(செ.தேன்மொழி)
ஜா- எல பிரதேசத்தில் அடையாளத்தை உறுதிபடுத்த தவரிய இந்திய பிரஜைகள் மூவர் உள்ளிட்ட ஐந்து பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஜா - எல மாநகரசபை கட்டிடத்திற்கு அருகில் உள்ள சோதனை சாவடியில் இன்று புதன்கிழமை அதிகாலை கடமையில் ஈடுப்பட்டிருந்த கடற்படையினரே சந்தேக நபர்களை கைது செய்துள்ளதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்தது.
சம்பவத்தின் போது கடற்படையினர் சந்தேகத்திற்கிடமான வேன் ஒன்றை சோதனைக்குட்படுத்தியுள்ளர். இதன்போது வேனில் ஐந்து பேர் பயணித்துள்ளதுடன். அவர்கள் தமது அடையாளத்தை உறுதிப்படுத்தும் வகையில் எந்தவிதமான ஆவணங்களையும் வைத்திருக்கவில்லை என்று கடற்படையினர் தெரிவித்தனர்.
இதன் போது இந்திய பிரஜைகள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், யட்டியந்தொட்டை மற்றும் மாத்தளை ஆகிய பகுதியைச் சேர்ந்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடற்படையினர் சந்தேக நபர்களை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ஜா - எல பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM