தமிழகத்தின் திருச்சி மாவட்டத்தில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த இரண்டு வயது குழந்தையை மீட்கும் பணி இரவிரவாக இடம்பெற்று வருகிறது.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுபட்டி கிராமத்தில் நேற்று மாலை 5.40 மணிக்கு சுஜித் என்ற இரண்டு வயது குழந்தை தெரியாமல் தவறி விழுந்துள்ளான்.
இந்த ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை தொடர்ந்து 14 மணி நேரமாக மீட்புப் படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், 27 அடியில் இருந்த சுஜித், 68 அடி ஆழத்திற்கு சென்று இருந்த நிலையில் தற்போது 70 அடிக்கு சென்று விட்டான்.
மூச்சுவிடுவதில் சிரமம் இருக்கக்கூடாது என்பதற்காக ஒட்சிசன் தொடர்ந்த செலுத்தப்பட்டு வருகிறது. குழந்தையை எப்படியாவது மீட்க வேண்டும் என்று உலக மக்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
இன்னொரு பக்கம் டுவிட்டரில் சுஜித் ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது.
எனினும் மற்றொரு பக்கம், குழந்தையை இன்னுமா மீட்க முடியவில்லை என்ற கொந்தளிப்பு எழுந்துள்ளது.
அதேபோல பொதுமக்கள் தரப்பில் இருந்தும் குமுறல்கள் வெளிப்பட்டு வருகின்றன. 70 அடி ஆழத்தில் விழுந்த குழந்தையை மீட்க முடியாதா.. நம்மிடம் வசதி இல்லையா.. சாதாரண மக்களின் துயர் போக்கும் அறிவியல் நம்மிடம் இல்லையா.. ஆழ்கடலில் விழுந்த விமானத்தை தேடும் அறிவியல் இருக்கும்போது, 70 அடி ஆழத்தில் விழுந்த குழந்தையை மீட்க அறிவியல் இல்லையா.. என்ன டெக்னாலஜி இது? என்று டுவிட்டரில் கடுமையானஅதிருப்திகளையும், ஆவேசமான பதிவுகளையும் பொதுமக்கள் தெரிவித்து வருகின்றனர். ஆனால் அரசுத் தரப்பில் அத்தனை விதமான ஒத்துழைப்பும், உதவிகளும் நேற்று மாலை முதல் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM