்பில் மு.கா...

2025-02-18 13:06:56
news-image

ஊடகவியலாளர்களின் உறுதியான பாதுகாவலராக திகழ்ந்தவர் சீதா...

2025-02-18 14:42:33
news-image

நீர்கொழும்பில் வெளிநாட்டு சிகரட்டுகளுடன் இருவர் கைது

2025-02-18 12:46:23
news-image

ஐஸ், கஞ்சா, கசிப்பு உள்ளிட்ட போதைப்பொருட்களுடன்...

2025-02-18 12:47:54