ஜனாதிபதி தேர்தலுக்கான, தேர்தல் சட்டங்கள் ஆகக் கூடிய வகையில் நடைமுறைப்படுத்தப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
சகல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கும் இது தொடர்பில் தேவையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
கடந்த தேர்தலுடன் ஒப்பிடுகையில் இம்முறை ஜனாதிபதி தேர்தலில் வன்முறை செயற்பாடுகள் மற்றும் தேர்தல் விதிகளை மீறும் சம்பவங்கள் குறைவாகக் காணப்படுகின்றன. விதி முறைகளை கடைப்பிடிப்பதிலும் முன்னேற்றம் இருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். அமைதியையும், சட்டத்தையும் நிலை நிறுத்துவதிலும் பொலிசார் தீவிரமாக செயற்பட்டு வருகின்றனர்.
ஜனாதிபதி தேர்தல் பாதுகாப்பு நடவடிக்கைகளில் 60 ஆயிரம் பொலிசாரை ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு மேலதிகமாக இதனுடன் தொடர்புபட்ட அதிகாரிகள் நாலாயிரம் பேரை மேலதிக கடமைகளில் ஈடுபடுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன மேலும் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM