மக்களே எச்சரிக்கை ! மக்கள் ஏமாற்றமடைய வேண்டாம் என்கிறார் ஜனா­தி­பதி செய­லாளர்

Published By: Vishnu

23 Oct, 2019 | 10:32 AM
image

உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலை அடுத்து முன்­னெ­டுத்த நட­வ­டிக்­கைகள் குறித்த கடி­தங்கள், ஆவ­ணங்கள் என்­ப­வற்றை மேற்­கோள்­காட்டி நாட்டில் மீண்டும் பயங்­க­ர­வாத அச்­சு­றுத்தல் இருப்­ப­தாக போலிச் செய்­திகள் பரப்­பப்­பட்டு வரு­வ­தா­கவும் அவற்றை மக்கள் நம்ப வேண்டாம் எனவும் ஜனா­தி­பதி செய­லாளர் உதய ஆர்.சென­வி­ரத்ன விசேட அறி­விப்­பொன்றை விடுத்­துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தினத்­தன்று இடம்­பெற்ற பயங்­க­ர­வாத தாக்­கு­தலைத் தொடர்ந்து அரச அலு­வ­ல­கங்கள் மற்றும் தேசிய முக்­கி­யத்­துவம் வாய்ந்த இடங்­களின் பாது­காப்பை உறுதி செய்­வது தொடர்பில் என்னால் 2019 ஏப்ரல் மாதம் 23ஆம் திகதி வெளி­யி­டப்­பட்ட ps/sp/sb/c/14/2019 இலக்க சுற்று நிருபம் மற்றும் அதன் தொடர்ச்­சி­யாக பல்­வேறு சந்­தர்ப்­பங்­களில் மேற்­கு­றிப்­பிட்ட இடங்­களின் பாது­காப்பை உறுதி செய்­வ­தற்­காக மேற்­கொள்­ளப்­பட்ட சாதா­ரண குறிப்­பா­ணைகள் மற்றும் பணிப்­பு­ரை­களை கொண்ட கடி­தங்­க­ளையும் சுற்றுநிரு­பங்­க­ளையும் மேற்கோள்­காட்டி அண்­மையில் பயங்­க­ர­வாத அச்­சு­றுத்தல் காணப்­ப­டு­வ­தா­கவும் அந்த ஆவ­ணங்­களை முறைகே­டாகக் கையாண்டு சில அரச நிறு­வ­னங்­க­ளையும் பொது­மக்­க­ளையும் அச்­சு­றுத்தும் வகை­யி­லான கடி­தங்கள் வெளி­யி­டப்­பட்டு வரு­வ­தாக தகவல் கிடைக்­கப்­பெற்­றுள்­ளது.

தற்­போது நாட்­டில் எந்­த­வித பயங்­க­ர­வாத அச்­சு­றுத்­தலும் காணப்­ப­ட­வில்லை என்­பதை  பாது­காப்பு துறை­யினர் உறு­திப்­ப­டுத்­தி­யுள்­ள­துடன் இந்த போலி­யான திரிபு­ப­டுத்­தப்­பட்ட விட­யங்கள் தொடர்பில் தேவை­யற்ற பீதி­யினை ஏற்­ப­டுத்­திக்­கொள்ள வேண்டாம் என்­பதை அறி­யத்­த­ரு­கின்றேன்.  அரச நிறு­வ­னங்கள், தேசிய முக்­கி­யத்­துவம் வாய்ந்த இடங்கள் மற்றும் பொது­மக்­களின் பாது­காப்­பினை உறுதி செய்­வ­தற்­கான அதி­க­பட்ச நட­வ­டிக்­கை­களை பாது­காப்புத் துறை­யினர் மேற்­கொண்­டுள்­ளனர்.  இதனால் அவ­சர அல்­லது அண்மையில் பயங்கரவாத அச்சுறுத்தல் தோற்றுவிக்கப்பட்டுள்ளதாக முன்னெடுக்கப்படும் போலிப் பிரசாரங்களுக்கு  ஏமாற்றமடைய வேண்டாம் என்றும் அவர் வெளியிட்டுள்ள அறிவித்தலில் கூறியுள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27