(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வஸீம்)
தேசியப்பட்டியல் வழங்கக்கூடாது என சஹ்ரான் தெரிவித்த நபரை அமைச்சர் ரவூப் ஹக்கீம் முடியுமானால் வெளிப்படுத்தவேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர் நிமல் லான்சா தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை 2020ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும்வகையில் நான்குமாத காலங்களுக்கான அரசாங்க செலவீனங்களுக்கான கணக்கறிக்கை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கை யில், ஏப்ரல் தாக்குதல் தொடர்பாக ஆராய பாராளுமன்ற தெரிவுக்குழு அமைக்கப்பட வேண்டும் என்று நானே ஆரம்பத்தில் தெரிவித்தேன். என்றாலும் தெரிவுக்குழு உறுப்பினர்கள் தொடர்பில் எமக்கு திருப்தி இல்லாததனால் அதனை எதிர்த்து வந்தோம். தெரிவுக்குழுவின் அறிக்கை நீதியாக இருக்கமாட்டாது என தெரிவித்திருந்தோம். ஆனால் தற்போது விசாரணைக்குழுவில் இருந்த அமைச்சர் ரவூப் ஹக்கீம் பயங்கரவாத தாக்குதல் தாரியான சஹ்ரானுடன் இணைந்து கலந்துரையாடும் காட்சிகளை ஊடகங்கள் ஊடாக பார்க்கின்றோம். அவ்வாறாயின் தெரிவுக்குழு விசாரணை நீதியாக இடம்பெற்றுள்ளதாக நம்பமுடியுமா? அமைச்சர் ரவூப் ஹக்கீம் மீது எமக்கு நம்பிக்கை இருக்கின்றது.என்றாலும் ஊடகங்களில் வெளிப்படுத்தி இருக்கும் படங்கள் தொடர்பில் அவர் தெளிவுபடுத்த வேண்டும். அத்துடன் சஹ் ரானுடனான கலந்துரையாடலின்போது, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு 50 ஆயிரம் வாக்குகளை பெற்றுத்தந்திருக்கின் றோம். அதனால் தேசியப்பட்டியலில் அவருக்கு வழங்கக்கூடாது என சஹ்ரான் தெரிவிக்கின்றார். சஹ்ரான் தெரிவிக்கும் அந்த நபர் யார் என்று கேட்கின்றோம். அமைச்சர் ரவூப் ஹக்கீம் அந்த நபரை முடியுமானால் வெளிப்படுத்த வேண்டும் என்றார்.
இதன்போது சபையிலிருந்த அமைச்சர் ரவூப் ஹக்கீம் எழுந்து தெரிவிக்கையில், சஹ்ரானுடன் நான் கலந்துரையாடியது 2015 இலாகும். அந்தக் காலப்பகுதியில் சஹ்ரான் பயங்கரவாதி என யாரும் அறிந்திருக்கவில்லை. அந்தக் காலப்பகுதியில் அவருடன் இணைந்து செயற்பட்டவர்க ளின் படங்கள் என்னிடம் இருக்கின்றன என தெரிவித்து சில படங்களை காட்டி, அதில் இருக்கும் ஒருவர் எம்.எஸ்.எம்.ஸியாத். அவர்தான் பொதுஜன பெரமுன மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளராக இருக்கின்றார். கோத்தபாய ராஜபக்ஷவை மட்டக்களப்புக்கு தேர்தல் பிரசாரத்துக்கு வர இருக்கின்றார். அவரை அவர்தான் வர வேற்க இருக்கின்றார் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM