யாழ்ப்பாணம் அரியாலை மணியந்தோட்டத்தில் இளைஞர் ஒருவர் கோடாரியால் அடித்துக் கொலை செய்த குற்றச்சாட்டில் தந்தையும் மகனும் பொலிஸில் சரணடைந்த நிலையில் இன்று புதன்கிழமை வரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.
கொலை செய்யப்பட்டவரின் மூத்த சகோதரியின் கணவரும் அவரது தந்தையும் தமது சட்டத்தரணி ஊடாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் இன்று காலை சரணடைந்தனர். அவர்கள் இருவரும் யாழ்ப்பாணம் நீதிமன்றில் நீதிவான் ஏ.பீற்றர் போல் முன்னிலையில் நேற்று மாலை முற்படுத்தப்பட்டனர்.
இந்தக் கொலை தொடர்பான இறப்பு விசாரணை இன்று யாழ்ப்பாணம் நீதிமன்றில் இடம்பெறவுள்ள நிலையில் சந்தேகநபர்கள் இருவரையும் இன்று வரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டார்.
யாழ்ப்பாணம், அரியாலை – மணியம் தோட்டம் பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை குறித்த கொலைச் சம்பவம் இடம்பெற்றது.
சம்பவத்தில் மணியந்தோட்டம் 5ஆம் குறுக்குத் தெருவைச் சேர்ந்த கொன்ஸ்ரன் கலஸ்ரன் (வயது-33) என்பவரே கொலை செய்யட்டார்.
இளைஞளை அவரது மூத்த சகோதரியின் கணவரே கொலை செய்தார். சகோதரியின் கணவருக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு உண்டு. அந்தப் பெண்ணை தேடிச் சென்ற இளைஞன் தனது சகோதரியின் வாழ்க்கையைப் பாழாக்கவேண்டாம் என்று கண்டித்து வந்துள்ளார்.
இளைஞன் தன்னை மிரட்டியதாக அந்தப் பெண் கொலை செய்தவருக்கு தகவல் வழங்கினார். அதனால் சகோதரியின் கணவரின் தந்தையால் பிடித்து வைத்திருக்க சகோதரியின் கணவர் கோடாரியால் கழுத்தில் கொத்தியதுடன், கண்மூடித்தனமாக இளைஞனைத் தாக்கினார்” என்று பொலிஸார் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM