மலை­யக மக்­கள்­ ஒரு போதும் தொடர்­மாடி வீட்டுத்திட்­டத்தை ஏற்­றுக்­கொள்ளப்போவதில்லை - இரா­தா­கிருஷ்ணன்

Published By: Jayanthy

28 Oct, 2019 | 11:25 AM
image

 ஜனா­தி­பதி வேட்­பா­ளர்கள் சிலர்  தங்­க­ளது  தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தை வெளி­யிட்­டுள்­ளனர். இதில் ஏற்­றுக்­கொள்­ளக்­கூ­டிய எந்­த­வி­த­மான நன்­மையும் இல்லை.  பொது ஜன பெரமுன வெளி­யிட்­டுள்ள தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்கு தொடர் மாடி வீட்­டுத்­திட்டத்தை அறி­மு­கப்­ப­டுத்தப் போவ­தாக தெரி­வித்­துள்­ளார்கள். அதனை நாங்கள் ஒருபோதும் ஏற்­றுக்­கொள்ளப் போவ­தில்லை என மலை­யக மக்கள் முன்­ன­ணியின் தலை­வரும் விசேட பிராந்­தியங்­க­ளுக்­கான அமைச்­ச­ரவை அந்­தஸ்­தற்ற அமைச்சருமான வேலு­சாமி இரா­தா­கிருஷ்ணன் தெரி­வித்தார்.

ஜனா­தி­பதி வேட்­பா­ளர்கள் சிலர்  வெளி­யிட்­டுள்ள தேர்தல் விஞ்­ஞா­பனம் தொடர்­பா­க ­ஊ­ட­க­வி­ய­லா­ளர்­க­ளுக்கு தெளி­வூட்டும் நிகழ்வு   நுவ­ரெ­லி­யாவில்  நடை­பெற்­றது.  அதன்  போதே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.

அவர் அங்கு தொடர்ந்தும் கருத்து தெரி­விக்­கையில்,

 எமது மக்கள் சுமார் 150 வரு­டங்­க­ளுக்கு மேலாக  தொடர்­மாடி வீடு­க­ளிலும் தொடர்­ கு­டி­யி­ருப்­புக்­க­ளிலும் வாழ்ந்து பல்­வேறு அனு­ப­வங்­க­ளையும் துன்­பங்­க­ளையும் அனு­ப­வித்­துள்­ளார்கள். இதனால்  சந்­தி­ர­சே­கரன்  1994ஆம் ஆண்டு எமது மக்கள் சுதந்­தி­ர­மா­கவும் நிம்­ம­தி­யா­கவும் வாழ வேண்டும் என்று தனி­வீட்­டுத்­திட்­டத்தை கொண்டு வந்தார். அதற்கு பின் அந்த திட்டம்  நிறுத்­தப்­பட்டு தொடர்­மாடி வீடுகள் கட்டிக் கொடுக்­கப்­பட்­டன. அதனைத் தொடர்ந்து  நாங்கள் பல்­வேறு சவால்­க­ளுக்கு மத்­தியில் நல்லாட்சியில் இப்­போது அமைச்சர் திகாம்­பரம் ஊடாக ஏழு பேர்ச்சஸ் காணியில் தனி வீட்டு திட்­டத்தை நடை­மு­றை­ப்ப­டுத்தி வரு­கின்றோம். அந்த திட்டம் மேலும் அபி­வி­ருத்­தி­ய­டைய வேண்­டுமே தவிர அது மீண்டும் பின்­னோக்கி போகக்­கூ­டாது. தொடர் மாடி குடி­யி­ருப்பில் இருப்­பதும் ஒன்­றுதான் லயத்தில் இருப்­பதும் ஒன்­றுதான். கடந்த காலங்­களில் அமைக்­கப்­பட்ட மாடி வீட்டுத் திட்­டங்­களில் எவ்­வித வச­தி­களும் இன்றி பல்­வேறு பிரச்­சி­னை­க­ளுக்கு முகம் கொடுத்­தனர். ஆகவே   மீண்டும் ஒரு தொடர்­மா­டி வீட்டு­திட்­டத்தை கொண்டு வந்தால் மீண்டும். மலை­யக மக்­களின் கல்வி, சுகா­தா­ரம், சுதந்­திரம், அவர்­களின் தேவைகள் உட்­பட பல்­வேறு பிரச்­சி­னைகள் தோற்றம் பெறும். எனவே அதனை நாங்கள் ஒருபோதும் ஏற்­றுக்­கொள்ள முடி­யாது.

 மலை­யக மக்­க­ளுக்கு ஆயிரம் ரூபா தரு­வ­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. மலை­யக மக்­களை பொறுத்த வரையில் சம்­பள பிரச்­சினை மாத்­திரம் பிரச்­சி­னை­யல்ல. எமக்கு பல பிரச்­சி­னைகள் உள்­ளன. அத்­தோடு ஆயிரம் ரூபா சம்­பள பிரச்­சி­னையை பேசி, பேசி எமது மக்கள் அலுத்­துப்­போய்­யுள்­ளனர்.

அத்­தோடு இன்று  புரை­யோடிக் கொண்­டி­ருக்­கின்ற இனப்­பி­ரச்­சி­னைக்கும் எவ்­வித தீர்வும் இல்லை. இதில் தமிழ் தேசிய கூட்­ட­மைப்பு முன் வைத்­துள்ள யோச­னை­களை பேசு­வதற்கு கூட அவர்கள் தயா­ராக இல்லை என்­பது தான் உண்மை. இந்நிலையில் அந்த மக்களின் பிரச்சினைகள் அபிவிருத்திகள் பேசப்படாத நிலையில் ஒட்டு மொத்த தமிழ் முஸ்லிம் மக்களும் இம் முறை ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு வாக்களிப்பார்கள் என்பது எவராலும் மறுக்கப்பட முடியாத உண்மை எனவும்  தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வடக்கு, வடமத்திய, கிழக்கு மாகாணங்களில் 100...

2025-12-11 01:30:52
news-image

எமக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கான பொறுப்புக்கூறல் சர்வதேசத்தின்...

2025-12-11 01:27:01
news-image

கைது செய்யப்பட்டவரை நீண்டகாலம் தடுத்து வைப்பது...

2025-12-11 01:22:45
news-image

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நல்லாசி வேண்டி நாடளாவிய...

2025-12-10 23:51:41
news-image

30 க்கு மேற்பட்ட நீர் இறைக்கும்...

2025-12-10 23:42:06
news-image

ஆசிய அனர்த்த முன்னாயத்த நிலையத்திடமிருந்து இலங்கைக்கு...

2025-12-10 23:40:07
news-image

ஐரோப்பிய ஒன்றியம் 1.8 மில்லியன் யூரோ...

2025-12-10 23:33:34
news-image

திருகோணமலை – மட்டக்களப்பு சாலையில் லொறியும்...

2025-12-10 23:27:28
news-image

கருணை மிகுந்த செயல் பெரும் நம்பிக்கையை...

2025-12-10 19:10:24
news-image

ஊழலற்ற அரச நிர்வாகத்தால் உலக நாடுகள்...

2025-12-10 18:59:59
news-image

இந்திய மீனவர் அத்துமீறல்  வடக்குமாகாண மீனவர்பிரச்சினைகள்...

2025-12-10 21:18:26
news-image

வடக்கு - கிழக்கு மலையகத்துக்கான புகையிரத...

2025-12-10 18:28:06