உயிர்த்த ஞாயிறு தாக்குதலை அடுத்து முன்னெடுத்த நடவடிக்கைகள் குறித்த கடிதங்கள், ஆவணங்கள் என்பவற்றை மேற்கோள்காட்டி நாட்டில் மீண்டும் பயங்கரவாத அச்சுறுத்தல் இருப்பதாக போலிச் செய்திகள் பரப்பப்பட்டு வருவதாகவும் அவற்றை மக்கள் நம்ப வேண்டாம் எனவும் ஜனாதிபதி செயலாளர் உதய ஆர்.செனவிரத்ன விசேட அறிவிப்பொன்றை விடுத்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து அரச அலுவலகங்கள் மற்றும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இடங்களின் பாதுகாப்பை உறுதி செய்வது தொடர்பில் என்னால் 2019 ஏப்ரல் மாதம் 23ஆம் திகதி வெளியிடப்பட்ட ps/sp/sb/c/14/2019 இலக்க சுற்று நிருபம் மற்றும் அதன் தொடர்ச்சியாக பல்வேறு சந்தர்ப்பங்களில் மேற்குறிப்பிட்ட இடங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக மேற்கொள்ளப்பட்ட சாதாரண குறிப்பாணைகள் மற்றும் பணிப்புரைகளை கொண்ட கடிதங்களையும் சுற்றுநிருபங்களையும் மேற்கோள்காட்டி அண்மையில் பயங்கரவாத அச்சுறுத்தல் காணப்படுவதாகவும் அந்த ஆவணங்களை முறைகேடாகக் கையாண்டு சில அரச நிறுவனங்களையும் பொதுமக்களையும் அச்சுறுத்தும் வகையிலான கடிதங்கள் வெளியிடப்பட்டு வருவதாக தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.
தற்போது நாட்டில் எந்தவித பயங்கரவாத அச்சுறுத்தலும் காணப்படவில்லை என்பதை பாதுகாப்பு துறையினர் உறுதிப்படுத்தியுள்ளதுடன் இந்த போலியான திரிபுபடுத்தப்பட்ட விடயங்கள் தொடர்பில் தேவையற்ற பீதியினை ஏற்படுத்திக்கொள்ள வேண்டாம் என்பதை அறியத்தருகின்றேன். அரச நிறுவனங்கள், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பினை உறுதி செய்வதற்கான அதிகபட்ச நடவடிக்கைகளை பாதுகாப்புத் துறையினர் மேற்கொண்டுள்ளனர். இதனால் அவசர அல்லது அண்மையில் பயங்கரவாத அச்சுறுத்தல் தோற்றுவிக்கப்பட்டுள்ளதாக முன்னெடுக்கப்படும் போலிப் பிரசாரங்களுக்கு ஏமாற்றமடைய வேண்டாம் என்றும் அவர் வெளியிட்டுள்ள அறிவித்தலில் கூறியுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM