2016 ஆம் ஆண்டின் முதல் மூன்று மாத காலப்பகுதியில் நாட்டின் வர்த்தக கணக்கு நிலுவையானது 2.2% ஆல் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
இதே வேளை இவ்வாண்டின் முதல் நான்கு மாதக்காலப்பகுதியில் சுற்றுலாத்துறையிலிருந்தான வருமானம் 20% அதிகரித்துள்ளதுடன் வெளிநாடுகளில் தொழில் புரிபவர்களினால் அனுப்பப்படும் பணத்திலான அந்நிய செலாவணி உட்பாய்ச்சல் 8.1% ஆல் அதிகரித்துள்ளது.
அத்துடன் கடந்த மார்ச் மாத இறுதியில் 6.2 பில்லியன் டொலராக பதிவு செய்யப்பட்ட அந்நிய செலாவணி கையிருப்பானது ஏப்ரல் மாத்தில் 6.1 பில்லியன் டொலராக பதிவுசெய்யப்பட்டு சிறிய வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.இந்நிலையில் 2016ஆம் ஆண்டின் இது வரையான காலப்பகுதியில் ஐக்கிய அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதியில் சிறிய வீழ்ச்சியினையும் பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM